பாஜகவின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி!! அனைவருக்கும் அழைப்பு விடுத்த அண்ணாமலை!!

0
52
BJP's struggle towards the next level!! Annamalai called everyone!!
BJP's struggle towards the next level!! Annamalai called everyone!!

 பாஜகவின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி!! அனைவருக்கும் அழைப்பு விடுத்த அண்ணாமலை!!

ஊழலுக்கு எதிராக நாங்கள் நடத்தும் போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

முன்னதாக அவர் திமுக எம்பி டி.ஆர்.பாலு அளித்த அவதூறு வழக்கிற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக கட்சியினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தினார். அந்தப் பட்டியலில் திமுக எம்பி டி ஆர் பாலுவும் இடம் பெற்று இருந்தார். இதனால் டி ஆர்.பாலு அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த அவதூறு வழக்கின் காரணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜூலை 14ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியது. இதனால் பாலு அளித்த அவதூறு வழக்கின் காரணமாக அண்ணாமலை இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அவருக்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டது.

பின்னர் அவரை வழக்கின் அடுத்த விசாரணையான ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆஜராகுமாறு நீதிமன்றம் அண்ணாமலைக்கு உத்தரவிட்டது. வழக்கு முடிந்து வெளியே வந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,

ஊழலுக்கு எதிரான பாரதிய ஜனதா கட்சியின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும். தமிழகத்தில் முதல் தலைமுறைக்கும் மூன்றாம் தலைமுறைக்கும் தற்போது யுத்தம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. திமுக பைல்ஸ் பாகம் -2 வில் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிக அளவில் உள்ளனர்.