கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஆண்டுகளில் கணிசமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்நிலையில் சென்னை மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு உடல் நல குறைவு காரணமாக கேகே நகர் இ எஸ் ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் திடீரென அவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் சென்னையின் அண்மையில் ஏற்படும் மரணம் என குறிப்பிட்டுள்ளது. இது பொதுமக்கள் இடையே மிகவும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 1,010 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் சுமார் 69 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தற்போது கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று மீண்டும் வேகம் எடுத்து வரும் நிலையில் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கூட்டணி வேணும்னா இதை செய்து தான் ஆக வேண்டும்.. அதிமுக-வுக்கு பிரேமலாத போட்ட ஆர்டர்!!
ADMK DMDK: தமிழகத்தில் உள்ள ஆறு எம்பிக்களின் பதவியானது வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், மாநிலங்களவை தேர்தலானது அம்மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆறு சீட்டுக்களில் நான்கு திமுகவும் மீதமுள்ள இரண்டு சீட்டுகள் அதிமுக வசம் உள்ளது. திமுக தனது கழக நிர்வாகிகள் மூன்று பேருக்கும் மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு ஒரு சீட்டு என்று ஒதுக்கி உள்ளது.
இரண்டு சீட்டுகளை கையில் வைத்திருக்கும் அதிமுக யாருக்கு வழங்குவது என்று ஆலோசனை செய்து வருகிறது. குறிப்பாக தேமுதிக ஒரு சீட்டு கேட்டு கோரிக்கை வைத்துள்ளது. கடந்து முறை கூட்டணி கட்டியாக இருந்த அன்புமணி, மேலும் ஜி கே வாசனுக்கு எம் பி சீட் கொடுத்தீர்கள். அதேபோல இம்முறையும் கூட்டணி கட்சிக்கென்று ஒரு சீட்டு வழங்க வேண்டும்.
அதுமட்டுமின்றி கடந்த முறை பாமகவுக்கு சீட் வழங்கி, அவர்கள் உங்களுக்கு கூட்டணியில் எந்த ஒரு பக்க பலமாகவும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் எம்பி சீட் வழங்குவதாக அதிமுக எங்களுக்கு ஒப்புதல் கொடுத்ததாகவும் பிரேமலதா கூறியுள்ளார். ஆனால் அதிமுக தலைமை இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் தனது வாரிசை டெல்லிக்கு அனுப்பி எம்பியாக பார்க்க வேண்டும் என் பிரேமலதா நினைக்கிறார்.
அதேபோல சீட்டு வழங்கினால் மட்டும் தான் கூட்டணி வைப்போம் என்ற முடிவில் பிரேமலதா உள்ளாராம். எடப்பாடி பழனிச்சாமிக்கு எம் பி சீட் குறித்து அதிக நெருக்கடி இருப்பதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இம்முறை எம்பி சீட் கூட்டணி கட்சிக்கு வழங்காமல் மூத்த நிர்வாகிகளுக்கு வழங்குமாறு மற்றொருபக்கம் பரிந்துரை செய்து வருகின்றனர். யாருக்கு இந்த எம்பி சீட் கிடைக்கும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ரேஷன் அட்டை இல்லவதவர்களுக்கும் ரூ 1000 உரிமைத்தொகை!! உடனே இப்படி விண்ணப்பியுங்கள்!!
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற பொழுது திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அதில் ஒன்றாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தின் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திட்டத்தை அமல்படுத்தியது. மேலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த குடும்ப தலைவிகள் பயனாளியாக சேர்க்கப்படவில்லை இந்நிலையில் தமிழகத்தில் 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் மட்டுமே உரிமைத் தொகையை பெறுகின்றனர். தகுதியான பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் இன்று முதல் விண்ணப்பம் பெறப்படும்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் சுமார் 9000 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெறும் நிலையில் இந்த முகாமின் மூலம் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் நேரடியாக சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் மேலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ,100 நாள் வேலை வாய்ப்பு திட்ட அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, விண்ணப்பிக்கும் குடும்ப தலைவியின் பெயரில் இருக்கும் வங்கி பாஸ்புக் மற்றும் மொபைல் எண் ஆகியவை முக்கியமான ஆவணம்.மேலும் விண்ணப்பதாரர்கள் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமிற்கு நேரடியாக சென்று தங்களுடைய விண்ணப்பங்களை கொடுக்கலாம்.
