சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 35

திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. ஆட்டம் காணும் கொங்கு மண்டலம்!!

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், மாநில கட்சிகளனைத்தும் கூட்டணி வியூகங்களிலும், தொகுதி பங்கீட்டிலும் மும்முரமாக உள்ளன. அந்த வகையில் அதிமுகவும் இந்த வேலைப்பாடுகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இபிஎஸ்க்கு உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதற்க்கே அதிக நேரம் தேவைப்படுகிறது. இபிஎஸ் அதிமுகவின் தலைவராக பதவி ஏற்றதிலிருந்தே முக்கிய தலைவர்களின் பிரிவும், இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது தான் செங்கோட்டையனின் நீக்கம்.

செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின், அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என அரசியல் களமே உன்னிப்பாக கவனித்து வருகிறது. செங்கோட்டையனின் நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அது இபிஎஸ்க்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் தான் அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது செங்கோட்டையன் திமுகவில் இணைய போவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இவருடன் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் இணைய உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். ஜெயக்குமாருக்கு அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் துளியும் விருப்பமில்லை.

மேலும் செங்கோட்டையன், அதிமுகவிலிருக்கும் மூத்த அமைச்சர்கள் சிலர் இன்னும் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள் என்று மறைமுகமாக கூறியிருந்தார். அந்த மூத்த அமைச்சர் ஜெயக்குமராக இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். இதன் காரணமாக, இவர்கள் இருவரும், ஒன்றாக இணைந்து இபிஎஸ்யை வீழ்த்தும் நோக்கில் திமுகவில் இணையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக என கூறப்படுகிறது. இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்த செய்தி உண்மையானால் கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் முக்கிய முகமாக அறியப்படுவதால், அங்கு அதிமுகவின் வாக்கு வங்கி பாதியளவு  சரிய கூடும் என மதிப்பிடப்படுகிறது. 

மீண்டும் உருவெடுக்கும் அதிமுக-திமுக கூட்டணி.. முழிக்கும் விஜய்!!

0

ADMK DMK TVK: 2026 ஆம் ஆண்டு நடைபெற ருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநில அரசியல் மீண்டும் பழைய இரு துருவங்களான திமுக மற்றும் அதிமுகவை மையமாக கொண்டு நகரும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. அதிமுக, கடந்த முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை மீட்டெடுக்க முயற்சிக்கிறது. அதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி, பல்வேறு கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் வலுவான தளத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மறுபுறம், திமுக அரசு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிதி உதவித் திட்டங்கள் வழியாக மக்களின் ஆதரவை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர முயல்கிறது. இந்தச் சூழலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் புதிய சக்தியாக வெளிவந்தாலும், தனித்து நிற்கும் முடிவு அவருக்கு பெரும் சவாலாக மாறலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். விஜய் கட்சியின் சமூக நடவடிக்கைகள் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒரு முழுமையான கட்சி அமைப்பை உருவாக்க நேரம் எடுக்கப்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

விஜய் தனியாக போட்டியிடும்  ஆளுமை அவரிடம் இருந்தாலும் கட்சி அமைப்பு இல்லாததால் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து நிலவுகிறது. இதனால் 2026 தேர்தல் மீண்டும் திமுக-அதிமுக நேரடி மோதலாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது என மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். ஆனால், விஜய் உள்ளிட்ட புதிய சக்திகள் மக்கள் மனநிலையை மாற்றக் கூடியதா என்பது இன்னும் ஒரு  கேள்வி குறியாகவே உள்ளது.

“H-பைல்ஸ்” என்ற பெயரில் ராகுல் காந்தியின் ‘வாக்கு திருட்டு’ போலி பிரச்சார நாடகம் — வெளிச்சத்துக்கு வந்த உண்மை 

0

2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் “பெரிய அளவில் போலி வாக்காளர் அட்டைகளை வைத்து கள்ள ஒட்டு போட்டது நடந்துள்ளது” என்று கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை சரிபார்ப்பில் நொறுங்கி விட்டன. அவரின் “H-பைல்ஸ்” எனும் ஆவணங்களில் கூறப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டும், சரிபார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பொய்யாகி விட்டது.

