நடுவானில் சக பயணிக்கு ஏற்பட்ட ஆபத்து! தமிழிசையின் துரிதமான செயல்! ட்விட்டரில் வைரலாகும் பதிவு!

0
104
Danger to fellow passenger in mid-air! Fast action of Tamilisai! A post that goes viral on Twitter!
Danger to fellow passenger in mid-air! Fast action of Tamilisai! A post that goes viral on Twitter!

நடுவானில் சக பயணிக்கு ஏற்பட்ட ஆபத்து! தமிழிசையின் துரிதமான செயல்! ட்விட்டரில் வைரலாகும் பதிவு!

தமிழிசை சௌந்தர்ராஜன் மருத்துவர் என்பது அனைவரும் அறிந்ததே.இவரது கணவர் சௌந்தர்ராஜன்,இவரும் மருத்துவர் தான்.இவர்கள் முதலில் சென்னையில் வசித்து வந்தனர். தற்பொழுது தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்துள்ளார். அதுமட்டுமின்றி புதுச்சேரி மாநிலத்தின் துணை ஆளுநராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவர் அவ்வபோது தான் மருத்துவர் என்று பொது இடங்களில் நிரூபித்துக் கொண்டே தான் உள்ளார். கடந்த பொங்கல் பண்டிகை அன்று இவர் வீட்டின் முன் நடந்து சென்ற ஒருவர் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தார்.

உடனடியாக தமிழிசை மயங்கி விழுந்தவருக்கு சிகிச்சை அளித்து மருத்துவமனையில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அதே போல தான் தற்பொழுது விமான பயணத்தின் போதும் ஒருவருக்கு மருத்துவம் பார்த்து உள்ளார். இவர் இன்று காலையில் டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானத்தில் பயணித்துள்ளார். நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்தவரின் சக பயணித்தவர் யாரேனும் மருத்துவர் உள்ளீர்களா? என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டதும், உடனடியாக தமிழிசை மயங்கி விழுந்த பயணிக்கு சிகிச்சை அளித்துள்ளார். சிகிச்சை அளித்ததும், மயங்கியவர் கண் விழித்தார்.

கண் விழித்ததும் அவரை அப்படியே விட்டுவிடாமல் , அவருடனே ஹைதராபாத் வரை வந்துள்ளார். அதோடு விடாமல் விமானம் தரையிறங்கியதும் மயங்கியவரை மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினார். இவர் சிகிச்சை அளித்ததை சக பயணிகளில் ஒருவர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அனைவரும் தமிழிசையை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.