இந்த தாயத்தை கட்டிக் கொண்டாள் போதும்? தீய சக்திகள் அண்டாது!!!

0
131
  • இந்த தாயத்தை கட்டிக் கொண்டாள் போதும்? தீய சக்திகள் அண்டாது!!!

துளசி இலையின் நன்மைகளை பற்றி நாம் அனைவருக்கும் தெரிந்தவை ஒன்றே.அந்த துளசி செடியிலுள்ள வேர் தான் நமக்கு இப்பொழுது தேவைப்படுகிறது. பூமியில் வாழக்கூடிய துளசி செடியின் அடியில் இருக்கும் சின்ன வேரை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். ஜல்லிவேரை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆணிவேரை எடுக்க வேண்டாம். ஆணிவேருக்கு பக்கவாட்டில் கிளை வேர்கள் நிறைய இருக்கும் அல்லவா அதிலிருந்து ஒரு சிறிய துண்டு அறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் விரல்களாலேயே உடைத்தால் அந்த வேர் சுலபமாக கைக்கு வந்துவிடும். நகத்தால் கிள்ளி வேரை எடுக்காதீங்க.

இந்த வேரை வீட்டுக்கு கொண்டு வந்து மஞ்சள் தண்ணீரால் சுத்தமாக கழுவ வேண்டும்.வேரை நிழலிலேயே ஈரம் போக நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள். இந்த வேரின் நேர்மறை ஆற்றல் பல மடங்கு பெருக இதோடு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து கொள்ளுங்கள்.பிறகு ஒரு சிறிய வெள்ளி தாயத்தில் போட்டு தாயத்தை மூடி பூஜையறையில் வைத்து குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு தாயத்தை ஒரு சிவப்பு நிற நூலில் கோர்த்து உங்களுடைய கை அல்லது கழுத்து இப்படி இந்த இரண்டு இடங்களில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். இந்த தாயத்தை இடுப்பில் கட்ட வேண்டாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

திருமணமாகியிருந்தால் இந்த தாயத்தை ஒரு செயின்களில் கோர்த்து கூட கழுத்தில் மாட்டிக் கொள்ளலாம்.இந்த தாயத்து உங்களுடன் எப்போதும் இருந்தால் உங்களுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாகும். 48 நாட்கள் இந்த தாயத்தை அணிந்து பாருங்கள் வித்தியாசத்தை நீங்களே உணருவீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இதை செய்து பாருங்க நிச்சியமாக பலன் கிடைக்கும்.

author avatar
Parthipan K