குடிநீர் குழாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்!!

0
33

 

குடிநீர் குழாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்…

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் குழாய் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரத்தூர் அருகே கூட்டுக் குடிநீர் குழாய்க்காக சாலை ஓரம் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்த குடிநீர் குழாயில் பேருந்து சிக்கி லேசாக சரியத் தொடங்கிய பொழுது பேருந்தில் பயணம் செய்த அனைவரும் கீழே இறங்கினர்.

 

இதையடுத்து பேருந்து முழுமையாக சாய்ந்து அருகில் இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

 

காயம் அடைந்த அனைவரும் உடனடியாக திருக்காட்டுபள்ளி அரசு மருத்துவமனைக்கும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருககன்றனர்.

 

திருக்காட்டுப்பள்ளி மற்றும் சத்திரம் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் மழை பெய்து வந்தது. இந்த மழையில் குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்ட குழியில் மணல் உள்வாங்கிய நிலையில் இருந்ததுதான் இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.