Home Astrology இன்றைய (20-10-2021) ராசி பலன்கள்.!! எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகும் நாள்.!!

இன்றைய (20-10-2021) ராசி பலன்கள்.!! எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகும் நாள்.!!

0
இன்றைய (20-10-2021) ராசி பலன்கள்.!! எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகும் நாள்.!!

இன்றைய (20-10-2021) ராசி பலன்கள்

மேஷம்

வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவருடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. விருப்பங்கள் நிறைவேறும் நாள்.

ரிஷபம்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணங்கள் ஈடேறும் நாள்.

மிதுனம்

வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உதவிகள் கிடைக்கும் நாள்.

கடகம்

உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திறமைக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மதிப்புகள் மேம்படும் நாள்.

சிம்மம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். புதிய நபர்களிடம் கருத்துக்களை கூறும்போது கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் சாதகமாக முடியும். முயற்சிகள் கைகூடும் நாள்.

துலாம்

தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவு பெறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், அன்யோன்யமும் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கவலைகள் குறையும் நாள்.

விருச்சிகம்

சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நுட்பமான சிந்தனைகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தோற்றப்பொலிவுகள் மேம்படும் நாள்.

தனுசு

உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். புதிய நபர்களின் மூலம் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் கல்வி தொடர்பான செலவுகள் ஏற்படும். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாள்.

மகரம்

உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சிகள் கைகூடும் நாள்.

கும்பம்

பேச்சுத்திறமைகளின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொடர்பான சிந்தனைகள் மனதில் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தடைகள் குறையும் நாள்.

மீனம்

மனதில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தநிலைகள் மாறும். குடும்ப பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை குறைத்துக்கொள்வதன் மூலம் புத்துணர்ச்சி ஏற்படும். மாற்றங்கள் நிறைந்த நாள்.