புதன்கிழமை, செப்டம்பர் 10, 2025
Home Blog Page 38

தவறி கூட உங்க போனில் இந்த பட்டனை கிளிக் பண்ணிடாதீங்க; மோசடி கும்பல் வலைக்கும் வலை!

0

ஆண்ட்ராய்டு போன் அனைவரும் பயன்படுத்தி வரும் நிலையில் ஹேக்கர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த அம்சத்தை பயன்படுத்தி கவனக்குறைவாக பயனர்களை ஏமாற்றி வருகின்றனர்.

வழக்கமாக ஒரு உண்மையான பிராண்டாவது விளம்பரம் மின்னஞ்சலில் உள்ள அன்சா சப்ஸ்கிரைப் பட்டனை கிளிக் செய்யும்பொழுது அந்த அஞ்சல் பட்டியலில் இருந்த செய்திகளை பெறுவது நிறுத்தப்படும். இது போன்ற ஒரு செய்தி தோன்றும், பெரும்பாலும் அது ஒரு புதிய வகை பக்கத்திற்கோ அல்லது பாப்பப் தளத்திற்கோ தங்களை அழைத்துச் செல்லும்.

இந்த செயல்முறையின் மூலம் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி அவர்களின் பட்டியில் இருந்து பாதுகாப்பாக நீக்குவதற்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஹேக்கர்கள் இந்த செயல்பாட்டை போலவே செயல்படும் மின்னஞ்சல்கலை அனுப்பி வருகின்றனர்

அன்சஸ்கிரைப் இணைப்புகளை தாங்கள் கிளிக் செய்யும்பொழுது அஞ்சல் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கு பதிலாக நீங்கள் அறியாமலேயே உங்கள் கணினியில் மால்வேர் அல்லது வைரஸ்களை புகுத்த அனுமதி வழங்கப்படுகின்றனர்.

இந்த பிரச்சனையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு சில விதிகளை பின்பற்ற வேண்டும். அடையாளம்  தெரியாத அனுப்பியவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களில் உள்ள பட்டனை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்.

மின்னஞ்சலின் தலைப்பில் அர்ஜெண்ட் அல்லது இறுதி அறிவிப்பு என இருந்தால் அந்த மின்னஞ்சல்களை திறக்க கூடாது.. மேலும் அன் சப்ஸ்கிரைப் மின்னஞ்சல் விவரங்கள் அடுத்ததாக மேல் பகுதியில் இருந்தால் அதனை கிளிக் செய்யக்கூடாது.

எந்த ஒரு இணைப்பையும் கிளிக் செய்வதற்கு முன் மின்னஞ்சலின் உள்ளடக்கத்தை முழுமையாக படித்து அதன் பிறகு அதனை பயன்படுத்த வேண்டும். மின்னஞ்சல் மோசடிகள் ஒரு பெரும் அச்சுறுத்தல் அதனால் உங்கள் இன்பாக்ஸில் வரும் மின்னஞ்சல்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

தனுஷ் கொடுத்த பில்ட்டப் ஒர்கவுட் ஆகுமா? முன்பதிவுக்கே படம் ரொம்ப முக்குதாம்!

0

தனுஷ் கொடுத்த பில்ட்டப் ஒர்கவுட் ஆகுமா? முன்பதிவுக்கே படம் ரொம்ப முக்குதாம்!

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது. ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் தயாரித்து இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் படம் மாபெரும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் தனுஷ் தற்போது நடித்து முடித்த குபேரா படம் 20 ஜூன் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டில் தனுஷ் ரொம்பவே பேசிவிட்டார். அவர் மனதில் பட்டதை பேசி இருக்கிறார் என்று சிலர் சொன்னாலும் எல்லோராலும் அவர் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் இவர் ஏன் இப்படி பேசுறாரு, அப்படி இவருக்கு என்னதான் ஆச்சு, யார பத்தி பேசுறாரு என்று அந்த நிகழ்வை பார்த்த யாருக்குமே எதுவுமே புரியவில்லை.

இந்த பேச்சு பட ப்ரோமோஷனுக்காக கூட இருக்கலாம். தனுஷ் ஒரு படத்துக்காக இப்படி பேசி இருக்காரு, அந்த படத்துல அப்படி என்ன தான் இருக்கும்ன்னு எல்லாரும் பாக்க வருவாங்க என்று கூட நினைத்து அவர் பேசி இருக்கலாம். இந்த குபேரா படத்துக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் படம் 3 மணி நேரம் 15 நிமிடம் காட்சிகளை கொண்டுள்ளது.

