சொன்னா எவன் கேக்கறான் ?

0
69

சொன்னா எவன் கேக்கறான் ?

ஒரு இளைஞன் தன் குருவிடம் சென்று எனக்கு என் அம்மா திருமணம் முடிக்க ஆசைப்படுகிறார். எனக்குள் திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருக்கிறது. நான் எப்படிப்பட்ட பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது என குருவிடன் கேட்கிறான்.

குருநாதர் சொல்கிறார்…

அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும்!

அழகில்லாதவளை முடிக்காதே! ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமல் போகும்!

உயரமானவளை முடிக்காதே! ஒவ்வொரு வார்த்தை பேசும்போது உன் கழுத்து வலிக்கக் கூடும்!

குள்ளமானவளை முடிக்காதே! குனிந்து குனிந்து பார்க்க வேண்டியது இருக்கும்!

பருமனானவளை முடிக்காதே! உன் வருமானம் அவளுக்கு போதாது!

மெலிந்தவளை முடிக்காதே! வீட்டில் அவள் எங்கே இருக்கிறாள் என நீ தேடுவாய்!

வெள்ளையானவளை முடிக்காதே! அவளை பார்க்கும்போதெல்லாம் உனக்கு மெழுகுவர்த்திதான் ஞாபகம் வரும்!

கருத்தவளை முடிக்காதே! இருட்டில் அவளை கண்டு நீயே பயப்படுவாய்!,

படிக்காதவளை முடிக்காதே! நீ கூறுவதை அவள் புரிந்துகொள்ளமாட்டாள்!

படித்தவளை முடிக்காதே! உன் பேச்சையே அவள் கேட்கமாட்டாள்!

பணக்காரியை முடிக்காதே! உனக்கு அந்த இடத்தில் மரியாதை இருக்காது!

ஏழையை முடிக்காதே! உனது மரணத்திற்கு பிறகு உன் குழந்தைகளும் சிரமப்படும்!

அதிக அன்பானவளை முடிக்காதே! நீ வாழவும் இயலாது சாகவும் இயலாது!

கோபக்காரியை முடிக்காதே! உன் வாழ்க்கை நரகமாகிவிடும்!

அனைத்தும் தெரிந்தவளை முடிக்காதே! உன் மீது சந்தேகம் கொள்வாள்!

ஒன்றும் தெரியாதவளை முடிக்காதே! நீ வீட்டு வேலைக்காரனாய் மாறிவிடுவாய்!

அமைதியானவளை முடிக்காதே! நீ இறந்துபோனாலும் அவள் மௌனமாகத்தான் இருப்பாள்!

பரபரப்பானவளை முடிக்காதே! நீ சொல்வது அவள் காதில் விழாது!

ஊருக்குள்ளே பார்த்து முடிக்காதே! தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் அதை காண ஓடுவாள்!

தூரத்தில் பார்த்தும் முடிக்காதே! அடிக்கடி பயணம் செய்வதிலேயே உன் வாழ்க்கை முடிந்து போகும்!

என்று கூறி பெருமூச்சுவிட்டார் குருநாதர்.

இதை கேட்ட அந்த இளைஞன் கடுமையான கோபத்தோடு கேட்கிறான்,

“ஏன் குருவே இதற்கு நீங்கள் திருமணமே செய்ய வேண்டாம்!” என்று சொல்லிவிடுங்களேன்.

குரு சிரித்துவிட்டு சொல்கிறார்.

“சொன்னா எவன்டா கேட்கிறான்!”

 

author avatar
Kowsalya