Home Blog Page 5918

நயன்தாராவா இல்ல வடிவேலுவா வைரலாகும் கேலி கிண்டல் புகைப்படம்

0

நயன்தாராவா இல்ல வடிவேலுவா வைரலாகும் கேலி கிண்டல் புகைப்படம்

நடிகை நயன்தாராவை கலாய்த்து நகைச்சுவை நடிகர் வடிவேலு புகைப்படத்துடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் சமூக வலைத்தள வாசிகள் கலாய்த்து வருகின்றனர்,

இந்திய அளவில் பிரபலமான Vogue என்ற பிரபலமான இதழின் அட்டைப் படத்திற்கு நயன்தாரா சமீபத்தில் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டார், அந்த இதழ் தென்னிந்திய அளவில் பிரபலமான நயன்தாராவை தென்னிந்திய சூப்பர்ஸ்டார் நடிகை என்று பெருமைப்படுத்தியது,

நயன்தாராவா இல்ல வடிவேலுவா வைரலாகும் கேலி கிண்டல் புகைப்படம்

தனது ட்விட்டர் பக்கத்திலும் நயன்தாரா Vogue படத்திற்கு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார், புகைப்படம் எடுத்தபோது அவர் மேக்கப் செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்,

இதில் நயன்தாரா தனது இளமை மாறி வருகிறது போல் தெரிகிறது, வயது முதிர்வு போல் தெளிவாக தெரிகிறது, இதனை சமூக வலைதளவாசிகள் நடிகர் வடிவேலின் புகைப்படத்தை நயன்தாரா முகத்துடன் ஒப்பிட்டு அவரைப்போலவே இவருக்கும் முகம் முதிர்வு போல் இருப்பதுபோல் காட்டி உள்ளார்கள், இந்த புகைப்படம் தற்போது நெட்டிசன்கள் கலாய்ப்பு கேலி கிண்டல்கள் உடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புகைப்படம்,

நயன்தாராவா இல்ல வடிவேலுவா வைரலாகும் கேலி கிண்டல் புகைப்படம்

புகழ்பெற்ற சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவு! இசையுலகம் இரங்கல்

0

புகழ்பெற்ற சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவு! இசையுலகம் இரங்கல்

மங்களூரு: பிரபல சாக்ஸபோன் இசை கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார். அவருக்கு வயது 69.

கர்நாடகாவின் மங்களூருவில் 1949 டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர் கத்ரி கோபால்நாத். கே.பாலச்சந்தரின் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு நடிப்பில் வெளியான டூயட் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து கோபால்நாத் இசை பணியாற்றியுள்ளார்.

அந்த படத்தில் அவரின் இசை பெருத்த வரவேற்பை பெற்றது. கத்ரி கோபால் நாத்தின் சேவையை பாராட்டி 2004ல் மத்திய அரசு பத்மஸ்ரீ வழங்கியது. தமிழக அரசின் கலைமாமணி பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.

கடந்த 3 மாதங்களாக கடுமையான உடல்நலக்குறைவால் அவர் பாதிக்கப் பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் அவர் மேற்கொண்டார்.  இருப்பினும், பலனளிக்காமல் மங்களூருவில் தனியார் மருத்துவமனையில் கத்ரி கோபால் நாத் காலமானார்.

அவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கத்ரி கோபால்நாதின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விசிக இல்லையென்றால் வன்னியர்கள் உள்ள மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது! திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசும் சர்ச்சை வீடியோ

0

விசிக இல்லையென்றால் வன்னியர்கள் உள்ள மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது! திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசும் சர்ச்சை வீடியோ

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. வடமாவட்டங்களில் செல்வாக்குமிக்க பாட்டாளி மக்கள் கட்சியை வீழ்த்த திமுக விடுதலைச் சிறுத்தைகளை பயன்படுத்தியது அம்பலமாகிவிட்டது, தலித் பகுதியில் பாமகவினரை ஓட்டு கேட்க விடாமல் அக்கட்சியின மாம்பழம் சின்னத்தை வரையவிடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவின் உத்தரவின் பேரில் சிறப்பாக செயலாற்றியது,

அதிமுகவை சேர்ந்த தலித் சமுதாயத்தை சேர்ந்த பிரமுகர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் கூட தலித் பகுதியில் சொல்லிக்கொள்ளும்படியான வாக்குகள் பாமகவிற்கு விழவில்லை இதன் காரணமாகவே அக்கட்சி செல்வாக்கு மிக்க இடங்களான விழுப்புரம்,கடலூர், அரக்கோணம்,தர்மபுரி, ஸ்ரீபெரும்புதூர் போன்ற வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடாளுமன்ற தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற முடியவில்லை,

இதற்கு முக்கிய காரணம் பாட்டாளி மக்கள் கட்சியை தலித் மக்களுக்கு எதிரானது போன்றன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி, இக்கட்சி செய்யும் அட்டூழியங்களை, பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியும் எதிர்த்தும் சிம்மசொப்பனமாக நிற்பதால், அக்கட்சியின் பொறுப்பாளர்கள் பாமகவை ஓட்டு கேட்க தங்கள் பகுதிக்கு விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டும் பணியில் ஈடுபட்டனர், ஏன் மாவட்ட அமைச்சர்களான சிவி சண்முகம் m.c. சம்பத் போன்ற வன்னிய அமைச்சர்கள் இருக்கும்போதே இந்த நிலைமைதான்.