10 மற்றும் +2 முடித்த மாணவர்களே.. அரசு டிப்ளமோ கல்லூரியில் சேர விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் இந்த மாதத்தில் தொடக்கத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான மாணவ சேர்க்கை நடைபெறுகிறது.
நடப்பு கல்வியாண்டு அதாவது 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்பொழுது தொடங்கியிருக்கிறது.கடந்த மே 7 அன்று சேர்க்கை முறை தொடங்கப்பட்ட நிலையில் வருகின்ற மே 31 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.
தமிழகத்தில் மொத்தம் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு கொண்டிருக்கிறது.இது தவிர 32 அரசு உதவிபெறும் பாலிடெக்னி மற்றும் 414 தனியார் பாலிடெக்னி கல்லூரிகள் இயங்கி கொண்டிருக்கிறது.தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மொத்தம் 1 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றது.
இதில் 55 அரசு பாலி டெக்னிக் கல்லூரிகளில் 20,500க்கும் அதிகமாக இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.32 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 14,000 இடங்களும் இருக்கிறது.10 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.அதேபோல் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் சேர சேர்க்கை கட்டணம் ரூ.2000 முதல் ரூ.2500 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் இருப்பவர்கள் http://tnpoly.in/ என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு.. இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு எக்ஸாம்க்கு ரெடி ஆகுங்க!!
தமிழக அரசு பணிக்கு தகுதியான நபர்கள் TNPSC அதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் மூலம் பணியமரத்தப்படுகின்றனர்.தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் பல்வேறு துறைகளுக்கு தகுதியான நபர்களுக்கான ஆட்சேர்ப்பு அவ்வப்போது எழுத்து தேர்வின் மூலம் நடைபெறுகிறது.
கல்வித் தகுதி,வயது வரம்பு உள்ளிட்டவற்றை பொருத்து போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1,குரூப் 2 மற்றும் குரூப் 2A,குரூப் 4,குரூப் 5.குரூப் 6,குரூப் 7,குரூப் 8 என்று பல தேர்வுகளை நடத்தி வருகிறது.
குரூப் -1
துணை கலக்டெர்,DSP,பதிவுத் துறை,கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது.
குரூப் -2 மற்றும் குரூப் -2A
நகராட்சி ஆணையர்,துணை பதிவாளர்,உதவி பிரிவு அதிகாரி,துணை வணிக வரி அதிகாரி,நன்னடத்தை அலுவலர்,திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல பணிகளுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
குரூப் -3
கிராம நிர்வாக அலுவலர்,தட்டச்சர்,இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.
குரூப் -4:
இளநிலை உதவியாளர்,தட்டச்சர்,கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.
TNPSC தேர்வு:
வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.அடுத்து செப்டம்பர் 28 குரூப் 2 மற்றும் 2A நடைபெற உள்ளது.
இந்த இரு தேர்வுகளும் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.இந்த தேர்வு மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும்.தமிழ் மொழி கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கும்,பொது ஆய்வுகள் மற்றும் திறன் மற்றும் மனத்திறன் தேர்வு 150 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.
போட்டி தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை ஆய்வு செய்ய வேண்டும்.6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை படித்த பிறகு முந்தைய ஆண்டு வினாத்தாள்களை படிக்க வேண்டும்.பிறகு தேர்வு முந்தைய 6 மாதங்களுக்கான நடப்பு நிகழ்வுகள் பற்றி அறிந்திருக்க வேண்டும். தினமும் தேர்வு பாடத்தை படித்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடேங்கப்பா ஒரு நாள் நைட்டுக்கு இத்தனை லட்சமா? டிராகன் பட நாயகி சிக்கியது எப்படி?
தமிழகத்தில் தற்பொழுது டாஸ்மாக் ஊழல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.டாஸ்மாக்கில் கிட்டத்தட்ட 1000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.இது குறித்த புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை சம்மந்தப்பட்டவர்கள் மீது FIR பதிவு செய்தது.
