கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை!!

0
14
Compensation amount increased to Rs. 8 lakh for construction workers!!
Compensation amount increased to Rs. 8 lakh for construction workers!!

வீடு கட்டும் பணியில் ஈடுபடக்கூடிய தொழிலாளர்களுக்கு பணி நேரத்தில் விபத்து ஏற்பட்ட அவர்களது உயிர் பிரியநேரத்தால் அவர்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசால் இழப்பீட்ட தொகை வழங்கப்பட்டு வந்தது. அதிலும் இதுவரை 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது அதனை 8 லட்சம் ரூபாய் ஆக உயர்த்துவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற துறை சார்ந்த மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது பேசிய சிவி கணேசன் அவர்கள் கூறியிருப்பதாவது :-

✓ தமிழகத்தில் 32 அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்களை உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய 67.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

✓ திருக்குவளையில் இருக்கக்கூடிய அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர்களுக்கான தங்கும் விடுதி அமைக்க 3.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

✓ தொலைதூர மாணவர்களுக்காக 50 தங்கும் விடுதிகள் அமைக்க 22.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

✓ கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடியவர்களுக்கு 2 இலவச முதியோர் இல்லங்கள் சென்னையில் அமைக்கப்பட உள்ளது.

✓ கட்டுமான நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடிய மற்றும் இல்லாத தொழிலாளர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் வழங்கப்படக்கூடிய 5 லட்சம் ரூபாய் தொகையை 8 லட்சம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

✓ ஆராய்ச்சி முனைவர் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் என 3 ஆண்டுகள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

✓ மேலும் பட்டப்படிப்பு முதுநிலை படிப்பு உயர்கல்வி தொழிற்கல்வி பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 1000 உயர்த்தி வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Previous articleநீட் தேர்வினை விலக்க இது ஒன்றுதான் வழி!! முதலமைச்சர் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்!!
Next articleGood bad ugly review: அஜித்தோட மேஜிக்.. நோ லாஜிக்!.. குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு!?….