BREAKING: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த கடலூர் பெண் உயிரிழப்பு!

0
264

BREAKING: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த கடலூர் பெண் உயிரிழப்பு!

கடலூரில் கொரோனா வார்ட்டில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பெண்மணி திடீரென உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு கடலூர் அரசுமருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் அப்பெண்ணிற்கு நடத்தப்பட்ட கொரோனா பற்றிய பரிசோதனை முடிவு இன்னும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த செய்தி வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற உயிரிழப்பு சம்பவம் பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை அதிகரிக்க செய்துள்ளது.

ராமேஸ்வரத்தில் கடலில் மீன்பிடித்து கரைதிரும்பிய 8 மீனவர்கள் கைது செய்து தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். பாம்பன் துறைமுக கடற்கரையில் மாவட்ட சுகாதார அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மீனவர்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என்கிற சோதனை மேற்கொள்ள இருக்கின்றனர். இதனால் ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி பகுதியில் இருக்கும் கொரோனா தனிமை வார்டுக்கு 8 பேரையும் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் படகில் உள்ள குளிர்சாதனப் பெட்டியிலேயே கெடாமல் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Previous articleஊரடங்கு உத்தரவை மீறினால் கட்டாய சிறை! வெளிமாநிலத்தவரை விரட்டினால் கடும் நடவடிக்கை! -அமைச்சர் அதிரடி பேச்சு
Next articleநாளை முதல் குடும்ப அட்டைக்கான 1000 ரூபாய் வழங்கப்படும்! -தமிழக அரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here