வாடிக்கையாளர்களே..!! இன்றே கடைசி..!! தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது..!! முன்கூட்டியே வேலையை முடிச்சிருங்க..!!

Photo of author

By Vinoth

வாடிக்கையாளர்களே..!! இன்றே கடைசி..!! தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது..!! முன்கூட்டியே வேலையை முடிச்சிருங்க..!!

Vinoth

நாடு முழுவதும் ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என்று கூறப்படுகிறது. எனவே, முன்கூட்டியே வங்கி பணிகளை முடித்துக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, வங்கியில் பணியாளர்கள் மற்றும் அதிகாரி இயக்குனர் பதவிகளை நிரப்ப வேண்டும், கிராஜூவிட்டி உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், வாடிக்கையாளர்களின் தாக்குதல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த ஸ்டிரைக்கில் ஊழியர்கள் மட்டுமின்றி, அதிகாரிகள், இயக்குனர் உட்பட அனைத்துப் பணியிடங்களை சேர்ந்தோரும் பங்கேற்கப்பதாக கூறப்படுகிறது. சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமல்ல, தனியார் வங்கிகள், தமிழ்நாட்டில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள், ஊடக வங்கி ஊழியர்களும் இதில் பங்கேற்கவுள்ளதால், போராட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய வங்கி ஊழியர்களின் ஸ்டிரைக் காரணமாக வங்கிப் பணிகள் வரும் சனிக்கிழமை முதலே  பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், சனிக்கிழமை 4-வது சனிக்கிழமை என்பதால், வங்கிகளுக்கு அன்றைய தினம் பொதுவாகவே விடுமுறை அறிவிக்கப்படும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றும் விடுமுறை. இதனைத் தொடர்ந்து, ஸ்டிரைக் மார்ச் 24, 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது. எனவே, வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தங்களது பணிகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.