பலமுறை வாக்களித்ததாக கூறிய பொய்யான குற்றச்சாட்டு

ராகுல் காந்தி தனது முதல் குற்றச்சாட்டில், ஒரு வயதான பெண்ணின் பெயர் 220 முறை வாக்காளர் பட்டியலில் இருப்பதாக கூறினார். இது “பெரிய அளவில் வாக்காளர் நகல் பதிவு” என சித்தரிக்கப்பட்டது.

அவர் குறிப்பிட்டது ஹரியானா மாநிலத்தின் முலானா தொகுதி – தாகோலா கிராமம். 2019 இல் அங்கு ஒரு வாக்குச்சாவடி மட்டுமே (பூத் 63) இருந்தது. 2024 தேர்தலுக்காக வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அந்த பூத் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டது. இது தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறையாகும்.

ஆனால் ராகுல் காந்தி அதையே “220 முறை ஒரே நபர் பெயர்” என தவறாக விளக்கினார்.இதில் மிகவும் ஆச்சரியமானது என்னவெனில் — அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிதான் வென்றுள்ளது! அதாவது, “முறைகேடு நடந்தது” என அவர் கூறிய இடத்தில் காங்கிரஸே வெற்றி பெற்றுள்ளது. இது அவரது குற்றச்சாட்டின் நோக்கத்தையே சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Exit Polls) குறித்து இரட்டை நிலை

ராகுல் காந்தி கூறிய இரண்டாவது குற்றச்சாட்டு — “எக்சிட் போல்கள் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தும், முடிவுகள் மாற்றப்பட்டன” என்றது.

ஆனால் எக்சிட் போல்கள் புள்ளியியல் அடிப்படையில் நடக்கும் கணிப்புகள்; அவை எப்போதும் ±3% பிழை எல்லை கொண்டவை.அதே ராகுல் காந்தி 2014, 2019, 2024 ஆரம்பத்தில் இவை “பாஜக புரொப்பகண்டா கருவிகள்” எனச் சாடியவர்.
ஆனால் காங்கிரஸுக்கு சாதகமாக சில எக்சிட் போல்கள் வந்தவுடன் அவையே “உண்மை” எனக் கூறுவது அவரது இரட்டை முகத்தை வெளிப்படுத்துகிறது.

வாக்குச் சீட்டு பற்றிய தவறான விளக்கம்

“பேலட் பேப்பரில் காங்கிரஸ் முன்னிலை, ஆனால் இறுதியில் தோல்வி; இதுவே மோசடி” என ராகுல் காந்தி கூறினார். ஆனால் உண்மை என்னவெனில் — ஹரியானாவில் பேலட் பேப்பர் வாக்குகள் மொத்த வாக்குகளில் 0.57% மட்டுமே.
அதாவது, 99% வாக்குகள் EVM வழியாக பதிவு செய்யப்பட்டவை.அதில் 0.5% வாக்குகளை வைத்து “முழு தேர்தல் மோசடி” என கூறுவது புள்ளியியல் அடிப்படையில் பொருளற்றது.

மேலும், தேர்தல் ஆணையத் தரவுகள் காட்டியது — நான்கு தொகுதிகளில் (ஜுலானா, ஹாதின், நங்கல் சௌத்ரி, ஆதாம்பூர்) பாஜக தான் பேலட் வாக்குகளில் முன்னிலை பெற்றிருந்தும் இறுதியில் தோல்வியடைந்தது.அதாவது, அவர் கூறிய மாதிரி மோசடி நடந்திருந்தால் பாஜக முன்னிலை ஏன் இழந்தது?

திருத்தப்பட்ட வீடியோ – முதலமைச்சர் சைனியை தவறாக சித்தரித்தது

ராகுல் காந்தி, ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி கூறிய “எங்களுக்கு எல்லா ஏற்பாடுகளும் உள்ளன” என்ற ஒரு வரியை வெட்டி “வோட் சோரி ஏற்பாடு” என விளக்கினார்.

ஆனால் அந்த முழு வீடியோவில் சைனி பேசியதாவது,

“நாங்கள் கூட்டணி தேவையில்லை; பாஜக தனியாக ஆட்சி அமைக்கும். அதற்கான அரசியல் ஏற்பாடுகள் எங்களிடம் உள்ளன” என்றே குறிப்பிட்டிருந்தார்.

இது கள்ள ஓட்டு போன்ற தேர்தல் முறைகேடு குறித்ததல்ல; அரசியல் தன்னம்பிக்கையை குறித்தது. முதலமைச்சர் பின்னர் அதற்காக ராகுல் காந்தியை “தெளிவான பொய் கூறியவர்” எனக் கூறி கண்டனம் தெரிவித்தார்.

