மனைவியை சந்தேகப்பட்டு..!துப்பாக்கியால் சுட்டு நாடகமாடிய  கல் நெஞ்சக்கார கணவன்?…

0
139
Suspicious of his wife...
Suspicious of his wife...

மனைவியை சந்தேகப்பட்டு..!துப்பாக்கியால் சுட்டு நாடகமாடிய  கல் நெஞ்சக்கார கணவன்?…

குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா செட்டள்ளி பகுதியை சேர்ந்தவர் தான்  கோபால்.யாவருடைய வயது 43. இவரது மனைவி செஷ்மா வயது 34.இருவருக்கும் திருமணம் ஆகி மகள் உள்ளார். அவர் பெங்களூருவிலுள்ள சித்தி வீட்டில் தங்கியிருந்து 10ஆம்  வகுப்பு படித்து வந்துள்ளார்.

கணவன் மனைவி  இருவர் மட்டும் இங்கு வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோபால் மனைவி செஷ்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டது.இதனால் கணவன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அதிக தகராறு ஏற்பட்டது. பெருத்த  ஆத்திரமடைந்த கோபால் தன் மனைவி என்றும் பாராமல் செஷ்மாவை வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டார். இதில் துப்பாக்கி குண்டு செஷ்மாவின் நெஞ்சுபகுதியை துளைத்தது.

இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.கைது இதையடுத்து கோபால் பெங்களூருவிலுள்ள மகள் மற்றும் குடகிலிருந்த உறவினர்களிடம் செஷ்மா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் அளித்தார்.இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் விரைந்து ஓடி வந்து செஷ்மாவின் உடலை பார்த்து கதறி அழுத்தனர்.

மேலும் செஷ்மா தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என அவர்கள் கூறினார்கள். கணவன் தான் கொலை செய்திருக்கிறார் என்று  மடிகேரி போலீசாரிடம்  புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செஷ்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார்கள் நடத்திய  விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து கோபால் செஷ்மாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றது அப்பட்டமாக  தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோபாலை கைது செய்தனர்.

அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கணவனே தன் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வந்தது.

author avatar
Parthipan K