#breakingnews:! திரைப்பட பாணியில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை! அச்சத்தில் பெற்றோர்கள்!

0
58

சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து மூளைச்சலவை செய்து கஞ்சா விற்ற நபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

மாணவர்களை குறிவைத்து மூளைச்சலவை செய்து அவர்களுக்கு கஞ்சா விற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன.குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து திரைப்பட பாணியில் கஞ்சா விற்பனை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.மேலும் கஞ்சா கும்பலின் தலைவனை விருகம்பாக்கம் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அடுத்ததாக இதைக்குறித்து டி- நகர் துணை மாவட்ட காவல் ஆணையர் ஹரிகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறியதவாது,கஞ்சா கும்பலின் தலைவன் ஐசக் உள்ளிட்ட 13 பேரை கைது செய்துள்ளோம் என்றும்,இவர்களுக்கு கஞ்சா எப்படி கிடைக்கின்றது என்பதனை குறித்தும் இதனை எவ்வாறு விற்பனை செய்கின்றனர் என்பது குறித்தும்,
தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஹரிஹரன் அவர்கள் கூறினார்.

மேலும் இந்த கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடையவர்கள் அனைவரையும் விரைவில் கைது செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Pavithra