ஸ்பெயின் அரச குடும்பத்தில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு : மற்றவர்கள் நிலை என்ன?

0
142

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல உயிர்களைக் கொன்று அனைவரையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருவதால் உலகெங்கும் 300 கோடி நபர்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பல நாடுகளின் அரசியல் தலைவர்களும் அரச குடும்பத்தினரும் தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்கத்திய நாடுகளான இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.

இந்த நிலையில் ஸ்பெயினில் உள்ள அரச குடும்பத்தைச் சார்ந்த இளவரசி மரியா தரசா கடந்த 26ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த இளவரசி மரியா இன்று சிகிச்சை பலனின்றி அகாலமரணம் அடைந்தார்.

பேரிஸில் பேராசிரியராக பணியாற்றி வரும் 86 வயதான இளவரசி மரியா ஸ்பெயினின் அரச குடும்பமான House of Bourbon-Paramaவை சேர்ந்தவர். உலக நாடுகளில் உள்ள அரச குடும்பங்களில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும்.

இந்த இந்த தகவலை அவரது சகோதரர் S.A.R. Don Sixto Enrique De Bourbon தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசி மரியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்களையும் பணியாற்றினார்களையும் தனிமைபடுத்தியுள்ளனர் இதனால் அவர்களது நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 1400 கடந்துள்ளது வேதனைக்குரிய விஷயமாகும்.

https://www.facebook.com/19500671771/posts/10158048260566772/
Previous articleபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி! கடவுள் போல காப்பாற்றிய காவலர்! உண்மையான துரைசிங்கத்திற்கு பொதுமக்கள் பாராட்டு..!!
Next articleவடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனை! கொரோனாவால் உலக நாடுகள் வேதனை! அங்கே என்னதான் நடக்கிறது.?