இதற்கு பின்னால் நின்று செயலாற்றியது திமுக தான் என்பது ஜெகத்ரட்சகன் மற்றும் திருமாவளவன் இருவரும் பேசிக்கொள்ளும் ஆடியோ மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இருவரும் பேசிக்கொள்ளும் ஆடியோவில் ஜெகத்ரட்சகன் தான் அதிகம் பேசினார் அவர் பேசியது பின்வருமாறு,

தமிழ்நாட்டில் திருமாவளவன் கட்சி இல்லை என்றால் நாங்க வந்து அதாவது வட மாவட்டங்களில்(வன்னியர்கள்) நாங்கள் இருக்கும் இடங்களில் ஒரு காலனியில் கூட மாம்பழம் வரையப்படவில்லை, ஓட்டு கேட்க உள்ளே விடவில்லை எல்லா காலணியிலும் எனக்கு ஓட்டு விழுந்து உள்ளதால் தான் வெற்றி பெற்றேன், அத்தனையும் காலணி(தலித்) ஓட்டுதான் எனக்கு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஒரு இடத்தில் கூட மாம்பழம் வரையவிடப்படவில்லை, அப்புறம் ஒரு இடத்தில் நைட்ல போயி மாம்பழம் வரைந்துள்ளனர், மறுநாள் காலையில் மாம்பழம் சின்னம் மீது சாணியை வீசிச் இருக்கிறார்கள், இதுபோல நான் பார்க்கவில்லை.

எல்லா ஊர்களிலும் இதே தான் காலனியில் 646 ஓட்டுகளில் 642 ஓட்டுகள் எனக்கு விழுந்துள்ளது மீதி ஓட்டுகள் தெரியாமல் மாற்றி போட்டதால் என்னவோ தெரியவில்லை, வெறி பிடித்துப் போய் வேலை செய்தார்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி, வடமாவட்டங்களில் நீங்கள் இல்லை என்றால் நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது முடியாது என்று ஆனந்தத்துடன் வீடியோ உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. இது சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது,

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வன்னியர்களின் எதிர்ப்பு மிக பலமாக திமுக சம்பாதித்து உள்ளதால் ஜெகத்ரட்சகனை தேர்தல் பொறுப்பாளராக நியமித்து வெற்றி பெற்றுவிடலாம் என்று மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இதுபோன்ற சூழ்நிலையில் இந்த ஆடியோ விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்களிடையே பரவலாக வைரலாகி வருகிறது, பாமகவினர் இந்த வீடியோவை அனைத்து தரப்பு மக்களிடமும் காட்டி அதிமுகவிற்கு ஆதரவாக வாக்குகளை வேட்டையாடி வருகின்றனர்,

இந்த விஷயம் வெளியே தெரியவே ஜெகத்ரட்சகன் ஆடி போயுள்ளார், கலக்கத்தில் உள்ளார் என்ன செய்வது தெரியாமல் பொன்முடியும் அதிருப்தியில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்களின் பார்வைக்காக அந்த வீடியோ லிங்க் கீழே. வீடியோ பிடித்திருந்தால் எங்களது YouTube சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

#Gobackmodi டிவிட்டரில் ட்ரென்ட் செய்பவர்கள் மீது உளவுத்துறை கண்காணிப்பு! பாகிஸ்தானுடன் தொடர்பா என விசாரிக்க வாய்ப்பு

0

Gobackmodi டிவிட்டரில் ட்ரென்ட் செய்பவர்கள் மீது உளவுத்துறை கண்காணிப்பு! பாகிஸ்தானுடன் தொடர்பா என விசாரிக்க வாய்ப்பு

தமிழகத்திற்கு இன்று பிற்பகல் வருகை தர உள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களை வரவேற்க தமிழகம் தயாராகி வருகின்றனர்,

பிரதமர் மோடி மற்றும் ஜிங் பிங் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை, ஒட்டுமொத்த உலகத் தலைவர்களின் பார்வை பல்லவ தேசமான மாமல்லபுரத்தை நோக்கி திருப்பி உள்ளனர், இந்த சந்திப்பு நிகழ்வு இந்தியா சீனா நட்புறவில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என நம்பப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க இன்று தமிழகம் வரும் மோடிக்கு எதிராக #Gobackmodi என்ற வாசகத்தை வழக்கம்போல் ட்விட்டரில் ட்ரென்ட் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

#Gobackmodi என்று பதிபவர்கள் மீது உளவுத்துறை மற்றும் உள்துறை அதிகாரிகள் தங்கம் கண்காணிப்புப் பணியை தொடங்கியுள்ளனர், வழக்கமாக பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் திமுக மதிமுக போன்ற கட்சிகள் பலூன்கள் விட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்வார்கள், இது ஒருபடி மேல் போய் தனியாக ஒரு குழுவை அமைத்து அவர்களுக்கு குறிப்பிட்ட பணத்தை கொடுத்து  #Gobackmodi என்ற வாசகத்தை ட்விட்டரில் ட்ரென்ட் செய்ய வைத்து தமிழக மக்கள் என்றும் மோடிக்கு எதிராக இருக்கிறார்கள் என்ற மாயையை இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் பரப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,

தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியை சேர்ந்த மிக முக்கியமான செல்வாக்கு பொருந்திய பலத்துடன் இருக்கும் ஒருவர் இந்த செயலில் முன்னின்று செயல்படுத்தி வருகின்றார்.

தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இதுபோன்ற பணியை செய்து வருகிறது என பாஜகவினர் நேரடியாகவே பல இடங்களில் தெரிவித்து வருகின்றனர்.

தற்பொழுது மோடி- ஜி ஜின் பிங் இவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை பாகிஸ்தான் விரும்பவில்லை, காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு இந்தியாவுக்கு எதிரான உலக நாடுகளை அழுத்தம் கொடுக்க பாகிஸ்தான் திண்டாடி வருகிறது,
இதுபோன்ற சூழ்நிலையில் இச்சந்திப்பு நிகழ்ச்சி பாகிஸ்தானுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் ராஜதந்திரம் உலகத் தலைவர்களை இந்தியாவிற்கு ஆதரவாக திருப்பி உள்ளதால் என்ன செய்வதறியாமல் திகைத்து கொண்டிருக்கிறது,

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மோடி ஜி ஜின் பிங் சந்திப்பு நிகழ்வை தமிழக மக்கள் ஏற்காதது மாதிரி #Gobackmodi என்ற வாசகத்தை பாகிஸ்தானிலிருந்து பரப்ப ஏற்பாடு செய்துள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சமூக வலைத்தளங்களில் நாளை குழுவாக செயல்படும் #Gobackmodi என்ற வாசகத்தை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்பவர்கள் அனைவரும் உளவுத்துறையின் கண்காணிப்பில் நேரடியாக இருப்பார்கள், அவர்களுக்கும் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுடன் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த அதிகாரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் நேரடி பார்வை தமிழகத்தின் மீது விழுவதால் சமூக வலைதள வாசிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவில் உள்ள கட்சிகளில் மிகவும் வீரியமாக மத்திய அரசை எதிர்த்தது திமுக மட்டும்தான், இதனாலேயே வேலூர் தேர்தலில் முஸ்லிம் சமுதாய வாக்குகள் கிடைக்க வழிவகை செய்து தங்களது வெற்றிக்கு வழி வகுத்துக் கொண்டனர், பாகிஸ்தான் ஊடகங்கள் காஷ்மீர் விவகாரத்தில் திமுகவை பாராட்டி பாகிஸ்தான் முழுவதும் பிரபலப்படுத்தியது, வைகோவும் தன் பங்குக்கு மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார், இதனால் திமுக மற்றும் மதிமுகவின் ஐடி விங் பக்கம் மீது உளவுத்துறையின் பார்வை பலமாக விழும் என்பதில் சந்தேகமில்லை.

அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா? ராமதாஸ்-மோடி சந்திப்பின் பின்னணி!

0

அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா? ராமதாஸ்-மோடி சந்திப்பின் பின்னணி!

சென்னை: மாமல்லபுரத்தில் நாளை 11 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசவுள்ள நிலையில் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலை அறிவித்த பின் வன்னியர் வாக்குகளை வளைக்க திட்டமிட்ட திமுகவுடன் அறிக்கைப் போரை நடத்திக் கொண்டிருந்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று திடீரென பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dr Ramadoss meet with Prime Minister Modi-News4 Tamil Latest Online Tamil News Today
Dr Ramadoss meet with Prime Minister Modi-News4 Tamil Latest Online Tamil News Today

நடந்து முடிந்த கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இந்த கூட்டணியில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், மக்களவை தேர்தல் கூட்டணி உடன்படிக்கையின் படி அதிமுகவின் ஆதரவால் அன்புமணி மட்டும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார். ஏற்கெனவே தேசிய ஜனநாயக் கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ் மகன் ரவிந்தரநாத் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழகத்தின் சார்பில் அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கவில்லை. இந்த நிலையில், நீண்ட காலத்துக்குப் பிறகு ராமதாஸ் டெல்லிக்கே சென்று பிரதமர் மோடியை சந்தித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இன்று பிரதமர் மோடியை மருத்துவர் ராமதாஸ் சந்திக்கப் போகும் விவரமே பலருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை டெல்லி சென்றடைந்த மருத்துவர் ராமதாஸ், பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் நலன் கருதி பாமக சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் சார்பாக வெளியிடப்பட்டது. ஆனால், இது மட்டுமில்லாமல் வேறு சிலவும் விவாதிக்கப்பட்டது என்று தகவல்கள் கசிகின்றன. அதாவது கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக மோடி, தமிழகம் வந்த போது மற்ற தலைவர்களை விட மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார்.

