5 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய பொது போக்குவரத்து சேவை..!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!

0
65

பீகார் மாநிலத்தில் 5 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து சேவை இயங்கத் தொடங்கியது.

மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவியதால் அதனைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் கடந்த 5 மாதங்களாக பொது போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளது. அதன்பின்னர், மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து மத்திய அரசு. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் இ-பாஸ் நடைமுறையையும் ரத்து செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

பீகார் மாநிலத்தில், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவித பணியாளர்களுடன் இயங்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து சேவையும் இயங்குவதற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டே போக்குவரத்து இயக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து பயணம் செய்து வருகின்றனர்.

author avatar
Parthipan K