நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள்

நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள்

நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள் சென்னை பூங்கா நகர் ராசப்பா செட்டி தெருவில் இன்று அதிகாலை நகை பட்டறை உரிமையாளர்கள் சலாவுதீன் , சக்ஜத் ஆகியோரை நிர்வாணமாக்கி கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கி 400 கிராம் நகைகளுடன் இரண்டு ஊழியர்கள் ஓட்டம். கேஸ் சிலிண்டர் ஐயும் திறந்து வைத்து விட்டு சென்றுள்ளனர்.ரோந்து சென்ற போலீசார் நகை பட்டறை உரிமையாளர்களை தாக்கிவிட்டு, தப்பிய சுகந்தர்ராய்(27) என்பவரை விரட்டிப் பிடித்தனர். அவரிடமிருந்து 400 கிராம் தங்கம் … Read more

தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும் – பாடலாசிரியர் பா விஜய் பேச்சு 

தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும் - பாடலாசிரியர் பா விஜய் பேச்சு 

தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும் – பாடலாசிரியர் பா விஜய் பேச்சு சூரியனைப் பார்த்தால் தாமரை மலரும் ஆனால் தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் திறக்கப் போவது பேனா மூடி அல்ல. மூடிய திட்டங்களை எல்லாம் திறந்து வைக்கக்கூடிய பேனா என திருவண்ணாமலையில்  நடந்த விழாவில் திரைப்படப் பாடலாசிரியர் பா. விஜய் பேசியுள்ளார். திருவண்ணாமலை அண்ணா சிலையின் முன்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 70 பிறந்தநாள் பொதுக்கூட்டம் … Read more

பாம்பன் பகுதியில் தடை செய்யப்பட்ட ஷேட்லைட் போன் வைத்திருந்த நபர் கைது!!

பாம்பன் பகுதியில் தடை செய்யப்பட்ட ஷேட்லைட் போன் வைத்திருந்த நபர் கைது!!

பாம்பன் பகுதியில் தடை செய்யப்பட்ட ஷேட்லைட் போன் வைத்திருந்த நபர் கைது!! இராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில் தடை செய்யப்பட்ட ஷேட்லைட் போன் வைத்திருந்தாக கூறி ஒருவரை கைது செய்த போலிசார் அவரிடமிருந்து போனை பறிமுதல் செய்து தொடர் விசாரனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் நேற்று இரவு ஷேட்லைட் போன் சிக்னல் ஒன்று திடீரென பதிவாகி உள்ளதாக வந்த தகவலையடுத்து. அந்த பகுதிக்கு சென்ற போலீசார் சிக்னல் … Read more

ரூ 3.60 கோடி சொத்து வரி செலுத்த கூறி சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க மறுப்பு!!

ரூ 3.60 கோடி சொத்து வரி செலுத்த கூறி சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க மறுப்பு!!

ரூ 3.60 கோடி சொத்து வரி செலுத்த கூறி சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க மறுப்பு!! சென்னை ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய சொத்துவரியில் ரூ. 35 லட்சத்தை நான்கு வாரத்தில் செலுத்த வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அதன் பின் 6 வாரத்துக்குள் புதிதாக சொத்து வரி கணக்கிட்டு புதிய நோட்டீஸ் அனுப்ப மாநகராட்சிக்கு உத்தரவு. கடந்த 1998 முதல் 2018 வரை ரூ.3.60 கோடி சொத்துவரி செலுத்த சென்னை மாநகராட்சி … Read more

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோடர் பழங்குடியின மக்களுக்கு தனி வார்டு – மா சுப்ரமணியம்!!

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோடர் பழங்குடியின மக்களுக்கு தனி வார்டு - மா சுப்ரமணியம்!!

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோடர் பழங்குடியின மக்களுக்கு தனி வார்டு – மா சுப்ரமணியம்!! உதகை அருகே இத்தலார் பகுதியில் புதிய மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா.  உதகையில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் ஆய்வு என பல்வேறு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இத்தலார் பகுதியில் ஆய்வுவிற்க்கு சென்ற போது மருத்துவம் சார்ந்த பல்வேறு … Read more

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற கோடியம்மன் ஆலய பச்சைக்காளி பவளக்காளி திருவிழா!! கோலாகல கொண்டாட்டம்!!

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற கோடியம்மன் ஆலய பச்சைக்காளி பவளக்காளி திருவிழா!! கோலாகல கொண்டாட்டம்!!

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற கோடியம்மன் ஆலய பச்சைக்காளி பவளக்காளி திருவிழா!! கோலாகல கொண்டாட்டம்!! விஜயாலய சோழனால் கட்டப்பட்டு சோழர் நாயக்கர் மராட்டியர் போன்ற மன்னர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டதும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களில் பழமை வாய்ந்ததுமான அருள்மிகு கோடியம்மன் ஆலயம் ,தஞ்சாவூரில் எல்லைப் பகுதியில் உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது. மகாவிஷ்ணு அம்சமான பச்சை காளியும் சிவபெருமானின் அம்சமான பவளக்காளியும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி காளியாட்டம் ஆடும் நிகழ்ச்சி ஆயிரம் … Read more

6 முதல் 9 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இம்மாதம் ஆண்டு இறுதி தேர்வு!!

6 முதல் 9 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இம்மாதம் ஆண்டு இறுதி தேர்வு!!

6 முதல் 9 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இம்மாதம் ஆண்டு இறுதி தேர்வு!! கடும் வெயில் காரணமாக ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வை வரும் 11ம் தேதியிலிருந்து துவக்கி ஒரு வாரத்தில் முடிப்பதற்கு கல்வித் துறை ஏற்பாடு செய்திருக்கிறது. மாநிலம் முழுவதும் ஆறு முதல் , ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இம்மாதம் 24 ஆம் தேதி துவங்கி, மாத இறுதிவரை ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்த ஏற்கனவே … Read more

30 அடி தங்கத் தேரில் உலா வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமி!! 

30 அடி தங்கத் தேரில் உலா வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமி!! 

30 அடி தங்கத் தேரில் உலா வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமி!! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவத்தை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று வசந்த உற்சவம் கோலாகலமாக தொடங்கிய நிலையில், 2ம் நாளான இன்று ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்ப சாமி 30 அடி தங்கத் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். … Read more

தொழில்நுட்ப கோளாறு!! 137 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

தொழில்நுட்ப கோளாறு!! 137 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

தொழில்நுட்ப கோளாறு!! 137 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!! பெங்களூருவில் இருந்து வாரணாசி நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தெலுங்கானாவில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தகவலின் படி , பெங்களூரில் இருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானம் 137 பயணிகளுடன் இன்று காலை 6.15 மணியளவில் தெலுங்கானாவில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. அனைத்து பயணிகளும் … Read more

திருச்சூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தேவாலயத்தின் மண்டபம் இடிந்து விழுந்து விபத்து!!

திருச்சூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தேவாலயத்தின் மண்டபம் இடிந்து விழுந்து விபத்து!!

திருச்சூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தேவாலயத்தின் மண்டபம் இடிந்து விழுந்து விபத்து!! கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள குன்னம்குளத்தில் ஆர்தட் செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் சிரியன் தேவாலயத்தில் புதிதாக 20 லட்சரூபாய் செலவில் இரும்புத்துண்கள் அமைத்து. ஓடுகள் வேயப்பட்டு கட்டப்பட்டு வந்த மண்டபம் திடீரென இடிந்து விழுந்தது. விபத்து ஏற்படும் போது அங்கு பணியாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஓடுகளின் பாரம் தங்காமல் இரும்புத்துண் சரிந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் ஓடுகள் உடைந்து சேதமானது .