நுரையீரல் பிரச்சனை இருக்கிறதா? தினமும் இந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள்!

0
112

நுரையீரல் பிரச்சனை இருக்கிறதா? தினமும் இந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள்!

நம் உடலில் மிக முக்கியமானது மற்றும் இரட்டை உறுப்பு என்று சொல்லப்படுகிறது நுரையீரல் தான். நாம் சுவாசிப்பதற்கு பயன்படுகிற உறுப்பு நம்முடைய உயிர் வாழ்வ்தற்கு சுவாசம் எவ்வளவு முக்கியம் என்று நமக்குத் தெரியும். அந்த சுவாவசத்தை முறைப்படுத்துவதும் ஆக்சிஜனை பம்ப செய்து உடலுக்கு முறையாக அனுப்பும் வேலையையும் இந்த நுரையீரல் தான் செய்கிறது.நுரையீரல் ஆரோக்கியத்துக்கு தண்ணீர் மிகவும் அவசியம். நம்முடைய உடலின் வெளிப்புறத்தை நீரேற்றமாக வைத்திருக்க எப்படி தண்ணீர் உதவுகிறதோ அதேபோல நம்முடைய உடலின் உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாகவும் கழிவுகள் இல்லாமல் சுத்தப்படுத்தவும் தண்ணீர் உதவுகிறது.

தண்ணீர் நம்முடைய நுரையீரலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தண்ணீர் அதிகம் குடிக்கும்போது நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்வதோடு சளித் தொல்லை ஏற்படுவதைத் தடுக்கும்.

மேலும் மாதுளை பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றை சரிசெய்ய உதவுகிறது.

குறிப்பாக, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் அழற்சி உள்ளவர்கள் மாதுளை பழத்தை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. நுரையீரலுக்கு மிகவும் நல்லது. திளமும் ஒரு கைப்பிடியளவு மாதுளை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியமே இருக்காது என்று காலங்காலமாக சொல்வதைக் கேட்டிருப்போம். அது உண்மை தான். குறிப்பாக எல்லோரும் சாப்பிடக் கூடிய ஒரு பழம். இதில் நார்ச்சத்து அதிகம். அதேசமயம் மிக மிகக் குறைந்த கலோரியும் அதிக நார்ச்சத்துக்கள் கொண்ட பழம்.தினமும் ஆப்பிளை சாப்பிட்டு வருகிறவர்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினை வரவே வராது என்று பல ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

இஞ்சி என்பது காலங்காலமாக உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தக் கூடிய மூலிகைப் பொருள்.இஞ்சியில் உள்ள ஆன்டி – இன்பிளமேட்டரி பண்புகள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அதோடு நுரையீரலில் தேங்கியிருக்கும் இறுகிய நாள்பட்ட நெஞ்சு சளியைக் கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது. மேலும் நுரையீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் இஞ்சி உதவியாக இருக்கிறது.

மேலும் மஞ்சள் ஆன்டி – ஆக்சிடண்ட், ஆன்டி – பாக்டீரியல் மற்றும் ஆன்டி – வைரல் பண்புகள் அதிகம் கொண்டது. அதோடு மஞ்சளில் இருக்கும் குர்குமின் ஆகியவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. அதனால் தான் சளி போன்ற மூச்சுக்குழல் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும்போது நீராவி பிடித்தலில் நம்முடைய முன்னோர்கள் மஞ்சள் சேர்த்துக் கொண்டனர். நாம் மாத்திரை வாங்கி பயன்படுத்துகிறோம்.

அதை தவிர்த்துவிட்டு மஞ்சள் சேர்த்து நீராவி பிடித்தல், மஞ்சளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது போன்றவற்றால் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். இந்த உணவு முறைகளை பயன்படுத்துவதன் மூலம் நுரையீரல் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக காணப்படலாம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றார்கள்.

 

 

 

 

author avatar
Parthipan K