ஐஐடி மாணவர்களை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தொற்று :!

0
69

அண்ணா பல்கலைக்கழக முதுநிலை மாணவிகள் விடுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை ஐஐடி-யில் உள்ள மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி அங்கே தங்கியுள்ள மாணவர்களில் ஏற்கனவே 104 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு வந்த நிலையில் , நேற்று மேலும் 79 பேருக்கு கொரோனா நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது . இதனால் சென்னை ஐஐடி -யில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் பாதிக்கப்பட்ட மாணவர்களை கிங் மருத்துவ மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் 6 பேருக்கு கொரோனா நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவரம் குறித்த உயர் கல்வித்துறை அறிக்கை கேட்டுள்ளது. மேலும் மாணவர்ளின் நலன்கருதி வகுப்புகள் தள்ளி வைப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K