அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நலமுடன் வீடு திரும்பியதாக தகவல்

0
185
#image_title

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நலமுடன் வீடு திரும்பியதாக தகவல்

 

அதிமுகவின் முன்னாள் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தவரும் தற்போதைய எம்பியுமான சிவி சண்முகம் நேற்றுக் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

 

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கவனித்து வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று என்று தகவல் வெளியானது.ஆனால் அதை அவர் மறுத்து வழக்கமான பரிசோதனைக்கு தான் சென்றதாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

அவர் உடல்நிலை குறித்து பல விதமான தகவல்கள் வெளியாகி வந்த இந்நிலையில் அவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.