இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் இன்று கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 43,082 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,09,788 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 492 பேர் கொரோனா தொற்று … Read more

6.13 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு: 15 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பு!

6.13 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு: 15 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பு!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 61,308,142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 42,395,359 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 17,474,948 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 105,010 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,437,835 … Read more

தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது..!!

தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது..!!

கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரை டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படாது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையானது கிட்டத்தட்ட 8 மாதங்களாக நீடித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையே … Read more

மாஸ்டர் படத்தின் புதிய சாதனை.. குத்தாட்டம் போடும் ரசிகர்கள்!

மாஸ்டர் படத்தின் புதிய சாதனை.. குத்தாட்டம் போடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும் தீபாவளிக்கு இந்த படத்தின் டீஸர் மட்டும் வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது. ஏற்கனவே அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி பல சாதனைகளை புரிந்தன. இவ்வாறிருக்க வாத்தி கம்மிங் பாடல் 9 கோடி பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை புரிந்துள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. … Read more

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுசித்ரா இதனால்தான் வெளியேறினாரா? வெளியான தகவலால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுசித்ரா இதனால்தான் வெளியேறினாரா? வெளியான தகவலால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மேலும் சுசித்ரா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் ஓட்டுகளால் தான் வெளியேற்றப்பட்டார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை கதை வேறு ஒன்றாம். அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சுசித்ரா தனிமைப்படுத்தப்பட்டு இருந்தபோதே அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து யாரோ சிலர் தன்னை கொலை செய்ய முயல்வதாகக் கூறி நள்ளிரவில் பரபரப்பை கூட்டினார். … Read more

அதிகரித்து வரும் பாதிப்பு: இன்றைய நிலவரம்!

அதிகரித்து வரும் பாதிப்பு: இன்றைய நிலவரம்!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் இன்று கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 44,376 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92,22,217 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 481 பேர் கொரோனா தொற்று … Read more

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் அகமது படேல் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய எம்.பி.யுமான அகமது படேல் (வயது 71) தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடந்த அக். 1ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவா் குா்கானில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் … Read more

6.01 கோடியை கடந்த பாதிப்பு: 15 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு!

6.01 கோடியை கடந்த பாதிப்பு: 15 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 60,105,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 41,553,773 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 17,137,099 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 103,506 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,414,868 … Read more

வெள்ள அபாய எச்சரிக்கை! மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் ஏரி!

வெள்ள அபாய எச்சரிக்கை! மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் ஏரி!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்ட உள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 22 அடியாக அதிகரித்துள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக … Read more

அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நோயின் தாக்கம் இன்னும் குறையவில்லை. வெளிநாடுகளிலும் இந்த கொரோனா நோய் அனைத்து மக்களையும் அச்சுறுத்தி வருகிறது.  அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அவரின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு 42 வயது ஆகிறது.  சென்ற வாரத்தில் இவருக்கு கொரோனா இருப்பது  மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் டொனால்டு டிரம்ப் ஜூனியருக்கு எந்த … Read more