Dr Ramadoss meet with Prime Minister Modi-News4 Tamil Latest Online Tamil News Today
Dr Ramadoss meet with Prime Minister Modi-News4 Tamil Latest Online Tamil News Today

இந்நிலையில் நடந்து முடிந்த அந்தத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றிருந்தால், கூட்டணியின் சார்பாக அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுப்பதாக பேசி வந்தார்கள். ஆனால், தேர்தல் முடிவு அதற்கு நேர்மாறாக வந்தது. அதன் பிறகு பாஜகவின் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையும் பதவியேற்றது. இதனையடுத்து அதிமுகவின் ஆதரவால் ஜூலை மாதம் தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பர்க்கபட்டது. ஆனால், தற்போது அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், வருகின்ற நவம்பர் மாதம் நாடாளுமன்றம் கூட உள்ளது. அதற்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்ய பிரதமர் மோடி விரும்புகிறார் என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

Dr Ramadoss meet with Prime Minister Modi-News4 Tamil Latest Online Tamil News Today
Dr Ramadoss meet with Prime Minister Modi-News4 Tamil Latest Online Tamil News Today

இந்த சந்திப்பின் பொது எழுவர் விடுதலை உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் பாமக சார்பாக மருத்துவர் ராமதாஸ் வைத்துள்ளார்.இத்துடன் மக்களவை தேர்தலில் அமைத்த கூட்டணி உடன்படிக்கைப்படி தமிழகத்தின் சார்பாக அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஏறக்குறைய பிரதமர் மோடியும் ஆதரவாக பேசியிருப்பதாகவும் கூறுகின்றனர்.

அடுத்து வரும் தேர்தல்களில் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க இந்த கூட்டணி அவசியம் என்று உணர்ந்த பாஜக அதற்கேற்றவாறு செயல்பட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதன் அடிப்படையில் தான் ஏற்கனவே மத்திய சுகாதார துறை அமைச்சராக பல்வேறு சாதனை திட்டங்களை செயல்படுத்திய தமிழகத்தை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு அமைச்சர் பதவி தருவது பற்றி விவாதித்து வருகிறார்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.


கை குலுக்கலா? கருப்பு பலூன்களா? என்ன நடக்கும்? எதிர்பார்ப்பு எகிறும் ஏக டென்ஷனில் மாமல்லபுரம் சந்திப்பு

0

கை குலுக்கலா? கருப்பு பலூன்களா? என்ன நடக்கும்? எதிர்பார்ப்பு எகிறும் ஏக டென்ஷனில் மாமல்லபுரம் சந்திப்பு
 
மாமல்லபுரம்: உலக நாடுகள் உற்று பார்க்க முனைந்திருக்கும் சீன அதிபர் ஜிங்பிங், பிரதமர் மோடி சந்திப்பை தமிழக அரசியல்கட்சியினர், மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது ஏக சஸ்பென்சாக இருக்கிறது. கருப்பு பலூன்களா? அல்லது கை குலுக்கலா என அனைவரும் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 
தமிழகத்துக்கும், கருப்புக்கும் முக்கிய தொடர்புகள் உண்டு. அது போன்று இல்லாமல் அதற்கு இணையான தொடர்பு பிரதமர் மோடிக்கும், கருப்புக்கும்  உண்டு. குறிப்பாக தமிழகத்தில். ஒவ்வொரு முறையும் அவர் தமிழகம் வரும் போது எல்லாம் வானத்தில் கருப்பு பலூன்களும், மண்ணில் கருப்புக் கொடிகளும் கச்சை கட்டி நிற்கும்.
 
அதற்கு பல உதாரணங்கள் உண்டு. 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம்12ம் தேதி.. பேரறிஞர் அண்ணாவின் சொந்த மாவட்டமான காஞ்சியில் திருவடந்தையில் ராணுவ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது தமிழகம் வந்தார் பிரதமர் மோடி. பாஜக, அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் ஒரு சேர நின்று, அவரை ஏகத்துக்கும் எதிர்த்தன.
 
#GoBackmodi என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்ட் ஆனது. தலைநகர் சென்னை, பின்னர் நாடு முழுவதும் என்று முதலிடத்தில் டிரென்டான இந்த எதிர்ப்பு, உலகம் முழுவதும் பரந்து விரிந்தது. கட்சியினர் மட்டுமின்றி பல தரப்பினரும் மோடியின் தமிழக வருகையை வரிந்து கட்டிக் கொண்டு எதிர்த்தனர்.
 
பின்னர் 2019ம் ஆண்டு ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, அதே ஆண்டு பிப்ரவரியில் திருப்பூர் பொதுக்கூட்டம், மார்ச் 1ல் கன்னியாகுமரி, மார்ச் 6 வண்டலூர் என தமிழகம் வந்து மோடிக்கு கருப்பு பலூன்களுமே, கருப்புக் கொடிகளுமே சாமரமாயின. இது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட, அநாகரிகமற்ற செயல் என்று பாஜக கூவி தள்ளியது.
 
ஆனாலும், எதிர்ப்பின் வேகம் குறையவில்லை. அதற்கு மிக சமீபத்திய உதாரணம்.. செப். 30ம் தேதி சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவுக்கு மோடி வந்த போதும் கருப்பு எதிர்ப்பு என்று வர்ணிக்கப்பட்ட கோபேக் மோடி இணையத்தில் டிரென்டானது. உலகளவிலும் அனைவர் கவனத்தை ஈர்த்தது.
 
