ரஜினியின் அரசியல் தொடர்பான முடிவை கேட்டு கதறிய லாரன்ஸ்!

ரஜினியின் அரசியல் தொடர்பான முடிவை கேட்டு கதறிய லாரன்ஸ்!

நடிகர் ரஜினிகாந்தை தன்னுடைய குருவாக ஏற்று நடந்து வருபவர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமென்று விரும்பியவர்கள் முக்கியமான ஒருவர்.ரஜினி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த உடன் லாரன்ஸ் உடைய மனநிலை எப்படி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஜனவரி மாதம் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்த ரஜினிகாந்த், அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கே படப்பிடிப்பு தளத்தில் அவருடன் இருந்த நான்கு நபர்களுக்கு கொரோனா … Read more

முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்ந்து அதிமுகவை சீண்டும் பாஜக! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்ந்து அதிமுகவை சீண்டும் பாஜக! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

சட்டசபை தேர்தலுக்கு பிறகுதான் பாஜக கூட்டணி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யப்படும் என்று தமிழக பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்திருக்கின்றார். இந்த விவகாரமானது அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலையில் தேர்தலை சந்திப்பதற்காக அதற்கான ஆயத்தப் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றனர். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை … Read more

தமிழக அரசு அறிவித்திருக்கும் பொங்கல் பரிசு பொதுமக்களை வந்து சேருமா? ஆப்பு வைக்க பார்க்கும் திமுக!

தமிழக அரசு அறிவித்திருக்கும் பொங்கல் பரிசு பொதுமக்களை வந்து சேருமா? ஆப்பு வைக்க பார்க்கும் திமுக!

பொங்கல் பரிசு தொகையாக தமிழக அரசு அறிவித்திருக்கும் திட்டத்தை அதிமுகவினர் மூலமாக விநியோகம் செய்வதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கின்றது. எதிர்வரும் 2021 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை ஒட்டி பரிசுத் தொகையுடன் கூடிய 2500 ரூபாய் பணம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இதற்கான டோக்கன் வழங்கும் பணியானது மிகத் தீவிரமாக நடந்து வருகின்றது. ஆனாலும் பொங்கல் பரிசு தொகை நியாய … Read more

கமல்ஹாசனை வளைத்துப் போட திமுக தலைமை போட்ட அதிரடி திட்டம்!

கமல்ஹாசனை வளைத்துப் போட திமுக தலைமை போட்ட அதிரடி திட்டம்!

மக்கள் நீதி மையத்தை திமுக தன்னுடைய கூட்டணியில் இணைப்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்து இருக்கின்ற நிலையில், அடுத்ததாக தொகுதி பங்கீடு செய்வது தான் முக்கியமானது. இந்த நிலையில் வாக்கு வங்கி மற்றும் பிரச்சார பலம் கொண்ட கட்சிகளை தன் கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது திமுக. மக்கள் நீதி மையம் தேமுதிக இன்னும் பிற … Read more

விடுதலையாகும் சசிகலா வரவேற்க தயாராகும் ஆதரவாளர்கள் !பரபரப்பான தமிழகம்!

விடுதலையாகும் சசிகலா வரவேற்க தயாராகும் ஆதரவாளர்கள் !பரபரப்பான தமிழகம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா எதிர்வரும் 27ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் சிறையில் இருந்து நேரடியாக ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அங்கே சபதம் எடுத்துவிட்டு அதன் பிறகு வீட்டிற்கு போவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு நான்கு வருடங்கள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. அவர் கர்நாடகாவில் இருக்கின்ற பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றார். அவருடைய தண்டனை காலமானது முடிவடைய இருக்கும் நிலையில், அவருக்கான அபராதத் தொகையை … Read more

ரஜினியின் முடிவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர் செய்த காரியத்தால் பரபரப்பு!