படம் இவ்வளவு லென்த்தா இருந்தா படம் பாக்குறவங்களுக்கு சலிப்பு வந்துரும் என்று 2 மணி நேரம் 50 நிமிடங்களாக படத்தின் நீளத்தை குறைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர், அதர்வாவின் DNA, வைபவ் நடிப்பில் சென்னை சிட்டி கேங்ஸ்டர் போன்ற படங்கள் ஜூன் 20ஆம் தேதி வெளியாகிறது. இதுவரை குபேரா படத்தின் முன்பதிவும் ரொம்ப டல்லடிப்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

வெற்றியை பிடிக்க விஜய் சேதுபதி போட்ட திட்டம்? கண்டிப்பா அப்போ படம் ஹிட்டு தான்!

0

வெற்றியை பிடிக்க விஜய் சேதுபதி போட்ட திட்டம்? கண்டிப்பா அப்போ படம் ஹிட்டு தான்!

கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை விஜய் சேதுபதி நடிப்பில் மாதத்திற்கு 2, 3 படங்களாவது வெளியாகிவிடும். அந்த நேரத்தில் விஜய் சேதுபதி சினிமாவில் உச்சத்தில் இருந்ததால் கிடைக்கும் கதையில் எல்லாம் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் தொடர்ந்து விஜய் சேதுபதி படங்கள் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடவில்லை.

மாறாக எல்லா படங்களும் தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி கடந்த வருடம் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்தார். இந்த படம் வெறும் 20 கோடி படஜெட்டில் எடுக்கப்பட்டு 200 கோடிக்கு மேல் வசூலித்தது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மகாராஜா படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்திய திரையுலகமே இந்த படத்தை கொண்டாடியது. கடந்த மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ACE படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை விஜய் சேதுபதி எதிர்பார்க்கவில்லை.

எனவே தனது ஆஸ்தான வெற்றிப்பட இயக்குனரான நித்திலன் சுவாமிநாதனை அணுகி இருக்கிறார். நித்திலன் சுவாமிநாதனும் ஏற்கனவே நயன்தாராவுடன் தான் பண்ணுவதாக இருந்த படம் ட்ராப் ஆனதால் விஜய் சேதுபதியுடன் இணைய ஒப்புக்கொண்டுள்ளார். கூடிய விரைவில் விஜய் சேதுபதி மற்றும் மகாராஜா இயக்குனர் நித்திலன் ஸ்வாமிநாதன் இணையும் படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

உயிர் நட்பில் ஏற்பட்ட விரிசல்? 6 மாதங்கள் பேசாமல் இருந்த விராட் கோலி

0

உயிர் நட்பில் ஏற்பட்ட விரிசல்? 6 மாதங்கள் பேசாமல் இருந்த விராட் கோலி

RCB அணியில் அண்ணன் தம்பியை போல பழகியவர்கள் கோலி மற்றும் AB டிவில்லியர்ஸ். ABD சவுத் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். குறைந்த பந்துகளில் சதம், அரைசதம் என பல சாதனைகள் படைத்தவர்தான் ABD.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் லோக்கல் கிரிக்கெட் விளையாடும்போது கண்ணில் பந்து பட்டு பார்வை கோளாறால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு தன்னுடைய இன்டர்நேஷனல் கிரிக்கெட் வாழ்க்கையில் இனி கிரிக்கெட் விளையாடப்போவதில்லை என்று அறிவித்தார்.

RCB அணிக்காக 2011யில் இருந்து 2021 வரை தொடர்ந்து 10 வருடங்கள் விளையாடினார். அதனால் கோஹ்லியுடன் இவருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அண்மையில் 18 வருடங்களுக்கு பிறகு RCB ஐபில் கோப்பையை வென்றபோது கூட ABD அந்த போட்டியை மைதானத்தில் வந்து கண்டுகளித்தார். போட்டியில் RCB வென்றபிறகு இவரும் RCB ஜெர்ஸி அணிந்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்தார்.

அண்மையில் இவர் கோஹ்லியுடன் ஏற்பட்ட சிறு மனவருத்தம் பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதாவது கோஹ்லி அனுஷ்கா ஜோடிக்கு இரண்டாவது குழந்தைக்கு தயாராகிய பிறகு எங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப்போகிறது, அனுஷ்கா pregnentட்டாக இருக்கிறார் என்று கோஹ்லி தன்னுடைய நெருங்கிய நண்பர் ABDயிடம் தெரிவித்துள்ளார்.