குறைந்த வித்தியாசத்தில் தோல்வி — ஆனால் அதுவே மோசடி சான்றா?

ராகுல் காந்தி, எட்டு தொகுதிகளில் 22,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது “தேர்தல் முறைகேடுகளின் சான்று” என கூறினார். ஆனால் ஹரியானாவின் 10 குறைந்த வித்தியாச போட்டிகளில் காங்கிரஸ் 6, பாஜக 3 வென்றுள்ளது.

இதுபோல் நெருக்கமான வாக்கு வித்தியாசம் எந்த மாநிலத் தேர்தலிலும் சாதாரணம்.
எ.கா., 2018 மத்தியப்பிரதேசத்தில் பாஜக பல இடங்களில் 1,000 வாக்குக்கு குறைவாக தோற்றது — அப்போது யாரும் மோசடி என கூறவில்லை.

போலியான வாக்காளர் குற்றச்சாட்டு

ராகுல் காந்தி கூறியது — “ஒரு பெண் 10 வாக்குச்சாவடிகளில் 22 முறை வாக்களித்தார்.”ஆனால் இது உண்மையல்ல. வாக்காளர் பட்டியலில் சில பெயர்கள் மீண்டும் வருவது, இடம் மாறுதல், எழுத்துப்பிழை அல்லது நிர்வாக பிழை காரணமாகும். இவை ஒவ்வொரு தேர்தலுக்கும் முன் Special Revision Drive மூலம் திருத்தப்படுகின்றன.

மேலும், எந்தப் பூத்திலும் காங்கிரஸ் முகவர்கள் இதுபோன்று எந்தவித புகாரும் பதிவு செய்யவில்லை. எல்லா வாக்குச்சாவடிகளிலும் CCTV பதிவுகள் 45 நாட்களுக்கு பாதுகாக்கப்பட்டன; ஆனால் காங்கிரஸ் எந்த சட்டப்பூர்வ புகாரும் தரவில்லை.
இதைப் பார்த்தால், இது தேர்தல் முடிந்த பின் முடிவுகளை குறை கூறும் நாடகம் மட்டுமே என தெளிவாகிறது.

“25 லட்சம் போலி வாக்காளர்கள்” என்ற பொய்யான எண்

ராகுல் காந்தி கூறியது — “8 பேரில் ஒருவர் போலியான வாக்காளர்” என்றது.
ஆனால் தேர்தல் ஆணையத்திற்கு மொத்தம் 5 புகார்கள் மட்டுமே வந்தன; அனைத்தும் உடனே தீர்க்கப்பட்டன. நூற்றுக்கணக்கான காங்கிரஸ் முகவர்கள் நேரடியாக வாக்குப்பதிவு செயல்முறையை கண்காணித்தனர். அதாவது, எந்த “மோசடியும்” நடக்கவில்லை.

பிரேசில் மாடலின் புகைப்படம் – கற்பனைக்கு அப்பாற்பட்ட பிழை

ராகுல் காந்தி தனது ஊடகச் சந்திப்பில் “ஒரே பெண்ணின் புகைப்படம் பல வாக்காளர் அட்டைகளில் பயன்படுத்தப்பட்டது” என்று கூறி, அந்தப் பெண்ணின் புகைப்படத்தைக் காட்டினார்.ஆனால் அந்தப் புகைப்படம் இந்திய பெண்ணின் அல்ல; பிரேசில் நாட்டைச் சேர்ந்த ‘லாரிஸ்ஸா நேரி’ என்ற மாடலின் புகைப்படம்.

லாரிஸ்ஸா அதனை கண்டதும் தனது சமூக வலைதளத்தில் வீடியோவொன்றை வெளியிட்டு கூறியதாவது,

“எனது புகைப்படத்தை இந்திய அரசியல் பிரச்சாரத்தில் பயன்படுத்துகிறார்கள்; இது வெறும் பைத்தியம்!” என்று சிரித்துக்கொண்டே கூறினார். அவரின் படம் ஸ்டாக் போட்டோ தளங்களில் இருந்தது, அங்கிருந்து யாரோ எடுத்துக் காங்கிரஸ் பிரச்சாரத்தில் சேர்த்துள்ளனர்.

