தமிழக சித்த மருத்துவரை அழைத்த சீன அரசு! கொரோனா வைரஸை குணப்படுத்த விரைவில் பயணம்?

0
428

தமிழக சித்த மருத்துவரை அழைத்த சீன அரசு! கொரோனா வைரஸை குணப்படுத்த விரைவில் பயணம்?

சீனாவில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனால் தினமும் சீனாவில் நூற்றுக்கணக்கானோர் இறந்து வருகின்றனர். இந்த வைரஸ் தமிழகத்திலும் சிலரை பாதித்து உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த தமிழர் மரபு வழி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் அவர்களை, கொரோனா வைரஸை குணப்படுத்த சீன அரசின் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பினை அவரது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.

இவர், கொரோனா வைரஸ் ஒரு மனிதனை எப்படி கொல்கிறது. எந்த உறுப்பினை முதலில் தாக்குகிறது என்பதை ஆதாரங்களுடன் தமது முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார். கொரோனா வைரஸ் சிறுநீரகத்தை முதலில் செயலிழக்க செய்கிறது என்றும், பின்னல் கல்லீரல் செயலிழப்பதையும் கூறியுள்ளார். இந்த உடலுறுப்புகள் செயலிழப்பதை சித்த மருத்துவத்தின் மூலம் சரிசெய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார்.

என்னால் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும் என்று ஏற்கனவே ஊடகங்களில் சாவல் விடுத்துள்ளார். சீன அரசின் அழைப்பை ஏற்று விரைவில் கொரோனா வைரஸை குணப்படுத்த சீனாவிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் சித்தமருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும், கடந்த வருடம் தமிழகத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 500- க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சித்த மருத்துவ மூலிகை சிகிச்சையின் மூலம் காப்பாற்றியுள்ளார். வெறும் 24 மணி நேரத்தில் டெங்கு நோயை குணப்படுத்துவது இவரது சித்த மருத்துவத்தின் தனிச்சிறப்பாகும். பல்வேறு நோய்களுக்கு இயற்கையின் வழியில் தீர்வு காண முடியும் என்று பல்வேறு ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபணியின் போது அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
Next articleகேன் குடிநீரை நம்பியிருக்கும் சென்னை மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here