நட்பாக கோஹ்லி சொன்ன இந்த விஷயத்தை ABD ஒரு நேரலையில் பேசியதால் கோஹ்லிக்கும், ABDக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாம். இதனால் விராட் ABDயிடம் 6 மாதகாலம் பேசாமல் இருந்துள்ளார். அதற்கு பிறகு தான் மீண்டும் ABDயிடம் கோஹ்லி பேசியதாக அண்மையில் பேட்டி கொடுத்துள்ளார் ABD.

முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்க பிளான்; விளாசிய அமைச்சர் சேகர் பாபு!

0

இந்து முன்னணி சார்பாக மதுரையில் வரும் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது, இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்பிருக்கின்றது. இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் ஏடி இளங்கோவன் இது குறித்து தகவல்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் வரும் ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீமான் தமிழில் இந்த குடமுழக்கை நடத்த வேண்டும் என கூற தமிழிலும் ஓதப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் முருகனை வைத்து சர்ச்சைகள் வெடித்து வருகின்றது. இந்நிலையில் பவன் கல்யாண் யோகி ஆதித்யநாத் இந்து முன்னணி சார்பில் 22 ஆம் தேதி நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில் ஆந்திராவில் இருக்கும் பவன் கல்யாணுக்கும் உத்தர பிரதேசத்தில் இருக்கும் யோகி ஆதித்யநாத் தமிழ்நாட்டிற்கு என்ன சம்பந்தம்.

எந்த காலத்திற்கும் இல்லாத அளவில் 117 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு இந்த ஆட்சியில் நடத்தி இருக்கின்றோம். இந்து அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. நாங்கள் கடவுளை வைத்து அரசியல் செய்யவில்லை.

ஆனால் பாஜக முருகன் மாநாடு என கடவுளை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். இந்த மாநாடு தேவையற்ற மாநாடு முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்க பார்க்கிறார்களா.

முதல்வர் ஸ்டாலின் பக்தியில் தான் தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு பாஜக மாநில தலைவர் நாயனார் ஏன் ஆந்திராவில் இருப்பவர்களுக்கு உத்திர பிரதேசத்தில் இருப்பவர்களுக்கும் முருகனை வழிபடக் கூடாதா பவன் கல்யாண் முருக பக்தர்கள் பலமுறை அவர் முருகனின் ஆறுபடை வீட்டிற்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்திருக்கிறார். அவர் முருக மாநாட்டிற்கு வருவதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை என பேசி இருக்கிறார்.

பாஜக வசம் செல்லும் மதிமுக; கூட்டணி கலையுமா..குழப்பத்தில் தவிக்கும் திமுக!

0

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தொடர்ந்து அங்கம் வகித்து வருகின்றது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என பேசப்படும் நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகி திமுகவுக்கு ஸ்டார் ட்ரீட்மெண்டை கொடுக்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில் பாஜகவோ தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி என தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை என்றால் அவர்தான் இதுகுறித்து அறிவிக்க வேண்டும்.

ஆனால் மாறாக கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் அறிவிக்கின்றனர் இதிலிருந்து அதிமுக எத்தனை பலவீனம் ஆகிவிட்டது என திமுகவினர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என பாஜக கூறி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி அதற்கு எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்காமல் அமைதியாக இருப்பது அதிமுக ஆபத்தை விளைவிக்கும் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.

அதிமுக பாஜக கூட்டணியில் நிச்சயம் விரிசல் ஏற்படும் என திமுக கூறிவரும் நிலையில் திமுக கூட்டணி மிகவும் வலிமையான கூட்டணி என்று சொல்லும் நிலையில் அந்த கூட்டை கலைக்க பாஜக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் முருகன்  திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இந்த கட்சி விடுதலை சிறுத்தைகளாக இருக்குமா என பலரும் சந்தேகத்தை தெரிவித்து வருகின்றனர்.

திருமாவளவன் தெளிவாக இருக்கும் நிலையில் பாஜக பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் ஒருபோதும் இருக்காது என தெரிவித்துள்ளார் இதனால் யார் எனl முருகனிடம் கேட்டபோது நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் கட்சியானது வாஜ்பாய் காலத்தில் எங்களுடன் கூட்டணியில் இருந்தது என குழு ஒன்றை கொடுத்துள்ளார்.

அவர் கூறுவதை பார்த்தால் மதிமுக என்பது தெரிய வருகிறது. மதிமுகவுடன்  பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என மதிமுக விரும்பிய நிலையில் நான்கு தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் ஆறு தொகுதிகள் ஒதுக்கலாம் என திமுக கூறியது அதனை தொடர்ந்து ஆறு தொகுதிகளை பெற்றுக்கொண்டு சூரியன் சின்னத்தில் கட்சியினரை போட்டியிட வேண்டும் என வைகோ தெரிவித்தார்.