இப்போது அதேபோன்றதொரு நிலைக்கு தமிழகம் வந்துவிடுமா என்று எதிர் பார்ப்பு ஏகத்துக்கும், கிளம்பி இருக்கிறது. காரணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜிங்பிங், பிரதமர் மோடி சந்திப்பு.

மோடி, ஜிங்பிங் சந்திப்பதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி அழைப்பில்,ஜிங்பிங் நாளை சென்னை வருகிறார். 12ம் தேதியும் மாமல்லபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

சந்திப்பில், இருநாட்டு உறவுகள் மேம்பாடு, சர்வதேச பிரச்சனைகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் ஆலோசிக்கப்படுகிறது. மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சந்திப்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மோடியின் தமிழக வருகை எப்படி இருக்கும், தமிழக மக்கள் அதனை எதிர்கொள்ளும் மனநிலை என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. கருப்பு பலூனா அல்லது கைகுலுக்கலா என்று தெரியாத நிலை காணப்படுகிறது. தாய்நாடு மட்டுமல்ல, அதனை காண உலக நாடுகளும் காத்திருக்கின்றன.

2019 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

0

2019 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2019 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசுக்கான 2019 ஆம் ஆண்டின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் 7 முதல் அக்டோபர் 14 வரை ஒவ்வொரு துறைக்குமான நோபல் பரிசு தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஏற்கெனவே மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தற்போது வேதியியல் துறைக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் பி குட்எனாப், ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் அகிரா யோஷினே ஆகிய மூவரும் இந்தப் பரிசை வென்றதாக நோபல் பரிசுக்கான கமிட்டி அறிவித்துள்ளது. தற்போதைய எலெக்ட்ரானிக் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் லித்தியம் பேட்டரிகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக இந்த வேதியியல் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.

1970 ஆம் ஆண்டு ஸ்டான்லி விட்டிங்ஹாம் லித்தியம் பேட்டரிகளை முதன்முறையாக உருவாக்கினார். இந்த பேட்டரிகளின் செயல்திறனை ஜான் பி குட்எனாப் இரு மடங்காக உயர்த்தினார். அகிரா யோஷினோ லித்தியம் பேட்டரிகளில் உள்ள தூய லித்தியத்தை அகற்றி, லித்தியம் அயனிகளைப் பயன்படுத்தி அதன் பாதுகாப்பை மேலும் பன்மடங்காக அதிகரித்தார். வயர்லெஸ் மற்றும் படிம எரிபொருள் பயன்பாட்டில் இல்லாத சமூகத்தை உருவாக்க இவர்களின் ஆராய்ச்சி பயன்படும் என்று நோபல் பரிசு கமிட்டி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அடுத்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது. மேலும், இதனையடுத்து அக்டோபர் 11 ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், அக்டோபர் 14இல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுகளும் அறிவிக்கப்படவுள்ளதாக நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.

நாளை மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்திக்கும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு

0

நாளை சீன அதிபரை சந்திக்கும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு

பாரத பிரதமர் நாளை மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்திக்கும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுடன் திடீர் சந்திப்பு ஏன் என்று பல்வேறு குழப்பங்கள் உருவாக்கிய சூழ்நிலையில் பாமகவின் சார்பாக இது குறித்த விரிவான அறிக்கை வெளியாகி உள்ளது.அதில் குறிப்பிட்டுள்ளதாவது.

7 தமிழர்களை விடுதலை செய்ய கோரிக்கை

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் இன்று காலை 11.30 மணிக்கு சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு 20 நிமிடங்களுக்கு நீடித்தது.

இந்திய – சீன உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான பேச்சுக்கள் நாளையும், நாளை மறுநாளும் வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடைபெறுவதை சுட்டிக்காட்டிய மருத்துவர் அய்யா அவர்கள், இதனால் தமிழக மக்கள் பெருமையடைவதாகவும், இதற்காக தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் மருத்துவர் அய்யா அவர்கள் கூறினார்கள்.

29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி பிரதமரிடம் மனு ஒன்றை மருத்துவர் அய்யா அவர்கள் வழங்கினார். பிரதமரிடம் மருத்துவர் அய்யா வழங்கிய மற்றொரு மனுவில் கோதாவரி – காவிரி ஆறுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

மனுக்களை பெற்றுக் கொண்ட பிரதமர் அவர்கள், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் சாதகமான முறையில் பரிசீலிப்பதாக உறுதியளித்தார். பிரதமருடனான மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் சந்திப்பு மிகவும் சுமூகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்தது.

பிரதமரிடம் மருத்துவர் அய்யா அவர்கள் அளித்த மனுக்களின் விவரம் வருமாறு:

மனு எண் 1: 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்

பொருள்: 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்யக் கோருதல் & தொடர்பாக

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் உணர்வுகள் மற்றும் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நோக்கம் கொண்ட மனிதநேய கோரிக்கை மீது இந்தியப் பிரதமராகிய தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தமிழ்நாட்டு மக்களின் சார்பில் இந்தக் கடிதத்தை தங்கள் முன்வைக்கிறேன்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ‘‘நலமா மோடி?’’ நிகழ்ச்சியில் ‘‘எல்லோரும் சவுக்கியம்’’ என்று தமிழில் கூறி இந்தியர்களின் நலனை அமெரிக்க வாழ் மக்களிடம் தெரிவித்ததன் மூலமும், நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொது அவைக் கூட்டத்தில் கணியன் பூங்குன்றனாரின்,‘‘ யாதும் ஊரே, யாவரும் கேளீர்’’ என்ற வரிகளைக் கூறி, உலக அளவிலான ஒற்றுமையை வலியுறுத்தியதன் மூலமும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் தாங்கள் நீங்காத இடம் பிடித்திருக்கிறீர்கள்.

