கடன் தொல்லைகளால் தாயுடன், மகனும் தீக்குளிப்பு! கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு!

0
94
Debt Consolidation Loans - Getting a Debt Consolidation Loan, Even With Poor Credit Great excitement at the Collector's Office!
Debt Consolidation Loans - Getting a Debt Consolidation Loan, Even With Poor Credit Great excitement at the Collector's Office!

கடன் தொல்லைகளால் தாயுடன், மகனும் தீக்குளிப்பு! கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு!

தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 23). தனசேகரின் தாய் பழனியம்மாள் வயது 53. தனசேகரன் தாரமங்கலம் பகுதியில் சுய தொழில் மெடிக்கல் ஒன்றை நடத்தி வருகிறார்.  மெடிக்கல் தொடங்குவதற்கு சிலரிடம் கடனை வாங்கி கடையை திறந்தார்.  சிறிது காலம் நன்றாக செயல்பட்டது. அவர்கள் வாங்கிய கடனை மாதம் தவறாமல் கடன் கட்டி வந்தனர். சில காலம் இப்படியே கழித்து விட்டனர். திடீரென இவர்கள் இருவரும் நேற்று சேலம் அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் இருவரும் அலுவலகத்திற்கு முன்பு தாங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் பெட்ரோலை பிடுங்கி அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இருவரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினார். பின்னர் போலீஸ் விசாரணையில் இதை குறித்து தனசேகரன் கூறினார். போலீசார் விசாரணையின் போது தனசேகரன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மெடிக்கல் வைப்பதற்காகவும் வீடு கட்டுவதற்காகவும் சிலரிடம் முப்பது லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறினார்.

மாதந்தோறும் வழக்கு தவறாமல் பணத்தை வட்டியுடன் சேர்த்து கொடுத்து விட்டேன். மேலும் இவர்களிடம் வாங்கிய தொகையை விட வட்டியுடன் சேர்த்து கொடுத்து விட்டேன். ஆனால் இவர்கள் என் மெடிக்கல் கடைக்கு முன் வந்து வட்டிக்கு மேல் பணத்தைக் கேட்டு மிரட்டினர், அதுமட்டும்மின்றி விட்டிற்கு வந்து என்னையும் என் தாயாரையும் மிரட்டி வருகின்றனர். இதனால் எங்களால் வெளியில் தல கட்ட முடியவில்லை.  வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை. எங்கும் சென்றாலும் அங்கு வந்ததும் பணத்தை கேட்டு மிரட்டுகிறார்கள். இதனால் மனமுடைந்த நாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் தான் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததாக கூறினார். இதனிடையே கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தாய், மகன் மீது அந்த ஊர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
CineDesk