இந்த குறிப்பிட்ட விமானத்திற்கு மட்டும் வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை!
இன்று அதிகாலை சென்னை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் ஓன்று வந்தது. அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் விமானம் மற்றும் விமானநிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினார்கள். அதனால் இன்று காலை 7.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து தூபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருபதாக வந்த தகவலின் பேரில் சென்னையில்லிருந்து புறப்படும் விமானத்தில் சுமார் 160 பயணிகள் இருந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு யார் தகவல் அளித்தார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.