ATM Alert: மே 1 முதல் கூடுதல் கட்டணம் வசூல்!! அதிர்ச்சியில் மக்கள்!!

Photo of author

By Gayathri

ATM Alert: மே 1 முதல் கூடுதல் கட்டணம் வசூல்!! அதிர்ச்சியில் மக்கள்!!

Gayathri

ATM Alert: Additional charges from May 1st!! People in shock!!

பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலம் செய்யப்பட்டு வந்தாலும் பலர் இன்றளவும் தங்களுடைய ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தியே பணத்தினை வித்ட்ரா செய்து பயன்படுத்தி வருகின்றனர். ஏடிஎம் கார்டு பயன்படுத்தக்கூடிய பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மே 1 ஆம் தேதி முதல் புதிய விதிகளின் அடிப்படையில் கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது.

சொந்த வங்கி இருக்கக்கூடிய இடங்களுக்கான ஏடிஎம் சேவை :-

✓ மெட்ரோ நகரத்தில் 1 மாதத்திற்கு 5 முறை இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.

✓ மெட்ரோ அல்லாத நகரங்களில் 1 மாதத்திற்கு 5 முறை இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.

✓ 21 ரூபாயாக வசூலிக்கப்படும் கூடுதல் பரிவர்த்தனை மே ஒன்றாம் தேதிக்கு பிறகு 4 ரூபாய் சேர்த்து 25 ரூபாயாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ மெட்ரோ அல்லாத நகரத்தில் 21 ரூபாய் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் 2 ரூபாய் சேர்த்து 23 ரூபாயாக வசூலிக்கப்படும் விட தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற வங்கி ஏடிஎம் சேவைகளை பயன்படுத்தும் பொழுது :-

✓ மெட்ரோ நகரங்களில் 1 மாதத்திற்கு 3 இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.

✓ மெட்ரோ அல்லாத நகரங்களில் 1 மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.

✓ இதுவரை 21 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணம் மே ஒன்றாம் தேதிக்கு பிறகு 4 ரூபாய் சேர்த்து 25 ரூபாயாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ மெட்ரோ அல்லாத நகரங்களில் 21 ரூபாயிலிருந்து 23 ரூபாய் ஆக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில ஏடிஎம் பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் :-

✓ நிதி அல்லாத ஏடிஎம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பொழுது இதுவரை எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ஆனால் மே 1 ஆம் தேதிக்கு பின்பு 5 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

✓ சர்வதேச ஏடிஎம் சேவையைப் பெறும் பொழுது 125 முதல் 150 ரூபாய் வரை பெறப்பட்டு வந்த கட்டணம் மே 1 முதல் 200 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ பயணருடைய வங்கி கணக்கில் பணம் இல்லாத பொழுது ஏடிஎம் சேவை பயன்படுத்தினால் 20 ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்த நிலையில் இனி 25 ரூபாய் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.