இதையடுத்து அமலாக்கத்துறை டாஸ்மாக் ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் வீடுகள்,அலுவலகங்கள் மற்றும் சொந்தமான இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டது.விசாரணைக்கு பின்னர் டாஸ்மாக்கில் 1000 கோடி வரை ஊழல் நடந்திருக்கிறது என்பதை அதிகார்பூர்வமாக அறிவித்தது.
கடந்த மே 16 அன்று ரத்தீஷ்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருங்கிய நண்பர்கள்,திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
டாஸ்மாக் ஊழல் விசாரணை பரபரப்பை கிளப்பியிருக்கும் நிலையில் பிரபல நடிகை கயாடு லோகருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி தற்பொழுது ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.
டிராகன் படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கயாடு லோகர்.இவர் தற்பொழுது சிம்பு,ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.டிராகன் வெற்றிக்கு பின்னர் கோலிவுட்டில் டாப் இடத்தில் இருக்கும் நடிகை கயாடு லோகர் டாஸ்மாக் ஊழல் வழக்கில் சிக்கியிருப்பவர்கள் நடத்திய இரவு பார்ட்டியில் கலந்து கொள்ள ரூ.35,00,000 வரை சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.இந்நிலையில் குறுகிய காலத்தில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் கயாடு லோகர் டாஸ்மாக் ஊழல் வழக்கில் தொடர்பு படுத்தப்படுத்தப்பட்டிருப்பது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வக்கீல் பீஸ் வேண்டாம்.. வீட்டிலிருந்தே ஈஸியாக உயில் எழுதலாம்!!
அந்த காலத்தில் சொத்துக்களை பிரிக்க உயில் உதவியாக இருந்தது.சொத்துக்களுக்கு சொந்தக்காரர் எழுதிய உயில் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்களுக்கு சொத்து வழங்கப்படும்.சொத்து வழக்கு,வாரிசுப் பிரச்சனை,சொத்துப் பிரச்சனை எதுவும் வராமல் இருக்க உயில் உதவியாக இருக்கிறது.
ஒருவர் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை மட்டுமே உயில் எழுதி வைக்க முடியும்.பிரச்சனையில் உள்ள சொத்து மற்றும் பூர்விக சொத்தை பிறருக்கு உயில் எழுதி வைக்க முடியாது.முன்பு சாதாரண வெள்ளைத் தாளில் உயில் எழுதி வைக்கப்படும் வழக்கம் இருந்தது.முறையாக உயில் எழுத வெள்ளைத் தாளில் ஸ்டாம்ப் பயன்படுத்தலாம்.பிறகு உயிலுக்கு சாட்சி கையெழுத்து இருவரிடம் வாங்கி பதிவு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த உயிலில் கையெழுத்திடுபவர்கள் உயிலுக்கு தொடர்பு இல்லாதவராக இருக்க வேண்டும்.முன்பெல்லாம் கைகளால் உயில் எழுதப்பட்டு வந்தது.ஆனால் தற்பொழுது அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது.வெள்ளைத் தாளில் உயில் எழுத வக்கீல் செலவு ஏற்படும்.ஆனால் ஆன்லைனில் உயில் எழுதினால் பணம் மற்றும் நேரம் மிச்சமாகும்.
சிக்கல் இல்லாத சொத்துக்கு உயில் எழுத வக்கீல் உதவி தேவையிருக்காது.ஆன்லைனில் எழுதும் உயிலை அடுத்த 5 ஆண்டிற்குள் புதுப்பிக்க வேண்டும்.ஆன்லைன் உயிலுக்கும் இரண்டு சாட்சி கையொப்பம் அவசியமாகும்.
நீங்கள் நம்பகத் தன்மை கொண்ட ஆன்லைன் சேவையை கண்டறிந்து உயில் எழுத வேண்டும்.ஆன்லைனில் உயில் எழுதுபவர்கள் தங்கள் முழு பெயர்,பிறந்த தேதி,சரியான விலாசம் ஆகியவற்றை பதவி செய்ய வேண்டும்.
பிறகு login செய்து சொத்து விவரங்கள்,முதலீடுகள் பணம் சம்மந்தப்பட்டவற்றை சரியாக பதிவிட வேண்டும்.இப்படி டிஜிட்டல் முறையில் உயில் எழுதுவது பாதுகாப்பானது மற்றும் பணச்செலவை குறைக்கும் விஷயமாக உள்ளது.
