நிச்சயமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்! ஹச்.ராஜா எச்சரிக்கை!

நிச்சயமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்! ஹச்.ராஜா எச்சரிக்கை!

தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது ஓபிஎஸ் தலைமையில் கட்சி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி என்பதே அதிமுகவின் கொள்கையாக இருந்து வருகிறது .அவர்களுடைய தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் அதிமுகவுக்கு தான் இரட்டை இலை சின்னம் என்ற தேர்தல் ஆணையமே தெரிவித்திருக்கிறது. அதன் காரணமாக அதிமுகவின் பிரச்சினை என்பது முன்பே முடிவுக்கு வந்து விட்டது ஆனாலும் டிடிவி தினகரன் அதிமுகவை மீட்போம் என்று சொல்லும் போதெல்லாம் … Read more

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர்! நாளைய தினம் பொறுப்பேற்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர்! நாளைய தினம் பொறுப்பேற்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரி மாநிலத்தின் தொழில் நிலை ஆளுநராக நாளைய தினம் தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்க இருக்கிறார். புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தொடர்ந்து தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனையடுத்து ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் விதமாக பாஜகவின் தூண்டுதலின் பெயரில் தான் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று அங்கே குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரம் முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு தேவையான பெரும்பான்மை 16 இடங்களில் 14 இடங்கள் … Read more

வலைதளத்தில் கேள்வி எழுப்பிய அஷ்வினின் மனைவி!

வலைதளத்தில் கேள்வி எழுப்பிய அஷ்வினின் மனைவி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் மனைவி மாற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டு யார் செய்த வேலை இது என்று அவருடைய மனைவி பிரீத்தி அஸ்வின் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்திய நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. … Read more

அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்! முக்கிய கட்சியைச் சாடிய எல். முருகன்!

அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்! முக்கிய கட்சியைச் சாடிய எல். முருகன்!

விருதுநகரில் நடந்த பாதுகாப்பு கமிட்டி விழாவில் நடந்த கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்றார். அந்த நிகழ்வின் போது உரையாற்றிய அவர் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் திட்டங்களால் தமிழர்கள்தான் அதிக பயன் அடைந்திருக்கிறார்கள் 50 வருடங்களாக தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கையை வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அந்த கோரிக்கையை பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றார். 2012ஆம் வருடம் மதுரையில் நடந்த மாநாட்டில் அந்த சமூகத்தை பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல 2015 ஆம் … Read more

முன்னாள் முதல்வர் ஜெ பிறந்த நாள்! 73 வகை சீர் வரிசையுடன் நடைபெற்ற பிரம்மாண்ட திருமணங்கள்!

முன்னாள் முதல்வர் ஜெ பிறந்த நாள்! 73 வகை சீர் வரிசையுடன் நடைபெற்ற பிரம்மாண்ட திருமணங்கள்!

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் செட்டிபாளையம், தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை ஒட்டி 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்பாக 73 வகையான சீர் வரிசைகளுடன் திருமணம் நடந்தது. அந்த சமயத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கட்சி அதிமுக என்பதற்கு இந்த திருமண மேடை ஒரு மிகப் பெரிய சாட்சி என்று தெரிவித்திருக்கிறார். வருடம் தோறும் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று திருமணங்கள் நடத்தப்படுகின்றன அதிமுகவில் மட்டும் தான் இது போன்ற … Read more

பெட்ரோல் விலை உயர்வு! முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

பெட்ரோல் விலை உயர்வு! முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் தான் இருந்து வருகின்றது பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாயை கடந்து விட்டது. அதேபோல டீசல் விலையும் அதிகமாகிக்கொண்டே போகிறது. ஒரு சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை நெருங்கிக் … Read more

வெளியானது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை!

வெளியானது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை!

தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பால் முடங்கிப்போன பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் சென்ற மாதம் 19ஆம் தேதி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதனை அடுத்து சென்ற எட்டாம் தேதி ஒன்பதாம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு வகுப்புகள் ஆரம்பம் ஆயின. மாணவர்களுடைய நலனை மனதில் வைத்து 40 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணை தற்சமயம் வெளியாகி இருக்கிறது. இந்த அட்டவணையின்படி மே மாதம் மூன்றாம் தேதி பொதுத்தேர்வு … Read more

எதிர்க்கட்சிகளை சமாளிக்க ஆர் கே நகரில் அதிரடி வியூகம் வகுத்த அதிமுக தலைமை!

எதிர்க்கட்சிகளை சமாளிக்க ஆர் கே நகரில் அதிரடி வியூகம் வகுத்த அதிமுக தலைமை!

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்கள் யார் யார் என்ற மாதிரி பட்டியல் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. அதில் பாரதிய ஜனதா கட்சிக்கு இருபது பாட்டாளி மக்கள் கட்சிக்கு 21 தொகுதிகளில் தேமுதிகவிற்கு 14 தொகுதிகளிலும் தமாகவிற்கு ஐந்து தொகுதிகளும் மற்ற கட்சிகளுக்கு மூன்று தொகுதிகளும் ஒதுக்கப்பட இருக்கிறது என்று தெரியவருகிறது மீதம் இருக்கின்ற 171 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக கலந்து கொள்ள இருப்பதாக … Read more

மத்திய அரசின் செய்கையால் நெகிழ்ந்து போன குஷ்பூ!

மத்திய அரசின் செய்கையால் நெகிழ்ந்து போன குஷ்பூ!

புதுச்சேரியின் ஆளுனர் பொறுப்பிலிருந்து நேற்றைய தினம் கிரண்பேடி விடுவிக்கப்பட்டார். ஆரம்பத்திலிருந்தே புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கும், கிரண்பேடி அவர்களுக்கும் மோதல் வெடித்து வந்தது இந்த நிலையில், தேர்தல் விரைவில் வரவிருக்கும் சமயத்தில் கிரண்பேடி அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார். புதுச்சேரி காங்கிரஸ் சார்பாக கிரண் பேடிக்கு எதிராக அவர் மக்கள் நலத்திட்டங்களை மக்களை சென்று அடையாமல் தடுக்கின்றார் என்று பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ஆனாலும் கிரண்பேடியோ நான் செய்கின்ற செயல்கள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு … Read more

அமமுக நிர்வாகி கொலை! திமுக பிரமுகர் தொடர்பா!

அமமுக நிர்வாகி கொலை! திமுக பிரமுகர் தொடர்பா!

கௌதம் பேட்டையை சேர்ந்த வானவராயன் என்பவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்து வருகின்றார். வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் வானவராயன் பணம் வசூல் செய்யப் போனபோது ஒன்பது பேர் கொண்ட கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வானவராயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் … Read more