மகள்களுடன் நல்ல உறவு இல்லாததனால் காவிரி ஆற்றில் இறங்கிய தம்பதிகள் !

0
131

திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில் தம்பதியர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபகாலமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.திருச்சி மாவட்டம் காவிரி ஆற்றில் ஸ்ரீரங்கம் மாம்பழசாலை பகுதியில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில், பக்தர்கள் பாதுகாப்பாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அங்கு வந்த வயதான தம்பதிகள் இருவர், தங்க நகைகள் அனைத்தும் கோவில் உண்டியலில் காணிக்கையாக்கி விட்டு, காவிரி ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.அவர்கள் செயலைக் கண்ட பக்தர்கள் சந்தேகமடைந்து, காவல் துறைக்கு தகவல் கொடுத்து அவர்களைக் காப்பாற்றி அமர வைத்தனர்.

பின்னர் ,அவர்களிடம் நடத்திய விசாரணையில், தனது மகன்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்வதற்காக கோயமுத்தூர் மாவட்டத்தில் இருந்து ஸ்ரீரங்கம் வந்துள்ளதாக தெரிவித்தனர்.

மகன்கள் இல்லாத  தம்பதியினருக்கு தனது இரு மகள்களையும் நன்றாக படிக்க வைத்து நல்ல இடங்களில் திருமணம் செய்து கொடுத்து வைத்துள்ளதாகவும்,  தற்போது இரு மகள்களோடு நல்ல உறவு இல்லாததனால் தற்கொலைக்கு முயன்றதாக அந்த தம்பதிகள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து அந்த தம்பதிகளை ஆதரவற்றோர் கருணை இல்லத்தில் சேர்த்துவிட்டு, கோயம்புத்தூரில் இருக்கும் அவர்களது இரு மகள்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Previous articleசேலம் ,தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை : சென்னை வானிலை மையம் தகவல்
Next articleதிருவள்ளூர் மாவட்ட சத்துணவு துறையில் 426 பணியிடங்கள்