#Breaking: தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா நியமனம் ..!!

0
64
#image_title

#Breaking: தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா நியமனம் ..!!

விஜயகாந்த் அவர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம்(தேமுதிக) என்ற பெயரில் கட்சி தொடங்கினார். கடந்த 2011 ஆம் ஆண்டு வரை தேமுதிகவை சிறப்பாக வழி நடத்தி வந்த நிலையில் திடீர் உடல் நலக் குறைவால் கட்சி பொறுப்பில் இருந்து விஜயகாந்த் விலகினார்.

அதன் பின்னர் அவரது மனைவி பிரேமலதா கட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டு தொண்டர்களை வழிநடத்தி வந்தார். இந்நிலையில் இன்று அவர் தேமுதிகவின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இன்று தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை, திருவேற்காடு ஜி.டி.என்.பேலஸ் மஹாலில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த் அவர்கள் கலந்து கொண்ட நிலையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். தற்பொழுது நடைபெற்று வரும் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டிருக்கின்றனர்.