110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்: கடலூருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

0
78

கடலூர்; அன்னன்கோயில், புதுக்குப்பம் மற்றும் முடசலோடை உள்ளிட்ட கிராமங்களில் ரூ. 19.5 கோடியில் புதிய திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் அவை பின் வருமாறு:-

கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களான அன்னன்கோயில், புதுக்குப்பம் கிராமங்களில் உள்ள மீன் இறங்குதளங்கள் ரூ.10 கோடியில் புனரமைக்கப்படும் என்றும் முடசலோடை கிராமத்தில் மீன் இறங்குதளம் கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக ரூ. 9.50 கோடியில் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் இயற்கை காரணங்களால் மூடாதவாறு இருக்க ரூ. 27 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி துறைமுகத்தின் படகு அணையும் தளத்தை ரூ.25 கோடியில் விரிவுபடுத்தி கூடுதல் படகுகள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்படும்.

ராமநாதபுரம் – மண்டபம் வடக்கு மற்றும் தெற்கு) கிராமங்களில் ரூ.20 கோடியில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.

காஞ்சிபுரம் – புது குப்பம், உய்யாலி குப்பம் கிராமங்களில் ரூ.17 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.

தமிழக மீனவர் நலன்களுக்காக இந்த திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேலும் பல்வேறு பகுதிகளுக்கும் தொலைநோக்கு பார்வையிலான திட்டங்களை அறிவித்து எதிர்கட்சிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

author avatar
Parthipan K