மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.3,70,000 சம்பளம்! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

0
33
#image_title

மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.3,70,000 சம்பளம்! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் KIOCL நிறுவனத்தில் காலியாக உள்ள Chairman & Managing Director பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை PESB வெளியிடப்பட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்று அதாவது செப்டம்பர் 8 கடைசி நாள் ஆகும்.இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் அல்லது தபால் வழியாக வரவேற்க படுகின்றன.

வேலை: மத்திய அரசு பணி

நிறுவனம்: KIOCL

பதவி: Chairman & Managing Director

கல்வி தகுதி:

இப்பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்கள் அல்லது கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் CA,Post Graduate Degree,MBA,PGDM ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 45க்குள் இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊதியம்: Chairman & Managing Director பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.2,00,000/- முதல் ரூ.3,70,000/- வரை ஊதியம் கொடுக்கப்படும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்த பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் வழிமுறை: ஆன்லைன் அல்லது தபால் முறை

இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://pesb.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அல்லது இணையத்தில் தெரிவிக்கப்ட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.அதில் கேட்கப்பட்டுள்ள முறையான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

கடைசி தேதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இன்று அதாவது 8-9-2023 இறுதி நாள் ஆகும்.