200 வழக்குகள் உள்ள ரவுடிக்கு பொறுப்பு வழங்கிய பாஜக!!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!!

0
33
#image_title

200 வழக்குகள் உள்ள ரவுடிக்கு பொறுப்பு வழங்கிய பாஜக!!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!!

200 வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூரியா அவர்களுக்கு மாநில அளவில் பாஜக கட்சி பதவி வழங்கி இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

தமிழ்நாட்டின் ஒன்றிய அமைச்சராக இருக்கும் எல் முருகன் அவர்கள் தமிழக பாஜக தலைவராக இருந்த பொழுது வண்டலூரில் ரெட்ஹில்ஸ் சூரியா, பூண்டு மதன், குரங்கு ஆனந்த், புளிந்தோப்பு அஞ்சலை, புதுவை விக்கி, புதுசை சோழன், சேலம் முரளி, புதுவை எழிலரசி ஆகியோர் பாஜக கட்சியில் சேர்ந்தனர்.

தற்பொழுது இவர்களின் வரிசையில் நெடுங்குன்றம் சூரியாவும் பாஜக கட்சியில் இணைந்துள்ளார். நெடுங்குன்றம் சூரியா மீது 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பாஜக கட்சியில் சேர்த்து முக்கியமான பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

பாஜக கட்சியில் சேர்ந்த நெடுங்குன்றம் சூரியா அவர்களுக்கு பாஜக கட்சி பட்டியிலன மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதவி வழங்கப்பட்டது அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நெடுங்குன்றம் சூரியா அவர்கள் “பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இவர்கள் இருவரின் செயல்பாடுகளை பார்த்து தான் நானே பாஜக கட்சியில் சேர்ந்தேன்.

என் மீது 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இந்த வழக்குகளில் சில வழக்குகள் சட்டப்படி முடிந்து விட்டது. என் மீது உள்ள மிச்ச வழக்குகளை நான் சட்டப்படி அணுகுவேன்” என்று பேட்டி அளித்தார். இவருடைய மனைவிக்கு பாஜக கட்சியின் மாவட்ட மகளிர் அணி தலைவி பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.