இருப்பினும், காங்கிரஸ் டிஜிட்டல் குழுவினர் அதே புகைப்படத்தை தொடர்ந்து பரப்பினர்; சிலர் “பிரேசில் சுற்றுலா பரிசு” என்று கூட நகைச்சுவையாக வெளியிட்டனர். இது உண்மைக்கு புறம்பான பிரச்சாரம் என்பதை வெளிப்படுத்தியது.

இளைஞர்களை பயமுறுத்தி அரசியல் பலம் பெறும் முயற்சி

நேபாளம், வங்காளதேசம் போன்ற நாடுகளில் நடந்த இளைஞர் போராட்டங்களுக்குப் பிறகு, ராகுல் காந்தி இந்திய இளைஞர்களிடமும் அதே உணர்வை தூண்ட முயன்றார்.
“தேர்தல் திருட்டு” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி புதிய வாக்காளர்களை உணர்ச்சி ரீதியாக பாதிக்க முயன்றார்.ஆனால் இந்திய இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள்; இப்படியான நாடகங்களால் எளிதில் மயங்கமாட்டார்கள்.

ஹோடல் தொகுதி குறித்த அரை உண்மைகள்

ராகுல் காந்தி கூறியது — “ஒரே வீட்டில் 501 போலி வாக்காளர்கள்” என்று.
ஆனால் உண்மை என்னவெனில் அந்த வீடுகள் ஒரே குடும்பத்தின் பல தலைமுறைகள் வசிக்கும் பெரிய சொத்துகள்.குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே வீட்டு எண் கீழ் பதிவு செய்யப்பட்ட legitimate வாக்காளர்கள்.அவர்கள் 80 ஆண்டுகளாக அங்கிருந்தே வசித்து வருகிறார்கள்.

அதேபோல், “265 வது வீட்டு எண் – 501 வாக்காளர்” என்ற இடம், உண்மையில் பல குடும்பங்கள் வசிக்கும் பெரிய நிலப்பகுதி; பல சிறு வீடுகளும் பள்ளிகளும் அதே சொத்து எண்ணைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

“H-பைல்ஸ்” முழுவதும் நாடகம்

ராகுல் காந்தியின் அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையற்றவை, புள்ளிவிவரங்களைக் கடுமையாக வளைத்து கூறப்பட்டவை.
அவர் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, பொய் குற்றச்சாட்டு மற்றும் திசை திருப்புதல் மூலம் மக்கள் மனதை குழப்ப முயன்றுள்ளார்.

ஹரியானா தேர்தல்கள் முழுமையாக வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெற்றுள்ளன.தேர்தல் ஆணையம், வாக்கு முகவர்கள், மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அனைத்தும் ஒரே முடிவைச் சொல்லுகின்றன.

“மோசடி எதுவும் நடக்கவில்லை; ஆனால் உண்மையை திரித்து காட்டும் அரசியல் நாடகம் இதன் மூலமாக நடந்தது.”

ராகுல் காந்தியின் “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டு, ஒரு ஜனநாயகத்தைக் காப்பாற்றும் முயற்சி அல்ல. அதை நம்பிக்கையிழக்கச் செய்யும் திட்டமிட்ட முயற்சி. இதன் மூலமாக உண்மையை மறைத்து பொய்யை திணிக்கும் பிரச்சாரத்திற்கான நாடகம் நடைபெற்றுள்ளது.

மதிமுகவை அட்டாக் செய்யும் இபிஎஸ்.. அப்செட்டில் வைகோ!! குஷியில் அதிமுக!!

0

MDMK ADMK: அடுத்த ஆண்டு நடைபெற போகும், சட்டமன்ற தேர்தலுக்காக மாநில கட்சிகளனைத்தும் முழு ஈடுபாட்டில் செயல்பட்டு வருகின்றன. அதிமுக சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணமும், திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணமும் நடைபெற்று வருகிறது. மேலும் மூன்றாம் நிலை கட்சிகளாக அறியப்படும், பாமக, தேமுதிக, தவெக போன்ற கட்சிகளும் மக்களை சந்திக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருவது மட்டுமல்லாமல் இம்முறை நான்கு முனை போட்டியும் நிலவக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பிளவுகள் நடைபெற்று வரும் சமயத்தில், இபிஎஸ் தவெக கூட்டணியை மட்டுமே தான் நம்பி இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில், விஜய்யும் கைவிரித்து விட்டார். இதனால் ஏமாற்றமடைந்த இபிஎஸ் அடுத்து யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்று யோசித்து வந்தார். ஆனால் இப்போது விஜய் கூட்டணிக்கு நோ சொல்லி விட்டால் என்ன மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைவது இபிஎஸ்க்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது  என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