தொடர்ந்து செப்டம்பர் 30&ஆம் தேதி சென்னை விமான நிலையம், ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழா, ஐ.ஐ.டி ஆராய்ச்சிப் பூங்காவில் நடைபெற்ற சிங்கப்பூர் & இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சி ஆகியவற்றில் உரையாற்றும் போது தமிழர் கலாச்சாரம், உணவு வழக்கங்கள், தமிழர் நாகரிகம் ஆகியவை குறித்து தாங்கள் குறிப்பிட்ட தகவல்கள் தமிழர்களுக்கும், தங்களுக்கும் இடையிலான உறவையும், உணர்வையும் நெருக்கமாக்கியிருக்கின்றன. தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதற்கு இந்த நெருக்கம் தங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தொடக்கத்தில் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டு, பின்னர் பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டது. இவர்கள் அனைவரும் 1991&ஆம் ஆண்டு முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு எந்த தொடர்பும் இல்லை; அவரது வாக்குமூலத்தை தாம் திரித்து எழுதியதால் தான் அவர் தண்டிக்கப்பட்டார் என்று இந்த வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி தியாகராஜன் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்து அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக கே.டி.தாமஸ், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்டோர் குற்றம் செய்திருப்பார்கள் என்று தாம் நம்பவில்லை என்றும், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்கள் ராஜிவின் துணைவியாரான சோனியா காந்திக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.

7 தமிழர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா? மாநில அரசுக்கு உள்ளதா? என்பது குறித்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6&ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161&ஆவது பிரிவின்படி தமிழக ஆளுனர் மூலம் 7 தமிழர்களையும் தமிழக அரசு விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அதனடிப்படையில், 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு செப்டம்பர் 9&ஆம் தேதி நிறைவேற்றி தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. அதன்மீது ஆளுனர் விரைந்து முடிவெடுப்பார் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்தது; காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழக அமைச்சரவையின் பரிந்துரை அனுப்பப்பட்டு நேற்றுடன் ஓராண்டும், ஒரு மாதமும் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அதன் மீது தமிழக ஆளுனர் அலுவலகம் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்த தாமதம் உலககெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்துள்ளது.

7 தமிழர்களை விடுதலை செய்ய சட்டப்படியோ, அரசியல் ரீதியாகவோ எந்த தடையும் இல்லை. அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு; அதில் வேறு யாரும் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதேபோல், 7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராஜிவ் காந்தியின் துணைவியார் சோனியா காந்தி அவர்களும், புதல்வர் ராகுல் காந்தி அவர்களும் பல்வேறு கால கட்டங்களில் கூறியுள்ளனர். 7 தமிழர்களையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், கேரள முன்னாள் சட்ட அமைச்சருமான வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தினார்.

7 தமிழர்களை விடுதலை செய்ய வலுவான காரணங்கள் உள்ளன; அவர்களின் விடுதலைக்கு எதிராக எந்த காரணமும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது அவர்களின் விடுதலை தொடர்பான முடிவை ஆளுனர் தாமதிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. அதுமட்டுமின்றி, 7 தமிழர்களும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவர்களை தொடர்ந்து சிறைகளில் அடைத்து வைத்திருப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படக் கூடும்.

பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் பியாந்த்சிங் கடந்த 1995-ஆம் ஆண்டு மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்ட வழக்கில் முதன்மைக் குற்றவாளியும், பாபர்கல்சா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவருமாகிய பல்வந்த்சிங் ரஜோனாவின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநில சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பாபர்கல்சா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 8 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. தடா சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரின் தண்டனையையும் சீக்கிய குருமார்களில் ஒருவரான குருநானக் அவர்களின் 550&ஆவது பிறந்தநாளையொட்டி மத்திய அரசு குறைத்துள்ளது. இதே கருணையை 7 தமிழர்களிடமும் காட்டுவதற்கு எந்தத் தடையும் இருக்காது என்று நம்புகிறேன்.

எனவே, உலகெங்கும் உள்ள தமிழர்களின் கோரிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில், தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தில் பரிந்துரைத்துள்ளவாறு 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாண்புமிகு பிரதமராகிய தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அதற்காக ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் தங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பல்லவ தேசத்தில் சீன அதிபர் தமிழகத்தின் வரலாறு பக்கம் மீது உலக தலைவர்களின் பார்வையை திருப்பிய மோடி

0

பல்லவ தேசத்தில் சீன அதிபர், தமிழகத்தின் வரலாறு பக்கம் மீது உலக தலைவர்களின் பார்வையை திருப்பிய மோடி.