அதுபோல 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதியை திமுக ஒதுக்கியது. அதிலும் திமுக சின்னத்திலேயே மதிமுக போட்டியிட்டது..

இதுபோன்ற செயல்களை கவனித்த பாஜக எப்படியாவது மதிமுகவை தங்கள் வலைக்குள் கொண்டுவர வேண்டுமென தூண்டில் போட்டு காத்துக் கொண்டிருக்கிறது.

மதிமுகவுக்கு வரும் தேர்தலின் போது 10 இடங்களையாவது திமுக ஒதுக்குகின்றன என பேசப்படுகின்றது. இது போன்ற செய்திகள் பரவி வருவதால் திமுகவை விட்டு மதிமுக விலகிவிடுமா என்ற அச்சம் தற்போது திமுகவினர் இடையே ஏற்பட்டுள்ளது

அமைச்சரவையில் பங்கு..அதிகாரத்தில் பங்கு; திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ்!

0

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக செய்து வரும் நிலையில் கூட்டணிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக அங்கம் வகித்து வரும் நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் தான் கூட்டணி என்பதில் கட்சிகள் உறுதியாக இருக்கின்றனர்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வழக்கத்தை விட குறைவாக மதிமுக, விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் ஆறு தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு போட்டியிட்டனர். கடந்த தேர்தலில் விருப்பம் இல்லாவிட்டாலும் ஆறு தொகுதிகளை பெற்றுக்கொண்டோம் இந்த முறை கண்டிப்பாக கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என திமுகவிடம்  கேட்போம் என சிபிஎம் மாநில செயலாளர் பேஸ் சண்முகம் தெரிவித்திருக்கின்றார்.

விசிக தலைவரும் கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களை பெறுவோம் எனவும் கூடுதல் இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும் கூட்டணியில் இருப்போம் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வைகோவுக்கு மாநிலங்களவை சீட்டு மறுக்கப்படுவதை காரணம் காட்டி கூடுதல் சீட்டு கேட்க உள்ளதாக மதிமுக தரப்பில் கூறப்படுகின்றது காங்கிரஸ் 2011 சட்டமன்றத் தேர்தலில் 63 இடங்களிலும் 2016 சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களிலும் போட்டியிட்டது.

ஆனால் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 25 இடங்கள் மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் 18 இடங்களில் வென்று காட்டியது. இந்நிலையில் காங்கிரசும் கூடுதல் தொகுதி கேட்கலாம் என்ற சூழல் நிலவுகின்றது.

கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்பொழுது அமைச்சரவையில் பங்கு வேண்டும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நிச்சயம் கோரிக்கை வைப்போம் எனவும் தெரிவித்துள்ளனர். திமுகவை வீழ்த்தி காட்டுவோம் என அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளன இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் பாஜக அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்து வருகின்றன தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடைபெற நிலையில் அமித்ஷாவின் இந்த கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

இனி இவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடைக்காது; ஆசிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

0

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாட்டில், தொடக்க கல்வியின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களுடைய கல்வி தரத்தை உயர்த்திக்கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களில் பட்டப்படிப்பில் படித்திருக்க வேண்டும்.

உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு பெற முடியும். ஆனால் சம்பந்தப்பட்ட படங்களில் இல்லாமல் வேறு பாடங்களில் படித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த தொகையை திரும்ப வசூலிக்க அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தவறு செய்துள்ள அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை தொடக்கக் கல்வித் துறையில் 8000 மேற்பட்ட அரசு நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர்.

பள்ளிகளில் ஆறு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்த பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை பெரும்பாலானோர் இடைநிலை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று வரும் நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றது.

மேலும் இவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு தருவதற்கு அரசு செய்த விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தொடங்கு கல்வியின் கீழ் பணி புரியும் இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுடைய கல்வி தரத்தை உயர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஐந்து பாடங்களுக்கும் முதன்மை பாடங்களை பட்டப்படிப்பில் படித்து உயர்கல்வி தகுதி பெற்று இருப்பது அவசியம். ஆனால் தற்போது சிலர் சம்பந்தப்பட்ட பாடங்களில் இல்லாமல் வேறு பாடங்களில் உயர் கல்வி படிப்பை முடித்துவிட்டு ஊக்க ஊதியம் பெற்று வருகின்றனர்.

