இரத்த சோகை குணமாக.. இரத்த உற்பத்தி அதிகரிக்க சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!

0
13

நமது உடலில் ஓடும் இரத்த ஓட்டம் சீரக இருக்க வேண்டியது முக்கியம்.இரத்தத்தில் கழிவுகள் தேங்கி இருந்தாலோ அல்லது இரத்தம் குறைவாக இருந்தாலோ அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும்.நமது உடலில் இரத்த ஓட்டம் குறைந்தால் இரத்த சோகை பாதிப்பு உண்டாகும்.எனவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.

1)அத்தி பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.தினமும் உலர் அத்திப்பழம் ஊறவைத்த தண்ணீர் குடித்து வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

2)நாவல் பழத்தை சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.அதேபோல் பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து உட்கொண்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

3)தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் செய்து குடித்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.ஒரு செம்பருத்தி பூவின் இதழ்களை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடித்து குடித்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

4)முருங்கை கீரையை பொடித்து சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.கோழி ஈரல் சாப்பிட்டால் அதிகமாக இரத்தம் ஊரும்.

5)தக்காளி பழத்தை ஜூஸாக அரைத்து குடித்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.விளாம்பழத்தை சாப்பிட்டால் இரத்த விருத்தியாகும்.

6)வாரம் ஒருமுறை ஆட்டிறைச்சி சாப்பிட்டால் இரத்த விருத்தி அதிகரிக்கும்.தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் இரத்தம் ஊரும்.

7)தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.இஞ்சி துண்டுகளை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகமாகும்.

8)இலந்தை பழத்தை சாப்பிட்டால் இரத்தத்தில் இருக்கின்ற கழிவுகள் அகலும்.இரத்த உற்பத்தி அதிகரிக்க இலந்தை பழம் சாப்பிடலாம்.ஆட்டு ஈரலை வறுத்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஊரும்.

9)கேரட்,பீட்ரூட்,ஆப்பிள் ஆகியவற்றை பயன்படுத்தி ஜூஸ் செய்து குடித்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

10)இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

Previous articleஇம்யூனிட்டி பவரை உயர்த்த வேண்டுமா? அப்போ இந்த அட்டகாசமான டிப்ஸை பாலோ பண்ணுங்க!!
Next articleசமையலறையில் வைக்க கூடாத 5 பொருட்கள்..!! மகாலட்சுமியின் வரவை தடுத்து விடும்..!!