சரித்திரத்தில் இடம் பெறவிருக்கும் சீன அதிபர் ஜி ஜின் பிங் மற்றும் இந்திய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி, உலக தலைவர்களின் பார்வையை தமிழகத்தின் பக்கம் பல்லவ மன்னன் தேசத்தில் திருப்பி உள்ளது. உலக அரங்கில் தமிழனின் பெருமையை மீண்டும் ஒரு நிகழ்கால சரித்திரத்தை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார், அதற்காக தமிழர்கள் அவருக்கு நன்றியை செலுத்த வேண்டும்.

சீனாவிற்கும் தமிழருக்கும் தொப்புள்கொடி உறவு பண்டைய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. புத்த மதத்தை சீனாவில் பரப்பி இன்று உலகில் மூன்றாவது பெரிய மதமாக மாறி இருப்பதற்கு தமிழன் தான் காரணம். உலக தற்காப்பு கலைகளில் முதன்மையான குங்ஃபூ கலையை தமிழன் தான் சீனாவிற்கு கற்றுக் கொடுத்தான் என்பது வரலாறு.

தமிழனுக்கு மட்டுமே சொந்தமானகலையை இன்று சீனா தனக்குதான் உரித்தானது என்று காப்புரிமை பெற்றுவிட்டது. ஆனால் அது தமிழகத்தில் இருந்து சென்றவை தான் என்பது 95 சதவிகித உலக வாழ் மக்களுக்கு தெரியாது, காரணம் அந்த அந்த அளவு தமிழனின் பெருமையையும் கலாச்சாரத்தையும் நாம் மறந்துவிட்டோம், மறக்கடித்து விட்டோம்.

பல்லவ மன்னன் போதிதர்மன் தமிழகத்திலிருந்து கலையை எடுத்துச் சென்று இன்று வல்லரசான சீனாவிடம் கொடுத்துவிட்டான் என்பது வரலாறு, ஆனால் அதனை நாம் மறந்து விட்டோம்.

பல்லவ மன்னன் தேசத்திற்கும் சீனாவிற்கும் இருந்த உறவை எவராலும் மறுக்க முடியாது அந்த அளவுக்கு பொருளாதார ரீதியாகவும் பண்பாட்டு முறையிலும் நட்பாக இருந்தனர்.

உலக தலைவர்களை மோடியின் ராஜதந்திரம் இந்தியாவின் தமிழகம் பக்கம் கம்பீரமாக திருப்பி உள்ளார், அவர் நினைத்திருந்தால் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை அவருக்கு பெரும் ஆதரவு கொடுக்கும் வடமாநிலங்களிலோ அல்லது இந்தி பேசும் மாநிலங்களிலோ சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி இருக்கலாம், ஆனால் வரலாறு அறிந்தவன் என்றுமே வரலாற்று தவறை செய்யமாட்டான் என்பதை மோடி அவர்கள் தெளிவாக இருக்கிறார்,

இந்தியாவில் தமிழகம்தான் சீனாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வரலாற்றை நன்கு அறிந்து வைத்துள்ளார், பல்லவதேசமாகிய மாமல்லபுரத்தில் ஆசியக் கண்டத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்ற தலைவர்கள் சந்திப்பு நிகழ உள்ளது. இந்தியா-சீனா இடையே பல எல்லை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் இந்த சந்திப்பு நிகழ்வு தீர்த்து வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இருக்காது.

தமிழகத்தில் மோடி எதிர்ப்பு மாயை மிக தீவிரமாக கடைப்பிடிக்கும் திராவிட கட்சிகள் என்று சொல்லிக்கொள்ளும் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இந்த சந்திப்பு நிகழ்வு மூலம் விழிபிதுங்கி நிற்கின்றனர், மோடி எதிர்ப்பு பிம்பத்தை தமிழகம் முழுவதும் உருவாக்கி தனது ஊடக பலம் மூலம் மோடி எதிர்ப்பு விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கும் இக்கட்சிகளுக்கு மோடி அவர்கள் தனது பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடைபெறும் வர்த்தக போட்டியால் உலகம் முழுவதும் மிகப்பெரிய பொருளாதார சரிவை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை பிரச்சினை விஸ்வரூபமெடுக்கும் நிலையில் தற்போது உள்ளது, இப்படிப்பட்ட வல்லரசு நாடுகள் பார்வை தற்போது இந்தியா மீது அதுவும் தமிழகம் மீதும் விழுந்துள்ளது தமிழினத்தின் பெருமையை இன்று உலக அளவில் பேசும் பொருளாக மாற்றிய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழகம் மக்கள் என்றும் நன்றியை செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

நாளை பிற்பகல் சென்னை வந்தடையும் சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் என பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளோடு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து, விமான நிலையம் முதல் அவர் தங்கும் கிண்டி நட்சத்திர ஹோட்டல் வரை 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு, 6,800 பேர் வரவேற்பு அளிப்பார்கள். கல்லூரி மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அதிமுகவினர், சாலையின் இருமருங்கிலும் காத்திருந்து மூவர்ணக் கொடியையும், சீன கொடியையும் அசைத்து உற்சாக வரவேற்பு அளிப்பார்கள். அதோடு, விமான நிலையம் முதல் கிண்டி நட்சத்திர ஹோட்டல் வரை செண்ட மேளம், கோவை டிரம்ஸ் மற்றும் வட இந்திய நாசிக் டோல் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கிண்டியில் உள்ள ஐடிசி ஹோட்டலில் சீன அதிபரை வரவேற்கும் வகையில், நுழைவு வாயிலில் வாழை மற்றும் கரும்பிலான பிரமாண்ட வளைவு அமைக்கப்பட்டுள்ளது. மாலையில் ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் வரை 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு தரைவழி மார்க்கமாக செல்லும்போது, சுமார் 50,000 பேர் வழிநெடுகிலும் வரவேற்பு அளிப்பார்கள்.

