அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமணம் முடிந்தது!! ரசிகர்கள் வாழ்த்து!!

0
32
#image_title

அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமணம் முடிந்தது!! ரசிகர்கள் வாழ்த்து!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன்.இவர் சூது கவ்வும்,ஓ மை கடவுளே,நித்தம் ஒரு வானம்,போர் தொழில் உட்பட பலவேறு படங்களில் நடித்துள்ளார்.இவரின் கதை தேர்வு சிறப்பாக இருப்பதால் இவர் நடிக்கும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக இருந்த அருண்பாண்டியனின் அவர்களின் மகளும்,நடிகையுமான கீர்த்தி பாண்டியனும்,அசோக் செல்வனும் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.கீர்த்தி பாண்டியன் அவர்கள் தும்பா,அன்பிற்கினியாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கீர்த்தி பாண்டியன்,அசோக் செல்வன் காதலுக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.இந்நிலையில் செப்டம்பர் 13 ஆன இன்று திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு என பலர் கலந்து கொண்டு புதுமண தம்பதியை வாழ்த்தினர்.இதனை தொடர்ந்து கீர்த்தி பாண்டியன்,அசோக் செல்வன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட இருக்கின்றது.கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வன் திருமணம் முடிந்த நிலையில் அவர்களது ரசிகர்கள் தற்பொழுது இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.