உடலுறவில் எல்லை இல்லா இன்பம் பெற ஆண் மலட்டு தன்மை நீங்க.. 1 முறை இந்த ட்ரிங்கை குடியுங்கள்!!
Male Infertility: இந்த காலகட்டத்தில் ஆண்கள் பெரும்பாலானோருக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ளது. இதனால் கருவறுதலில் தாமதம் என ஏற்பட்டு இல்லற வாழ்வு வரை பாதிப்பை சந்திக்க கூடும். அதுமட்டுமின்றி இன்றைய காலகட்டத்தில் இது ரீதியாக விவாகரத்தும் அதிகரித்துவிட்டது. இதற்கெல்லாம் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கணவர் உடலுறவில் ஆர்வம் இல்லாமல் இருப்பது எனக் கூறுகின்றனர். இதனை எல்லாம் நாம் பாரம்பரிய சித்த வைத்திய முறையில் குணப்படுத்தலாம்.
யாருக்கெல்லாம் ஆண் மலட்டுத்தன்மை உண்டாகும்??
பெண்ணின் கர்ப்பப்பைக்கு ஒரே ஒரு விந்தணு அனுப்புவதில் தான் இத்தனை சிரமமும். அந்த வகையில் விந்தணு குறைந்த காணப்படுவது தரம் இல்லாமல் இருப்பது இவை அனைத்திற்கும் வழி வகுக்கும்.
ஒரு சிலருக்கு தொற்று மூலமாக இதன் வீரியம் குறைந்து காணப்படும்.
இரண்டாவதாக வெரிகோஸ் பிரச்சனையாலும் இது பாதிக்கப்படும். அதன் நரம்புகள் விதைப்பையில் விரிவாக்கமடைந்து இந்த உற்பத்தியை குறைய செய்யும்.
அது மட்டுமின்றி சிலருக்கு டிஎன்ஏ ரீதியாகவும் பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு விந்து வெளியேறுவதில் சிக்கலை சந்திக்க கூடும்.
இதனோடு நமது உடலில் உண்டாகும் ஆன்டிபாடிகளும் இதற்கு எதிரானவை தான். மேலும் புற்றுநோய் கட்டிகள் ஹார்மோன் பிரச்சனை என இதே போல பல காரணங்கள் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டே போகலாம்.
சித்த வைத்திய முறையில் ஆண் மலட்டுத்தன்மையை சரி செய்வது எப்படி??
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை
தூதுவளைக் கீரை
பசலைக்கீரை
அரைக்கீரை
இவை அனைத்தும் காய்ந்தது தனித்தனியே 100 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உளுந்து 100 கிராம்
சிறு பருப்பு 100 கிராம்
கொண்டைக்கடலை 100 கிராம்
பச்சரிசி 1 கிலோ
ஏலக்காய் 5 கிராம்
மிளகு 10 கிராம்
ஆண் மலட்டு தன்மையை நீக்கும் சத்துமாவு செய்யும் முறை:
முதலில் மிக்ஸி ஜாரில் காய்ந்து உள்ள கீரைகளை தனித்தனி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அது நன்றாக அறைந்ததும் எடுத்து வைத்துள்ள பருப்பு வகைகள் ஏலக்காய் மிளகு உள்ளிட்டவற்றை சேர்த்து அரைக்க வேண்டும்.
இந்த சத்தமாக இரண்டு டீஸ்பூன் என்று அளவு காலை மற்றும் மாலை என இரு வேளையிலும் குடித்து வர ஆண் மலட்டுத் தன்மை நீங்கும்.
உங்களுக்கு வந்திருக்கும் காய்ச்சல் கொரோனாவா டெங்குவா இன்ஃப்ளூயன்ஸா வா?? இதோ இந்த அறிகுறிகள் வெச்சு கண்டுப்பிடியுங்கள்!!
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர்.கொரோனா தாகத்துடன் டெங்கு,இன்ஃப்ளூயன்ஸா போன்ற தொற்றுகளும் அவ்வப்போது எட்டி பார்த்துவிட்டு செல்கிறது.
