திமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா பாதிப்பு! ஒரே கட்சியில் தொடர்ந்து வருவதால் பீதி!

Photo of author

By Jayachandiran

திமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா பாதிப்பு! ஒரே கட்சியில் தொடர்ந்து வருவதால் பீதி!

Jayachandiran

Updated on:

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக ஆர்.டி.அரசு இருந்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆர்.டி.அரசு சேர்க்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மீண்டும் மற்றொரு எம்எல்ஏ பாதிப்பானது திமுக கட்சியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.