கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை!சென்னையில் பரபரப்பு?

0
84

சென்னையில் குடும்பத் தகராறில் கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை திருவிக நகரைச் சேர்ந்தவர் உபயதுல்லா வயது 39 இவருக்கு நஸ்ரின் என்பவருடன் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் நஸ்ரின் மற்றும் உபயதுல்லா இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 ம் தேதி குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்த உபயதுல்லா மற்றும் நஸ்ரின் இடையே மீண்டும் சண்டை தொடர்ந்தது வாய் தகராறு முற்றவே எண்ணை சட்டியில் இருந்த கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து உபயதுல்லா மீது நஸ்ரின் ஊற்றினார் வலி தாங்க முடியாமல் உபயதுல்லா அலறவே அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது போலீஸ் வழக்குப்பதிவு செய்து நஸ்ரினை கைது செய்தனர் இந்நிலையில் தீவிர சிகிச்சையில் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உபயதுல்லா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மனைவியே கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றி கொலை செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
CineDesk