முதல்வர் மு க ஸ்டாலினின் புதிய உத்தரவு! பின்பற்றப்படவில்லை என்றால் சொத்துக்கள் முடக்கம்!

0
123
Chief Minister M. Stalin's new order! Asset freeze if not followed!
Chief Minister M. Stalin's new order! Asset freeze if not followed!

முதல்வர் மு க ஸ்டாலினின் புதிய உத்தரவு! பின்பற்றப்படவில்லை என்றால் சொத்துக்கள் முடக்கம்!

முதல்வர் மு க ஸ்டாலின் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார் அந்த உத்தரவையில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வண்ணம் உள்ளது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையிலும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க முடியாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது எனவும்  மேலும் இந்த உத்தரவானது போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களிடம் இருந்து அவர்களின் சொத்துக்களை முடக்கம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த உத்தரவை தொடர்ந்து பின்பற்றினால் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்று பெயர் பெறலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது . மேலும் போதை பொருட்கள் இல்லாத  தமிழ்நாடு என்ற திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்க வைக்க உள்ளார்.

மேலும்  அதனை தொடர்ந்து போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி இன்று காலை 10:30 மணிக்கு அரசு பள்ளி ,அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் உறுதிமொழி அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
Parthipan K