தமிழ் ஆசிரியர்கள் சிலர் அதுபோல சில வேறுபாடு ஆசிரியர்கள் பிகாம் எம்,காம் படித்துவிட்டு ஊக்க ஊதியம் பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.

அதனால் ஊக்க ஊதிய உயர்வு பெறும் விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட பாடம் தவிர மற்ற பாடங்களில் ஊதிய உயர்வு பெற்றிருந்தார் அவர்களின் பணி பதிவேட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் தமிழ்நாடு தொடக்க கல்வித்துறைக்கு விரைவில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் மருத்துவம் பார்க்கலாம்; தமிழக அரசு அசத்தல் திட்டம்!

0

திமுக தேர்தலுக்காக பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்த நிலையில் திமுக வெற்றி பெற்றவுடன் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றது. அதில் அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை சார்பாக மக்களுக்கு மருத்துவம் சார்ந்த நலத்திட்டங்களை செய்வதில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றது.

சென்னை பெரியார் அரசு மருத்துவமனை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் பெரியார் நகரில் முக்கிய மருத்துவ பிரிவுகளுடன் ஆறு தளங்களில் சுமார் 560 படுக்கைகளுடன் பெரிய மருத்துவமனையை உருவாக்கிய நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி திறந்து வைத்தார்.

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு ஜூன் 15ஆம் தேதி திறந்து வைத்துள்ளார். 240 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் படுகைகள் மற்றும் 15 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் செயல்பட தொடங்கி இருக்கின்றது.

மேலும் இந்த மருத்துவமனைகளின் மூலம் லட்சக்கணக்கான புறநானிகளும் உள்நோயாளிகளும் பயனடைந்து வருகின்றனர். அதுபோலவே சென்னை ஓமந்தூர் அரசு உயர்தரப்பு மருத்துவமனை மேம்பாடு செய்யப்பட்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த மருத்துவமனையில் நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை, புற்று நோயை அறுவை சிகிச்சை, இருதயம் மற்றும் நெஞ்சு அறுவை சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது போலவே பல்வேறு மருத்துவ உதவிகளை திமுக ஆட்சி செய்து வரும் நிலையில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவன திட்டத்தின் மூலமாக கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, சென்னை, கீழ்பாக்கம் மற்றும் ஆவடி ஆகிய இடங்களில் ஆறு புதிய மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இலவச மருந்தகமும் ஒவ்வொரு பகுதிகளும் திறந்து வைத்து பயன்பாட்டில் இருப்பதால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் திமுக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால் இதைவிட அதிக நலத்திட்டங்களை செய்ய காத்திருப்பதாக திமுக சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 2026 தேர்தலில் யார் வெற்றி அடைவார்கள் என மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; ஜூன் 30 ஆம் தேதி வரை தான் டைம்!

0

ரேஷன் கார்டு என்பதும் மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெற முடியும். தற்போது ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் ரேஷன் கார்டில் புதுப்புது அப்டேட்கள் வெளியாகி வருகின்றது. ரேஷன் கார்டில் eKYC  என்பது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை பயன்படுத்தி தங்களது அடையாளத்தை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 2.26 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில் உண்மை தன்மையை உறுதிப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டுகளில் உள்ள உறுப்பினர்கள் விரல் ரேகையை பதிவு செய்வதற்காக கால அவகாசம் தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு  நிரந்தரமாக சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பல குடும்ப அட்டைகளில் தற்போது வரை நீக்கப்படாமல் உள்ள நிலையில் மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அதனால் அவர்களுக்கும் உணவுப் பொருட்கள் தொடர்ந்து ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதால் மோசடிகள் ஏற்படுகின்றது.

இந்த முறைகேடுகளை தடுப்பதற்காக பயணிகளின் உண்மை தன்மையை உறுதிப்படுத்தவும், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் கைரேகையும் ஆதார் சரிபார்ப்பு மூலம் உறுதி செய்யுமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் ரேஷன் கடைகளில் விற்பனை முனைய கருவிகள் மூலமாக ரேஷன் அட்டைதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு. ஆதார் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் இந்த பணி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பல லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்யாமல் இருக்கும் நிலையில் ரேஷன் கார்டு eKYC காலக்கெடு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதனால் தற்போது வரை விரல் ரேகை பதிவு செய்யாத பயனாளர்கள் உடனடியாக தங்களுடைய அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் எனவும் அப்போதுதான் அரசு வழங்கும் திட்டங்களை தொடர்ந்து பெற முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால அவகாசத்திற்குள் ரேஷன் கடைகளில் சென்று விரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கு பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.