ஐடிசி ஹோட்டல் முன்பு பாரம்பரிய நாதஸ்வர கச்சேரியும், சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே கரகாட்டம் மற்றும் டிரம்ஸ் கலைநிகழ்ச்சியும் நடைபெறும். காந்தி மண்டபம் அருகே தப்பாட்டம் குழுவினரின் அசத்தலான கலைநிகழ்ச்சியும், மத்திய கைலாஷில் மதுரை கரகாட்டமும் அரங்கேறும். திருவான்மியூரில் செண்ட மேளக் கச்சேரி மூலம் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதேபோல் கந்தன்சாவடி முதல் கோவளம் வரை பேண்ட் வாத்தியம் மற்றும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

திருவிடந்தை பகுதியில் மயிலாட்டமும், புலிக்குகை பகுதியில் துடும்பாட்டமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரம் நுழைவு வாயிலில் நாதஸ்வரம் மற்றும் மதுரை கலைநிகழ்ச்சிகள் மூலம் சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது

மாமல்லபுரத்தில் பனை ஓலைகளால் ஆன வளைவும், அர்சுனன் தபசு பகுதியில் மலர்களால் ஆன வளைவும், ஐந்து ரத சாலையில் காய்கறிகளால் ஆன வளைவும் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது .

கடந்த காலங்களில் 1956 டிசம்பர் 5ம் தேதி அன்றைய சீனப் பிரதமர் சூஎன்லாய், இரண்டு நாள் பயணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அன்றைய சென்னை மாகாண ஆளுநராக ஸ்ரீபிரகாசாவும், காமராஜர் முதல்வராகவும் இருந்தனர். சென்னை மாநகராட்சி மைதானத்தில், இன்றைய நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்ணா மேம்பாலத்திற்கு கீழ், அன்றைக்கு இருந்த ஜெமினி படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார். அதன் அதிபர் எஸ்.எஸ்.வாசன், தொழிலாளர்களுடன் சீனப் பிரதமரை வரவேற்றார். அன்றைய ஆனந்த விகடனும் இதுகுறித்து விரிவாக எழுதியிருந்தது. ஜெமினி ஸ்டுடியோவில் சினிமா படப்பிடிப்பையும், நாட்டியப் பேரொளி நடிகை பத்மினி நாட்டிய, நடனத்தையும் கண்டுகளித்து சூஎன்லாய் வியந்தார்.

சீன பிரதமரை வரவேற்க தமிழகமும் தமிழக மக்களும் ஆவலுடன் இருக்கின்றனர்.

தமிழகம் பட்டினி பிரதேசமாகி விட கூடாது! திமுகவை ஆதரித்து வைகோ பிரச்சாரம்

0

தமிழகம் பட்டினி பிரதேசமாகி விட கூடாது! திமுகவை ஆதரித்து வைகோ பிரச்சாரம்

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நேற்று இரவு கெடார், விக்கிரவாண்டியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் அங்கு பேசியதாவது.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் மத்தியில் திட்டமிட்டபடி ஆட்சி அமையவில்லை. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் இது நிறைவேறும். ஸ்டாலின் அறிவித்ததை செய்து தருவார்.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ரூ.1,450 கோடி வழங்க வேண்டி உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இதனை தருவார்களா? என்றால் நம்பிக்கை இல்லை.

மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதோடு இந்துத்துவாவை நிலைநிறுத்த பார்க்கிறது மோடி அரசு. இதை எதிர்க்க அ.தி.மு.க. அரசுக்கு திராணி கிடையாது.

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கவும், எதிர்த்து போராடவும் இந்த அரசுக்கு திராணி கிடையாது. வேளாண் பாதுகாப்பு மண்டலம் அமைக்க வேண்டும் என்று நாமெல்லாம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். ஆனால் அதை அமைக்காமல் பெட்ரோலிய கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதை தடுக்க தமிழக அரசுக்கு சக்தி இல்லை. இதனால் விவசாய விளைநிலங்கள் பாழாகி வருகிறது.

தமிழகம் பாலைவனமாகி விடக்கூடாது, பட்டினி பிரதேசமாகி விடக்கூடாது. இதற்கு இந்த ஆட்சி முதலில் தூக்கி எறியப்பட வேண்டும். தமிழர்களின் நலனை காக்க, விவசாயிகளின் நலனை காக்க தி.மு.க. ஆட்சி மலர வேண்டும். தமிழகத்தின் எதிர்காலத்தை காப்பாற்ற தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.