பெண்கள் அனுபவிக்கும் மார்பக வலி!! காரணங்களும் அதற்கான தீர்வுகளும் இதோ!!

Photo of author

By Divya

பெண்கள் அனுபவிக்கும் மார்பக வலி!! காரணங்களும் அதற்கான தீர்வுகளும் இதோ!!

Divya

மார்பு வலி பாதிப்பை பெரும்பாலான பெண்கள் சந்திக்கின்றனர்.மார்பு பகுதியில் தாங்க முடியாத வலி,மார்பு வீக்கம்,முலைக்காம்பு பகுதியில் சிவந்து போதல்,இரத்தம் மற்றும் தண்ணீர் போன்ற திரவம் வெளியேறுதல் என்று பெண்கள் பல்வேறு தொந்தரவுகளை சந்தித்து வருகின்றனர்.பெண்களுக்கு மார்புவலி ஏற்பட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

பெண்களுக்கு மார்பக வலி வர காரணங்கள்:

1)ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
2)கர்ப்பகாலம்
3)மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்
4)மருந்துகள் விளைவு
5)மார்பு அழுத்தம்
6)தாய்ப்பால்
7)இறுக்கமான உள்ளாடை அணிதல்

மார்பு வலி அறிகுறிகள:

1)மார்பில் வீக்கம்
2)மார்பில் கனத்தன்மை
3)மார்பில் கூர்மையான வலி
4)மார்பு குத்தல்
5)மார்பு பகுதியில் எரிச்சல் உணர்வு
6)முலைக்காம்பு வீக்கம்
7)முலைக்காம்பில் இரத்தம் கசிதல்
8)முலைக்காம்பில் துர்நாற்ற திரவம் வெளியேறுதல்

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி தாமதமாதல்,தாய்ப்பால் கொடுத்தல் போன்ற காரணங்களால் உடலில் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனை ஏற்படுகிறது.இந்த பாதிப்பால் மார்பு பகுதியில் வலி மற்றும் வீக்கம் உண்டாகிறது.

சில பெண்களுக்கு மாதவிடாய் தொடங்கும் சில நாட்களுக்கு முன் மார்பு பகுதியில் வலி உணர்வு ஏற்படும்.கர்ப்பம் தரித்த பெண்களுக்கு மார்பு வீக்கம் ஏற்படும்.குழந்தை பெற்ற தாய்மார்கள் பாலூட்டுவதால் மார்பு வலி ஏற்படுகிறது.

பெண்களுக்கு அதிகமான மன அழுத்தம் ஏற்படும் பொழுது மார்பு வலி பிரச்சனை ஏற்படும்.மார்பகத்தில் அடிபடுதல்,காயங்கள் உண்டதால் போன்ற காரணங்களால் மார்பு வலி வரும்.

எடுத்துக் கொள்ளும் மருந்தின் பக்க விளைவால் மார்பு பகுதியில் கடிமான வலி ஏற்படலாம்.மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட பெண்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாத வலி ஏற்படும்.மார்பு அறுவை சிகிச்சை செய்த பெண்களுக்கு மார்பு வலி வருவது இயல்பானது.

மார்பு வலி குறைவாகவோ அல்லது வலி ஆதிகமாகவோ இருந்தால் நீங்கள் அலட்சியம் செய்யக் கூடாது.நேரத்தை கடத்தாமல் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியது முக்கியம்.