குரூப் 3தேர்வு எழுதும் தேர்வர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் ஹால் டிக்கெட்!

0
107
Attention Candidates Writing Group 3 Exam! Hall ticket released today!
Attention Candidates Writing Group 3 Exam! Hall ticket released today!

குரூப் 3தேர்வு எழுதும் தேர்வர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் ஹால் டிக்கெட்!

டிஎன்பிஎஸ்சி கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் போன்ற பணியிடங்களுக்கு குரூப் 3 ஏ என்ற தேர்வு நடத்தப்படுகின்றது.மேலும் தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 3ஏ பணிகளுக்கான தேர்வு ஜனவரி 28 ஆம் தேதி நடத்தப்படும்.இந்த தேர்வுகள் நடப்பதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் முன்னதாகவே அறிவித்தது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களின் தேர்வு மையங்களிலும் தேர்வானது நடத்தப்பட முடிவு செய்யப்பட்டது.அதில் அரியலூர், செங்கல்பட்டு,விருதுநகர்,உள்ளிட்ட 38 மாவட்டங்களில் மூன்று மணி நேரம் இந்த தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் பல்வேறு நிர்வாக காரணங்களால் தற்போது 15 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் மட்டுமே இந்த தேர்வானது நடைபெறும்.

அந்த வகையில் தமிழ்காத்தில் சென்னை, மதுரை,கடலூர்,காஞ்சிபுரம்,நாகர்கோவில்,புதுக்கோட்டை,திருநெல்வேலி,சேலம் உள்ளிட்ட 15 தேர்வு மையங்கள் மட்டும் இறுதியாக முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் குரூப் 3தேர்வு எழுதும் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpsc.gov.in ,www.tnpscexams என்பதில் சென்று தங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் இன்று ஹால் டிக்கெட் வெளியிடப்படுகின்றது.தேர்வர்கள் https://tnpsc.gov.in என்ற இணையதளத்திலும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

author avatar
Parthipan K