தேர்தலையொட்டி கட்சிகள் அனைத்தும், மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் மும்முரமாக உள்ளனர். அதில் முதலிடம் பிடிப்பது அதிமுக என்றே சொல்லலாம். இம்முறை அதிகளவு வாக்காளர்கள் முதல் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரை வேறு கட்சியிலிருந்து பிரிந்து அதிமுகவில் இணைந்துள்ளனர். அந்த வகையில் தற்போது புதிதாக, மதிமுகவின் மாணவரணி துணை செயலாளர் சிவநாதன் அதிமுகவில் இணைந்தது பேசுபொருளாகியுள்ளது. இது வைகோவிற்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் போட்ட பிளான்.. கூட்டணிக்கு ஓகே சொன்ன விஜய்!!

0

TVK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் அதற்கான வேலைபாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறிய கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை தக்க வைத்து கொள்ள எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று ஆலோசித்து வரும் வேளையில், திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும், பாமக, தேமுதிக, தவெக போன்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையையும், தொகுதி பங்கீட்டையும் நடத்தி வருகிறது. இந்நிலையில், விஜய்யின் தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தற்போது வரை புரியாத புதிராகவே உள்ளது.

திமுக தவெகவின் அரசியல் எதிரி என்பதால் அதனுடன் கூட்டணி அமைக்காது என்பது தெரிந்த விஷயம். அதனால் அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். இதன் காரணமாக விஜய்யின் கூட்டணி யாருடன் என்ற கேள்வி தற்போது வரை அனைத்து ஊடகங்களிலும் காரசார விவாதமாக உள்ளது. இந்நிலையில், விஜய், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, தவாக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 80% வாய்ப்புகள் உள்ளது என தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜய்யிடம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக விசிகவிற்கு திமுக உடன் தொகுதி பங்கீட்டில் உள்ள பிரச்சனையை பயன்படுத்தி கூட்டணிக்கு வர வைப்பதற்கான வேலைப்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது. மதிமுகவிடம் திமுகவின் கொள்கை அரசியலை மையப்படுத்திய பேச்சு நடத்தப்படுவதாக பலரும் கூறி  வருகின்றனர். மற்றபடி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தவாக போன்ற கட்சிகள் தானாக வந்துவிடுமென்ற எண்ணம் தவெகவிற்கு உள்ளது என தவெகவின் நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆளுங்கட்சியின் தவறுகளை பட்டியலிட்ட தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்.. ஷாக்கில் சிஎம்!!

0

DMK TVK: 6 வது முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கும் திமுக தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சி கட்டிலை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமென தீவிரமாக போராடி வருகிறது. திமுகவை எதிர்க்கும் ஒரே பெரிய திராவிட கட்சி அதிமுக தான். திமுகவிலிருந்து பிரிந்து, அதிமுக உருவான நாள் முதல் தற்போது வரை அந்த நிலை தான் தொடர்கிறது. ஆனால் தற்போது அதனை உடைத்தெரியும் வகையில் உதித்துள்ள புதிய கட்சி தமிழக வெற்றிக் கழகம். அதிமுக தனது அனைத்து கூட்டத்திலும், திமுக அரசு செய்த தவறுகளை சுட்டி கட்டி பேசி வருவதை தவெகவும் கையில் எடுத்துள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக 2026 வரை மக்களுக்கு பல நன்மைகளை செய்திருந்தாலும், அவர்கள் துன்ப காலத்தில் மக்களுடன் இல்லையென்பதே மக்களின் கோபம். கரூர் சம்பவம் நடந்த போது, உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் நடந்த சாராய பலிக்கு மட்டும் ஏன் செல்லவில்லை என்ற கேள்வி அனைத்து மக்களின் மனதிலும் உள்ளது.  மேலும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும், பாலியல் வன்முறைகளுக்கு எதிராக மற்ற நாடுகளில் உள்ளது போல கடுமையான சட்டம் தமிழகத்திலும்  இயற்ற வேண்டுமென பல போராட்டங்கள் நடத்தியும் அதற்கான ஏற்பாடுகள் இதுவரை எட்டப்படவில்லை.

