மருந்து மாத்திரை இல்லாமல் டயாலிசிஸ் பிரச்சனை எளிமையாக சரிசெய்யலாம்!! 

0
146
Dialysis problem can be easily fixed without medicine!!
Dialysis problem can be easily fixed without medicine!!

மருந்து மாத்திரை இல்லாமல் டயாலிசிஸ் பிரச்சனை எளிமையாக சரிசெய்யலாம்!!

நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் சிறுநீரகத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது.இதனால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவது அவசியமாகும்.ஆனால் இன்று சிறுநீரக கல்,சிறுநீரக தொற்று,சிறுநீரக செயலிழப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலானோர் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டுவதில்லை என்பது தான்.எனவே மூலிகை வைத்தியத்தை செய்து சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளை குணப்படுத்திக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சிறுகீரை வேர் பொடி – 2 கிராம்
2)சிறுநெருஞ்சில் பொடி – 2 கிராம்
3)நீர்முள்ளி பொடி – 2 கிராம்
4)திரிபலா சூரணம் – 2 கிராம்
5)சுரைக்காய் கொடி சூரணம் – 2 கிராம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 300 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அதில் சிறுகீரை வேர் பொடி,சிறுநெருஞ்சில் பொடி,நீர்முள்ளி பொடி,திரிபலா பொடி மற்றும் சுரைக்காய் கொடி சூரணம் சேர்த்து மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின்னர் இந்த கஷாயத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடிக்கவும்.இவ்வாறு வாரத்தில் 3 முறை குடித்து வந்தால் டயாலிசிஸ் ஏற்படுவது தடுக்கப்படும்.

சிறுகீரை வேர் சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.நெருஞ்சில் மற்றும் நீர்முள்ளி விதை சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

திரிபலா சூரணம் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.சுரைக்காய் கொடி சூரணம் டயாலிசிஸ் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.இந்த மூலிகை கஷாயத்தை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் முழுமையாக வெளியேறும்.

சிறுநீரில் விந்து வெளியேறுதல்,சிறுநீரின் நிறம் மாறுதல்,சிறுநீரக தொற்று,உடலில் நீர்சத்து குறைதல்,உப்பு சத்து அதிகரித்தல் போன்ற காரணங்களால் ஏற்படும் டயாலிசிஸ் உள்ளிட்ட பாதிப்புகள் வராமல் இருக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை கஷாயத்தை செய்து குடித்து வருவது நல்லது.