திருமாவளவன் படத்தை போஸ்டர்களில் தவிர்க்கும் திமுக வேட்பாளர்கள்! நவீன தீண்டாமை இதுதானா?

திருமாவளவன் படத்தை போஸ்டர்களில் தவிர்க்கும் திமுக வேட்பாளர்கள்! நவீன தீண்டாமை இதுதானா?

திருமாவளவன் படத்தை போஸ்டர்களில் தவிர்க்கும் திமுக வேட்பாளர்கள்! நவீன தீண்டாமை இதுதானா? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் திருமாவளவன் பிரச்சாரம் செய்ய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தடை போட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின,. இதனை நவீன தீண்டாமை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அடிக்கடி தேர்தல் பிரச்சாரத்தின்போது குறிப்பிட்டு பேசுவார்,. இதனை உறுதி செய்யும் வகையில் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் மட்டுமே திருமாவளவன் பிரச்சாரம் செய்தார்,. மற்ற தொகுதிகளில் … Read more

சிவகார்த்திகேயனின் டிசம்பர் ஹாட்ரிக் !!!

சிவகார்த்திகேயனின் டிசம்பர் ஹாட்ரிக் !!!

தொடர்ந்து மூன்று வருடங்கள் டிசமபர் மாத இறுதியில் தனது  படத்தை வெளியிட்டு, அதையும் வெற்றிப்படமாக்கி ஹாட்ரிக் அடித்துள்ளார் சிவ கார்த்திகேயன். ஒரு வெற்றி படத்திற்கான அனைத்து அம்சங்களும் சரிவர அமைந்தாலும் , அந்த படம் மிக பெரிய வெற்றிப்படமாவது அந்த படம் எந்த சூழ்நிலையில் வெளியாகிறது என்பதை பொறுத்துதான். இதை சரியாக புரிந்ததுகொண்டு வருட இறுதியான கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட விடுமுறையை குறிவைத்து   தனது படங்களை வெளியிட்டு தொடர் வெற்றிகளையும் பெற்றுள்ளார் சிவா கார்த்திகேயன். கடந்த 2017’ம் … Read more

“ரூல்ஸ் அனைவருக்கும் ஒன்றுதான்” – ட்ராவிட் அதிரடி.

“ரூல்ஸ் அனைவருக்கும் ஒன்றுதான்” - ட்ராவிட் அதிரடி.

மேற்கிந்திய தீவுகளில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த ஜஸ்பிரிட் பும்ரா, சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வந்தார். சமீபத்தில் அவரது உடல்நலம் குணமடைந்தைத் தொடர்ந்து பும்ரா, தனது உடற்தகுதித் தேர்வு மற்றும் பயிற்சிக்கு தனியார் மருத்துவர்களையும், பயிற்சியாளர்களையும் நியமித்தார். பிசிசிஐ விதிப்படி இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தங்களின் உடற்தகுதித் தேர்வைப் பெங்களூரிலுள்ள ட்ராவிட் தலைவராக இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று, உடற்தகுதித் தேர்வு பெற்றபின்தான் அணிக்குள் வர முடியும். இந்நிலையில் கடந்த … Read more

பிரதமர் மோடி உயிருக்கு ஆபத்து – உளவுத்துறை.

பிரதமர் மோடி உயிருக்கு ஆபத்து – உளவுத்துறை.

இந்திய தலைநகர் டில்லியில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பிரச்சாரத்துக்கு அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. பா.ஜ.க வின் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார். இதற்காக டில்லி ராம் லீலா மைதானத்தில் பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் டில்லியில் அங்கீகாரம் இல்லாத குடிசை பகுதிகளை முறைப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பிரதமர் விளக்கவுள்ளார். இந்நிலையில் பிரதமர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், பாகிஸ்தானை … Read more

குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் கிடையாது – பிரகாஷ் ஜாவடேகர்.

குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் கிடையாது - பிரகாஷ் ஜாவடேகர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து மேற்கு வங்கத்தில் பிரம்மாண்ட கூட்டத்தை திரட்டி முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தினார்.  பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் “குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை ஐ.நா கண்காணித்து, தானே முன்வந்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ” என கூறினார். இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை … Read more

இந்தியாவின் “டாப் 100 பிரபலங்கள்” – போர்ப்ஸ் அறிவிப்பு.

இந்தியாவின் "டாப் 100 பிரபலங்கள்" – போர்ப்ஸ் அறிவிப்பு.

அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிக்கை 2019ம் ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய கேப்டன் “கிங்” கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார்.  2019ம் ஆண்டு இவரின் வருமானம் 253 கோடி ருபாய். இரண்டாம் இடத்தில் பாலிவுட் நடிகரும், ரஜினியுடன் 2.O படத்தில் வில்லனாக நடித்தவருமான அக்ஷய் குமார் இடம் பிடித்துள்ளார். கடந்த 2016’ம் ஆண்டு முதல் இந்த பட்டியலில் முதல் இடம் வகித்துவந்த சல்மான் கான் இந்த ஆண்டு மூன்றாம் … Read more

ரேஷன் கடைகளில் மீன், முட்டை, ஆட்டிறைச்சி – “நிடி ஆயோக் ” பரிந்துரை.

ரேஷன் கடைகளில் மீன், முட்டை, ஆட்டிறைச்சி - "நிடி ஆயோக் " பரிந்துரை.

நாடு முழுவதும், எந்த ரேஷன் கடையிலும், உணவு பொருட்களை வாங்கும் வகையில்,”ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ” திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக ஆறு மாநிலங்களில் மட்டும் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பின் இந்த வடிவம் உருவாக்கபட்டுள்ளது, ரேஷன் … Read more

மத்திய அரசு நிர்பந்திக்கவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மத்திய அரசு நிர்பந்திக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த அந்நாட்டைச் சோ்ந்த மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டில்லியில் செய்தியர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி “இந்தியர்களை எந்த வகையிலும் இந்த சட்டம் பாதிக்காது என் பார்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா … Read more

திமுகவை கதறவைக்க அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்! டெல்லியில் ஆப்ரேஷன் தயாராகிறது

திமுகவை கதறவைக்க அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்! டெல்லியில் ஆப்ரேஷன் தயாராகிறது

திமுகவை கதறவைக்க அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்! டெல்லியில் ஆப்ரேஷன் தயாராகிறது இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக வேண்டுமென்றே சில கட்சிகள் இஸ்லாமிய சமுதாயத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உண்மைத்தன்மையை மக்களிடம் எடுத்து சொல்லாமல், சிந்திக்க கூட விடாமல் அப்பாவி மாணவர்களையும் இளைஞர்களையும் போராட்ட களத்தில் இறக்கி விட்டு அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டத்தை நீக்கத்திற்கு எதிராக மிகப்பெரிய … Read more

“சூழ்” நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

“சூழ்” நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கி வருகிறது. இந்தவகையில் 2019’ம் ஆண்டிற்கான விருது பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 23 மொழிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாவல்கள் பிரிவில் தமிழ், தெலுங்கு, அசாமி, மணிப்புரி இந்த நான்கு மொழிகளுக்கு மட்டுமே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக எழுத்தாளர் சோ.தர்மன் எழுதிய “சூழ்” நாவலுக்கு விருது கிடைத்துள்ளது. கரிசல் மண்ணின் விவசாயம் மற்றும் கால நிலைகள்,  விவசாயிகளின் அனுபவங்கள் ஆகியவற்றை கிராம நடையில் வெளிப்படுத்தியிருந்தது … Read more