இது மட்டுமல்லாமல், ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டுமென, திமுக கூட்டணி கட்சிகளே பல முறை கோரிக்கை வைத்தும், 2026 இல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து சட்டசபையில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2020 உடன் ஒப்பிடும் போது 2021 முதல் 2026 வரை திமுக அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிறைய அதிகரித்துள்ளது என்று கருத்து கணிப்பு கூறுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், தவெகவின் கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் ஒரு கருத்தை கூறியுள்ளார். முதலில் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும். அடிப்படையான சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதை செய்தால் தான் வாக்களிப்பார்களே தவிர, கட்டமைப்பு இருந்தால் மட்டும் யாரும் வாக்களிக்க மாட்டார்கள். திமுக மீது மக்கள் தற்போது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று கூறினார். 

உங்கள சேத்துகிட்ட எங்க பவர் போய்டும்.. கரார் காட்டும் விஜய்!! கடும் கோபத்தில் கட்சி தலைவர்கள்!!

0

TVK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், நடிகர் விஜய் கட்சி துவங்கியுள்ளார். தவெகவிற்கு கிடைத்த ஆதரவை கண்ட கட்சிகள் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்ப்பார்த்திருந்தனர். திமுக, பாஜகவை எதிரி என்று கூறியதால் அவர்களுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் அதிமுக உடன் சேர்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதிமுகவிற்கான கதவும் மூடப்பட்டு விட்டது.

இதனை தொடர்ந்து அதிமுகவிலிருந்து பிரிந்த செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றோருடன் சேர்வார் என்று அனைத்து ஊடகங்களும் செய்தியை வெளியிட்ட நிலையில் தற்போது விஜய் அதற்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.  ஏனென்றால் விஜய் கட்சி ஆரம்பித்த பொழுதே திராவிட கட்சிகளுக்கு மாற்று என்றும் புதிய அரசியலை கையில் எடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இப்படி இருக்க அதிமுகவிலிருந்து பிரிந்த திராவிட வாடை உள்ளவர்களை தவெகவில் சேர்த்தால் விஜய் உருவாக்கி வைத்திக்கும் அரசியல் அடையாளம் காணாமல் போய்விடும் என்று விஜய் நினைப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் நால்வர் அணி விஜய் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். கரூர் சம்பவத்தில் விஜய் மீது பல்வேறு புகார்கள் வைக்கப்பட்ட போதும் இவர்கள் நால்வரும் விஜய்க்கு மறைமுகமாக ஆதரவை தெரிவித்து வந்தனர். இப்படி இருக்கையில் அதனை கண்டு கொள்ளாத விஜய் தன்னுடைய அடுத்த அரசியல் நகர்வை எப்படி திட்டமிட போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டபுள் கேம் ஆடும் வைத்தியலிங்கம்.. முக்கிய தலைவருடன் தொடரும் பேச்சுவார்த்தை!!

0

ADMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் மூன்றாம் நிலை கட்சிகளிடையே நடைபெற்று வருகிறது. இவ்வாறான பரபரப்பான சூழலில் அதிமுகவில் பல்வேறு பிரிவினைகளும், தலைமை போட்டியும் நிலவி வருகிறது. இபிஎஸ் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றதிலிருந்தே இந்த பிரிவினைகள் தொடர்கிறது.

இதனை மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்தது தான் நால்வர் அணி. ஏற்கனவே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், நால்வர் அணி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. இந்த அணியில் இடம் பெற்றிருக்கும் ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், வைத்தியலிங்கமும் கூடிய விரைவில் திமுகவில் இணைய இருக்கிறார் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் அதில் புதிய திருப்பமாக ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

வைத்தியலிங்கம் இபிஎஸ்யிடம் இன்னுமும் தொடர்பில் தான் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அதிமுகவில் தான் மீண்டும் இணைய வேண்டுமென்றால் ஓபிஎஸ்யும் சேர்த்து கொள்ள வேண்டுமென்று நிபந்தனை விதித்துள்ளாராம். இதனால் இவர், டபுள் கேம் ஆடுகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். இதன் காரணமாக திமுகவில் இணைவது போல அனைவரிடமும் காட்டி விட்டு, கடைசி நேரத்தில் ஓபிஎஸ்யை விட்டு விலகி அதிமுகவில் வைத்தியலிங்கம் இணையும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இளைஞர்களின் ஆதரவை இழந்த உதயநிதி.. இதற்கு காரணம் இந்த கட்சியா!!

