ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர்!! தேடிவரும் போலீசார்!!

0
84
The person who broke the ATM machine!! The police are looking!!
The person who broke the ATM machine!! The police are looking!!

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர்!! தேடிவரும் போலீசார்!!

சென்னையில் உள்ள கோயம்பேட்டில் நபர் ஒருவர் ஏடிஎம்-யில் பணம் எடுத்து விட்டு கார்டு வராததால் அந்த மெஷினை உடைத்துள்ளார்.இது குறித்த சிசிடிவி காட்சி பதிவு கிடைத்துள்ளது.
பொதுமக்கள் அனைவரும் தற்பொழுது ஏடிஎம் கார்டுகளைப் பெரிதளவு பயன்படுத்துகின்றனர்.தங்களுக்கு தேவையான பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் இயந்திரத்தை பயன் படுத்துகின்றனர்.
பெரிய அளவில் பணம் தேவைப்பட்டால் மட்டும் வங்கிகளுக்கு செல்கின்றனர்.இதற்காகவே பல இடங்களில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் ஏடிஎம் கார்டு கட்டாயம் வேண்டும். பின்பு ஏடிஎம் கார்டை இயந்திரத்தின் உள்ளே செலுத்திய பின்னர் தான் பணம் எடுக்க முடியும். ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வரை நம்மால் ஏடிஎம் கார்டை எடுக்க முடியாது. பணம் வந்த பிறகுதான் கார்டை எடுக்க முடியும்.சில சமயங்களில் பணம் எடுக்காமலேயே எடுத்தது போன்று வங்கியில் இருந்து தொலைபேசி எண்ணிற்கு தகவல் வரும்.இன்னும் சில தருணங்களில் ஏடிஎம் கார்டே வராமல் போகும். இவை அனைத்தும் இயந்திரத்தின் தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்பட கூடியதாகும்.

இதனை அறியாமல் சிலர் அந்த இயந்திரத்தை உடைக்க முயலுகின்றனர்.இது போன்ற ஒரு சம்பவம் தான் இப்பொழுது சென்னையில் கோயம்பேட்டில் நடைபெற்றுள்ளது.நபர் ஒருவர் ஏடிஎம்யில் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் கார்டை வைத்துள்ளார்.பின்பு ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வந்துவிட்டது.ஆனால் அந்த ஏடிஎம் கார்டு மட்டும் வரவில்லை இதனால் கோபம் அடைந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துவிட்டார்.இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் நடந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்பு கிடைக்கப்பட்ட சிசிடிவி காட்சியை வைத்து தற்பொழுது அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

author avatar
Parthipan K