கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!

0
74
Army soldier commits suicide in Kanyakumari district! The reason why the police investigation!
Army soldier commits suicide in Kanyakumari district! The reason why the police investigation!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம்  அருகே உள்ள சேக்கல் திருப்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது  மகன் ரஞ்சித் (21). இவர்  கடந்த ஆண்டு மே மாதம் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். தொடர்ந்து பெங்களூரில் உள்ள ராணுவ ரெஜிமண்ட்டில் பயிற்சி எடுத்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ரஞ்சித்திற்கு பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து எந்த இடத்தில் பணி செய்ய வேண்டும் என்பதற்கான வேலை உத்தரவு வராததால் ரஞ்சித் பெங்களூரிலேயே தங்கி வசித்து வந்தார்.

மேலும் பெங்களூர் ரெஜிமண்ட்டில் இருந்து குலசேகரத்தில் உள்ள ரஞ்சித்தின் பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில்  உங்கள் மகன் ரஞ்சித் தங்கி இருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறினார்கள். ரவி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக பெங்களூருக்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும் ராணுவ  பயிற்சி காலம்  முடித்து ராணுவ வீரர் தற்கொலை செய்த சம்பவம் குணசேகரம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து போலீசாரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரஞ்சித் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

author avatar
Parthipan K