அசால்ட்டா வந்து சுட்டுட்டு ஓடிப்போன சிறுவன்!! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

0
87
Asalta came and shot the boy who ran away!! Shocking CCTV footage!!
Asalta came and shot the boy who ran away!! Shocking CCTV footage!!

அசால்ட்டா வந்து சுட்டுட்டு ஓடிப்போன சிறுவன்!! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

நேற்று டெல்லியிலுள்ள  ஜஹாங்கிர்புரியில் ஒரு நபரின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் அந்த நபர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்பட்டதை ஜஹாங்கிர்புரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணையில் ஏழு மாதங்களுக்கு முன்பு அந்த நபர் சிறுவன் ஒருவனின் தந்தையை தாக்கியதாகவும் அதனால் அச்சிறுவர்கள்  பழிவாங்க வந்ததாகவும் குற்றம் கூறியுள்ளார்.

அந்த நபர் சாலையில் களைப்பாக உள்ளது என்று சிறிது நேரம் உட்கார்ந்து செல்வதற்காக அமர்ந்து இருந்தார்.அந்நேரத்தில்  சாலை வழியாக பல நபர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மூன்று சிறுவர்களில் ஒருவன் அந்த நபரை திடீரென துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடி விட்டான்.

இதைத்தொடர்ந்து அருகில் உள்ள குழந்தைகள் பார்ந்து  அதிர்ச்சி அடைந்து பதற்றத்தில் உறைந்து நின்றனர்.இச்சம்பவம் அருகிலுள்ள கடையில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளதால் அதில் பதிவாகியுள்ளது. மேலும் இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பதிவாகி மிக வேகமாக பரவி வருகிறது.

விளையாடிக் கொண்டிருந்த  சிற்றார்கள் திடீரென்று துப்பாக்கியை எடுத்து தாக்குதல் நடத்தியதில் அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K