கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் குவிப்பு – தலைமைத் தளபதி தகவல்!

கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் குவிப்பு - தலைமைத் தளபதி தகவல்!

லடாக் எல்லையில் தொடர்ந்து நீடித்து வரும் பரபரப்பான சூழல். தற்போது கிழக்கு லடாக் பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் கடுங்குளிரும், உறைய வைக்கும் அளவிற்கு பனியும் சூழ்ந்துள்ளது. ராணுவ வீரர்களை எந்த நேரமும் எச்சரிக்கையாக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. அதுமட்டுமன்றி முப்படைகளையும் போர்க்கால அடிப்படையில் அனைத்திற்கும் தயாராக இருக்கும்படி தலைமைத் தளபதி பிபின் ராவத் அறிவுறுத்தி உள்ளார். மேலும் எல்லைப் பகுதிகளில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஊத்வேகம் அளிக்கும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை … Read more

கொரோனா தடுப்பூசி இலவசம் – மத்திய அமைச்சர் தகவல்!

கொரோனா தடுப்பூசி இலவசம் - மத்திய அமைச்சர் தகவல்!

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த நோயால் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றுவதற்கு தனிமைப்படுத்துதல், முறையான உணவு பழக்கம் மற்றும் தூய்மை போன்ற முக்கிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டது.  அதன்பின் இந்த நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அதிலும் பல கட்ட சோதனைகளை கடந்து தற்போது தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட உள்ளது. சமீபத்தில் பீகாரில் தேர்தலுக்காக சில முக்கிய திட்டங்கள் குறித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.  அதில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி இலவசமாக அனைவருக்கும் போடப்படும் என்று … Read more

கோடக் மஹிந்திரா வங்கி தலைவரின் திட்டம் – திடுக்கிடும் தகவல்கள்!

கோடக் மஹிந்திரா வங்கி தலைவரின் திட்டம் - திடுக்கிடும் தகவல்கள்!

இந்தஸ்இந்த் என்ற வங்கியினுடைய சந்தை மதிப்பு சரிந்துள்ளது. இந்த வங்கியின் தற்போதைய சந்தை மதிப்பில் 60 சதவிகிதம் சரிந்தது. ஏனெனில் சொத்து மதிப்பு இழப்பு என்பதாலும், டெபாசிட் இழப்பாலும், இந்தஸ்இந்த் வங்கிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தஸ்இந்த் என்ற இந்த வங்கியின் பங்குகளை வாங்க போவதாக கோடக் மஹிந்திரா வங்கி தலைவர், உதய் மஹிந்திரா திட்டமிடுகிறார் என்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவ்வாறு வாங்குவதால் இந்தஸ்இந்த் வங்கியை வாங்குவதால், கோடக் மஹிந்திரா வங்கியின் மதிப்பு 83 … Read more

ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மருத்துவத்துறை படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், தமிழகத்திலுள்ள இதர  பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதிமுகவுக்கு ஆதரவாக திமுக, பாமக போன்ற இதர கட்சிகளும் தங்களின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும், தமிழக அரசுக்கு அளித்தது.  அதைத்தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட வழக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் … Read more

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பலி!

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பலி!

இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 45,149 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,09,959 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 480 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,19,014 ஆக உயர்ந்துள்ளது. … Read more

ஆதார் அட்டையில் மத்திய அரசு செய்த செயல் !! அதிர்ச்சியில் தமிழக மக்கள் !!

ஆதார் அட்டையில் மத்திய அரசு செய்த செயல் !! அதிர்ச்சியில் தமிழக மக்கள் !!

மத்திய அரசு கொண்டுவந்த பி.வி.சி புதிய ஆதார் அட்டையில் “எனது ஆதார் எனது அடையாளம்” என்ற தமிழ் வாசகம் நீக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்திய குடிமக்கள் அனைவரும் தனது அடையாளத்திற்காக ஆதார் அட்டையை ஒரு அடையாளமாக கொண்டு யூ.ஐ.டி.ஏ.ஐ (UIDAI) கார்டுகளை வழங்கி வருகின்றது. அதில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பிவிசி அட்டையை அறிமுகப்படுத்தி அச்சிடப்பட்டு வருகின்றது. பிவிசி பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய ஆதார் அட்டை மூலம் எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நமது … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனம்… ஆனால் ஒரு கண்டிஷன்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனம்... ஆனால் ஒரு கண்டிஷன்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து கடந்த ஜூன் 11ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து கோவில் … Read more

திமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

திமுக போராட்டம் தொடரும் - ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில், தங்களது முழு ஆதரவை அதிமுகவுக்கு அளிப்பதாக திமுக கட்சித் தலைவர்  ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார்.  அதன்பின் அதிமுக மத்திய அரசோடு இணைந்து இரட்டை வேடமிட்டு நடித்து வருவதாக குற்றம்சாட்டினார். மத்திய அரசிடம் உறுதியாக பேசுவதற்கு அதிமுக அரசு பயப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.  அதைத்தொடர்ந்து தற்போது அரசு மாணவனுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர வலியுறுத்தி திமுக கட்சி சார்பில் … Read more

ஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்!

ஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான  உள்ஒதுக்கீடு, வழங்கும் படி அனைத்து தரப்பிலும் கோரிக்கை எழுப்பப் பட்டிருந்தது. அதையடுத்து அனைத்து கட்சி சார்பிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் கவுன்சிலிங் தொடங்க இருக்கிறது. நடப்பாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றமும் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடதக்கது.   ஆனால் ஆளுநர் இதுவரை … Read more

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..?

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..?

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,869 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் 10,924 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,019 பேர் கொரோனா தொற்றில் இருந்து … Read more