இதெல்லாம் இவர் பாட்டா? இளையராஜா பாட்டு இல்லையா? ஆச்சரியமூட்டும் இசையமைப்பாளர்

0
45

இதெல்லாம் இவர் பாட்டா? இளையராஜா பாட்டு இல்லையா? ஆச்சரியமூட்டும் இசையமைப்பாளர்

80களில் இளையராஜா மட்டுமே ஆதிக்கம் செலுத்திய காலத்தில் டி.ராஜேந்தர், கங்கை அமரன், சங்கர்- கணேஷ் போன்ற பலரும் 80களில் இசைசாம்ராஜ்யமே நடத்தி உள்ளார்கள். ஆனால் பலர் கங்கை அமரன், சங்கர்- கணேஷ் பாடல்களை கேட்கையில் அவற்றுக்கு இசையமைத்தது இளையராஜா என நாம் இன்னமும் நம்பிகொண்டிருக்கிறோம். சங்கர்- கணேஷ் எனும் அபாரமான இசையமைப்பாளர் மிக இனிமையான பாடல்களை 80களிலும், 90களிலும் கொடுத்தவர்கள்.

சங்கர்- கணேஷ் இரட்டையராக நானூறு படங்களுக்கும், சங்கர் இல்லாமல் கணேஷ் மட்டுமே அறுநூற்றைம்பது படங்களுக்கும் என்று மொத்தம் ஆயிரத்து ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். இது மலைக்க வைக்கும் செய்தி. மிக நன்றாக சென்றுகொன்டிருந்த சங்கர்- கணேஷ் வாழ்வில் மிக மோசமான திருப்பம் 80களின் மத்தியில் வந்தது. இசையமைப்பாளர் கனேஷுக்கு பார்சலில் ஒரு டேப்ரிகார்டர் வந்தது. வாய்ப்பு தேடி இருக்கும் ஒரு பாடகர் தன் குரலை அதில் பதிவு செய்திருப்பதாகவும், அதை கேட்கசொல்லியும் அப்பார்சலில் இருந்த லெட்டரில் எழுதபட்டு இருந்தது. அதை நம்பி அந்த டேப்ரிகார்டர் பட்டனை அழுத்துகையில் அதில் இருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்து கணேஷின் கண்பார்வையும், கைவிரல்களும் பறிபோனது.

பட்டகாலிலே படும் கதையாக 1991ல் ராஜிவ் காந்தியை கொன்ற குண்டுவெடிப்பில் மீண்டும் கணேஷ் பாதிக்கபட்டார். அன்று ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் சங்கர்- கணேஷ் தான் மேடையில் பாடல்கள் பாடி கச்சேரி நடத்தி கொண்டிருந்தார்கள். எப்படியோ இன்று 27 ஆண்டுகள் கழித்து மருத்துவ தொழில்நுட்பம் மிக முன்னேறியதால் செயற்கை கருவிழி மூலம் சென்னை அகர்வால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காப்ட்டு இசைஅமைப்பாளர் கணேஷின் கண்பார்வை சமீபத்தில் முழுக்க திரும்பி உள்ளது. இது இன்னார் இசையமைத்த பாடல் என்பதை அறியாமலேயே சங்கர்-கணேஷின் பற்பல பாடல்களைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். மென்னுணர்வுப் பாடல்களாயினும் சரி, வெறியாட்டப் பாடல்களாயினும் சரி, சங்கர்-கணேஷ் இசைத்தவற்றில் சிறந்த எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது..

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்..

நான் உன்னை நினைச்சேன், நீ என்னை நினைச்சே…

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்…

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…

பொன் அந்தி மாலைப்பொழுது..பொங்கட்டும் இன்ப நினைவு..”

கொண்டச்சேவல் கூவும் நேரம்’

ரெண்டு கண்ணம் சந்தன கிண்ணமும்,

மேகமே மேகமேவும்… என பல பரப்பளப்பா பாடல்களுக்கு இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைத்து வெற்றி நாய்கனாக இசையை உள்ளத்தில் பள்ளம் வந்த காலமும் உண்டு.

சங்கர் – கணேஷில் இருக்கும்  இறந்தப்பிறகும் தனது பெயரில் இருக்கும் சங்கரை இசையமைப்பாளர் கணேஷ் அவர்கள் இன்னும் எடுக்கவேயில்லை. உங்களைப் பொறுத்தவரைக்கும்தான் சங்கர் இல்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் சங்கர் என்னோடுதான் இருக்கிறார் என்று இப்போதும் இவரை சங்கர் கணேஷ் என்றே அழைக்க வேண்டும் என்கிறார், இசையமைப்பாளர் கணேஷ்.

 

 

author avatar
Parthipan K