இந்த மூன்று நோய் பாதிப்புகளும் ஒரே அறிகுறி கொண்டவையா இதனை எப்படி வேறுபடுத்தி அறிவது இவை எதனால் பரவுகிறது என்பது குறித்த முழு விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.எந்தஒரு நோய் தொற்றாக இருந்தாலும் வெப்ப மண்டல பகுதியில் எளிதில் பரவக் கூடியவாக இருக்கிறது.
கோவிட்,இன்ஃப்ளூயன்ஸா மற்றும் டெங்கு தொற்று ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருப்பதால் நோய் தொற்று அறிவது சவாலான விஷயமாக இருக்கிறது.கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா சுவாசம் சம்பந்தப்பட்டநோய் பாதிப்பாகும்.இது ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு எளிதில் பரவக் கூடியத் தன்மை கொண்டவை.
டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவக் கூடிய பாதிப்பாகும்.இது ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவாது.வைரஸ் மூலம் பரவும் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் 7 தினங்கள் வரை இருக்கும்.அதேபோல் டெங்கு காய்ச்சல் பாதிப்பின் அறிகுறியும் 7 நாட்கள் வரை காணப்படும்.
கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள்:-
1.தொண்டை வலி
2.இருமல்
3.மூக்கு ஒழுகுதல்
4.சுவாசப் பிரச்சனை
5.உடல் வலி
6.தலைவலி
டெங்கு அறிகுறிகள்:
1.லேசான தலைவலி
2.ரத்தக்கசிவு
3.உடல் சோர்வு
4.கடும் தலைவலி
5.மலத்தில் இரத்தம் வெளியேறுதல்
மேலே சொல்லப்பட்டுள்ள கொரோனா இன்ஃப்ளூயன்ஸா மற்றும் டெங்குவின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் சிறிதும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
நின்று கொண்டு தண்ணீர் குடிப்பவரா?? அப்போ கட்டாயம் இந்த பிரச்சனை வரும்!!
நின்று கொண்டு தண்ணீர் பருகலாமா?
தினசரி 2 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் அதனை அனைவரும் பின்பற்றுகிறார்கலா என்பதில் சந்தேகம்தான். அதிலும் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினால் பல விளைவுகளை சந்திக்க கூடும்.
தண்ணீர் குடிக்கும் போது நிற்க கூடாது என கூறுகின்றனர். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் வயிற்றுக்கு அதி வேகமாக சென்று பல்வேறு உபாதைகளை சந்திக்க நேரிடும்.
முதலாவதாக இரைப்பை குடல் பாதிப்பு:
நின்று கொண்டு தண்ணீர் அருந்தும் போது அது குடலுக்கு நேராக செல்வதால் அதன் மேற்புறம் மிகவும் பாதிப்பை சந்திக்க கூடும். இதனால் குடல் பாதை என அனைத்தும் பாதிக்கப்படும். செரிமானத்தில் பிரச்சனை உண்டாகும்.
சிறுநீரக செயலிழப்பு:
குடல் பிரச்சனைக்கு அடுத்து இருப்பது சிறுநீரக பாதிப்பு தான். நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது சிறுநீரகங்களில் உள்ள கிருமிகளை வெளியேற்றும் செயல் முறையின் வேகம் குறைந்து விடும். சிறுநீரகம் தனது பணியை முறையாக செய்யாத பட்சத்தில் சிறுநீரக தொற்று என தொடங்கி செயலிழப்பு வரை பல நோய்களை சந்திக்க கூடும்.
மூன்றாவதாக ஆர்த்ரைடிஸ்:
நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் ஆர்த்ரிடிஸ் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றது. முன்னதாகவே மூட்டுகளில் நீர்மங்கள் சமநிலையில் இருக்கும். அதனை இவை கலைப்பதாக கூறுகின்றனர்.
நான்காவதாக நரம்பு பிரச்சனை:
நமது உடலில் சிம்பதெட்டிக் நரம்பு வேலை செய்ய ஆரம்பித்தால் இதய துடிப்பு ரத்த நாளங்கள் என அனைத்தும் வீரியமடையும். இந்த பிரச்சனையானது நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது தான் உண்டாகும். இதுவே உட்கார்ந்து தண்ணீர் குடிக்கும் போது பாரா சிம்பதெட்டிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து உடலை லேசாக வைத்துக் கொள்ள உதவும்.