மாணவர்களின் கவனத்திற்கு! இந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

0
91
Attention students! Today is the last day to apply for these colleges!
Attention students! Today is the last day to apply for these colleges!

மாணவர்களின் கவனத்திற்கு! இந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

தமிழகத்தில் மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சுமார் ஒரு லட்ச இடங்கள் வரை இருக்கின்றது இதற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது அதன்படி நடப்பாண்டில் மாநாட்டை காண விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர் அதில் 2,94 லட்சம் பெயர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர்.

மேலும் முதல் முறையாக கலை அறிவியல் மற்றும் அறிவியல் செயற்கை விண்ணப்ப பதிவு 4 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பு இடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை பதிவு கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 2 லட்சத்து 7,361 பேர் விண்ணப்பத்துடன் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் அவர்களில் 1,63 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர்.

மேலும் 1,49 லட்சம் பேர் அசல் சான்றிதழ்களையும் பதிவேற்றியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பொறியியல் கலை அறிவியல் சேர்க்கை விண்ணப்பதிவுக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ளது.  அதனால் விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதி வாய்ந்தோர் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் அந்நேரம் பொறியியல் படிப்புக்கு மட்டும் விண்ணப்ப கட்டணம் சான்றிதழ் பதவி ஏற்றம் செய்ய ஜூலை 29ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது எனவும் உயர்கல்வித்துறை கூறியுள்ளது.மேலும் நாட்டா தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை பிஆர் படிப்புகளில் சேர தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K