பாஜகவின் சமூக ஊடக குழுவினரால் ராகுல் காந்தி குறித்து போடப்பட்ட பதிவு ஒன்று காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய அனைவரையும் மிகுந்த கோபத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கர்நாடகா போலீசில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டது.
அதாவது ஏப்ரல் 22ஆம் தேதி அன்று காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கும் ராகுல் காந்தி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்து இணைத்து பதிவு ஒன்றினை கர்நாடகா பாஜக குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
அவர்கள் பகிர்ந்த ட்விட் ,
” ராகுல் காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் நாட்டில் ஏதேனும் பயங்கரமான சம்பவங்கள் பதறவைக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன “.
இந்த பதிவை பாஜகவில் ஊடக குழுவினர் போட்டவுடன் இதை பார்த்த கர்நாடகா காங்கிரஸின் சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவு தலைவர் சி எம் இதை பார்த்த கர்நாடகா காங்கிரஸின் சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவு தலைவர் சி எம் தனஞ்சயா இந்த டுவிட் பதிவினை காங்கிரஸ் அலுவலகத்தில் இருக்கும் பொழுது வாட்ஸ்அப் மூலமாக பெற்றதாகவும் பாஜக சமூக ஊடக குழுவினர் இந்த பதிவை பகிர்ந்த மற்றவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடகா போன்ற செல் புகாரளித்திருக்கிறார். அவர் அளித்த புகாரில், ” இது ராகுல் காந்தியின் நற்பயறை குலைக்கும் வகையில் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது ” என தெரிவித்திருக்கிறார்.
இது பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற பொழுது ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார் அதிலும் குறிப்பாக அவர் ரோட் ஐலேண்டில் இருக்கக்கூடிய பிரவுன் பல்கலைக்கழகத்திற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் குறித்து அவர் கேள்விப்பட்டவுடன் உள்துறை அமைச்சர் அமைச்சர் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஹோமர் அப்துல்லா மாநில காங்கிரஸ் தலைவர் தாரிக் ஆகியோருடன் பேசியதாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.