ரஜினியின் முடிவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர் செய்த காரியத்தால் பரபரப்பு!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்த முடிவில் இருந்து பின்வாங்கிய நிலையில், அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் எங்களுக்கு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி கருப்பு தினம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.இந்த நிலையில், ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் தன்னுடைய கடையில் ஒட்டப்பட்டிருந்த ரஜினிகாந்தின் சுவரொட்டிகளை கிழித்து எறிந்து எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார். அந்த ரசிகர் அவரது புகைப்படங்களை கிழிப்பது தொடர்பான காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பது … Read more

அவருக்கு என்ன அனுபவம் இருக்கின்றது! உதயநிதியை சீண்டிய குஷ்பு!

அவருக்கு என்ன அனுபவம் இருக்கின்றது! உதயநிதியை சீண்டிய குஷ்பு!

திமுகவில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவருடைய தந்தை, மற்றும் தாத்தா பெயரை தெரிவித்து சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி அடைந்து விடலாம் என்று நினைத்துவிட கூடாது என்று பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூ தெரிவித்திருக்கின்றார். ஜெ. அன்பழகன் மறைவை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, சட்டசபை தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த தொகுதியின் பாஜக பொறுப்பாளராக நடிகை குஷ்பூ நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தநிலையில், அந்த தொகுதியில் உரையாற்றிய குஷ்பு அதிமுகவின் முதலமைச்சர் வேட்ப்பாளராக … Read more

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காததற்கு காரணம் இதுதானா! பாஜக போட்ட ராஜதந்திர திட்டம்!

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காததற்கு காரணம் இதுதானா! பாஜக போட்ட ராஜதந்திர திட்டம்!

ரஜினிகாந்தை வைத்து தமிழகத்தில் அரசியல் கணக்கை போட்டு அதன் மூலமாக காய் நகர்த்தி வந்த பாஜகவிற்கு திடீரென்று அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று தெரிவித்த அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் நடிகர் ரஜினிகாந்த். இதனால் இனிமேல் தமிழகத்தில் அரசியல் நிலவரத்தை பொருத்தவரையில் பாஜக என்ன செய்யப்போகிறது என்பதுதான் பலரின் யோசனையாக இருந்துவந்தது. ஆனாலும் பாஜகவின் திட்டம் வேறுமாதிரியாக இருக்கின்றது என்று தெரிவிக்கிறார்கள். ரஜினியை அரசியல் கட்சி தொடங்குவதற்கு கட்டளையிட்டதும் பாஜகதான், இப்பொழுது அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க … Read more

ரஜினியை தொடர்ந்து அரசியலுக்கு குட்பை சொன்ன முக்கிய நபர்!

ரஜினியை தொடர்ந்து அரசியலுக்கு குட்பை சொன்ன முக்கிய நபர்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்று நேற்றைய தினம் அறிவித்திருக்கின்ற நிலையில், அவரை அரசியல் கட்சி ஆரம்பிக்க வைப்பதற்காக தீவிரமாக முயற்சி செய்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் இன்று தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கின்றார். ரஜினிகாந்த் தன்னுடைய அறிக்கையில் தமிழருவிமணியன் அவர்களையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து இருக்கின்ற நிலையிலே, ரஜினிகாந்த் பெயரை குறிப்பிடாமல் இன்றைய தினம் தமிழருவி மணியன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். என்னுடைய பால்ய பருவத்தில் நான் காமராஜர் … Read more

கடன் தொல்லையால் விபரீத முடிவு!

கடன் தொல்லையால் விபரீத முடிவு!

குலையநேரி பகுதியில் வசித்து வரும் கண்ணன் சீதாலட்சுமி அழகிய தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். தச்சு வேலை செய்து வரும் கண்ணனுக்கு வருமானம் பெரிய அளவில் கிடையாது. அவர் சம்பாதித்து வரும் பணத்தை குடித்தே அழித்து விடுவார். அதோடு அக்கம் பக்கத்திலும் கடன் வாங்கியிருக்கிறார். ஆனாலும் கூட அவர் குடிப்பழக்கத்தை நிறுத்துவதாக இல்லை. இதன் காரணமாக தம்பதியர் இடையே தொடர்ச்சியாக தகராறு ஏற்பட்டு வந்தது. குடும்ப சூழ்நிலையை சமாளிப்பதற்காக சீதாலட்சுமி குவாரியில் கூலி வேலைக்கு சென்று … Read more