0

DMK TVK: புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்துக்கும், 70 வருடங்களுக்கு மேலாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போட்டியில் தான் தற்போது தமிழக அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது. விஜய் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலே தவெகவிற்க்கான ஆதரவு அதிகளவில் இருந்தது. தவெகவிற்கும் திமுகவின் துணை முதல்வர் உதயநிதிக்கும் உள்ள உள்ள ஒரு ஒற்றுமை இளைஞர்கள் ஆதரவு தான்.

திமுகவிற்கான இளைஞரணியின் பலம் உதயநிதியை நம்பி தான் இருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு உதயநிதி இளைஞர்களின் பலத்தை தன் வசம் வைத்துள்ளார். அதனை முறியடிக்கும் விதமாக உருவானது தான் தவெக. விஜய்க்கு மற்ற அனைத்து தரப்பினரின் ஆதரவை விட இளைஞர்களின் ஆதரவு தான் அதிகம். விஜயின் வருகையால், திமுகவின் இளைஞர்களின் ஆதரவு குறைந்துள்ளது என்று கணிக்கப்படுகிறது. அதற்க்கு முதன்மை காரணமாக பார்க்கப்படுவது, விஜய்யின் பிரச்சாரத்திற்கு கூடும் கூட்டத்தை உதயநிதி, பல இடங்களில் விமர்சித்தது தான்.

தவெகவில் உள்ள கூட்டம் கொள்கையற்ற கூட்டம் எனவும், வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் கண்காட்சியை பார்க்க கூட தான் கூட்டம் கூடும் என்று கூறியுள்ளார். விஜய்யின் பிரச்சாரத்திற்கு இளைஞர்கள் கூட்டம் தான் அதிகளவில் கூடும். இதன் காரணமாக உதயநிதி கூறியது விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் இளைஞர்களை தான் என்பது தெளிவாகிறது. உதயநிதி விஜய்யின் ஆதரவாளர்களை மறைமுகமாக விமர்சிப்பதும், விஜய்யின் வருகையும் திமுகவின் இளைஞர்களின் ஆதரவை குறைத்துள்ளது என்று பலரும் கூறுகின்றனர். 

விஜய்க்கு எதிராக களமிறங்க போகும் அமமுக.. சுழற்றி அடிக்கும் கட்சிகள்!!

0

TVK AMMK: தமிழ் திரையுலகில் மிக பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய், சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியது தமிழக அரசியலையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவு பெருகியது. இதனை கண்ட கட்சிகளனைத்தும் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்ததன.

விஜய் திமுகவை அரசியல் எதிர் என்று கூறியதால், அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் திராவிட கட்சியான அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று அனைவரும் கூறி வந்தனர். ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, விஜய் தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தவெக தலைமையில் தான் கூட்டணி, நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று பகிரங்கமாக அறிவித்தார். இதனால் இபிஎஸ்யின் எதிர்பார்ப்பு அத்தனையும் ஏமாற்றத்தில் முடிந்தது. இதற்கு பிறகு அதிமுகவிலிருந்து பிரிந்து நால்வர் அணியாக உருமாறியவர்களுடன் விஜய் கூட்டணி அமைப்பார் என்று யூகிக்கப்பட்டது.

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தவெக உடனான கூட்டணி குறித்து பல்வேறு இடங்களில் மறைமுகமாக சம்மதம் தெரிவித்தும் விஜய் இதனை பற்றி எதுவும் பேசாமல் உள்ளார். இதனால் டிடிவி தினகரன் விஜய் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்று அமமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன. விஜய் ஏற்கனவே திமுகவையும், பாஜகவையும் எதிரி என்று கூறிய நிலையில், அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை என்று வெளிப்படையாக கூறியதால் அதிமுகவும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது. தற்போது அதில் புதிதாக அமமுகவும் இணைந்துள்ளதாக தெரிகிறது என பலரும் கூறி வருகின்றனர்.

இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தினகரனும் தவெகவின் எதிரி பட்டியலில் இடம் பிடித்தால் விஜய் அதனை எவ்வாறு எதிர்கொள்வார் என்று பலரும் வினவி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில், முதல் முறை அரசியலில் குதித்திருக்கும் விஜய் இத்தனை எதிர்ப்புகளை எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.