பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான தேரை 45 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி!

The work of repairing the toad belonging to Palani Murugan temple at a cost of 45 lakh rupees!

பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான தேரை 45 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி! பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான தேரை, 45லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தைப்பூசத் திருவிழாவிற்குள் பணிகளை நிறைவு செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரர்சையாக கொண்டாடப்படும். இதில் தைப்பூசம், வைகாசி விசாகம் திருவிழாக்களின் போது பழனி நான்கு ரதவீதிகளிலும், … Read more

டாலரை ரூபாயாக மாற்றுவதாக கூறி ஆயிரக்கணக்கில் திருடிய ஈரான் தம்பதியினர் கைது!

Arrested Iranian couple who stole thousands by claiming to convert dollars to rupees!

தமிழ்நாட்டில் அஞ்சல் நிலையங்களே டார்கெட்., டாலரை ரூபாயாக மாற்றுவதாக கூறி ஆயிரக்கணக்கில் திருடிய ஈரான் தம்பதியினர் கைது. ஈரான் நாட்டை சேர்ந்த கூதர்சி மஹ்தி (36) மற்றும் அஹ்மதி மினோ (39) ஆகிய இருவரும் கனவன் மனைவி இவர்கள் கடந்த ஜூலை மாதங்களுக்கு சுற்றுலா விசா பெற்றுக்கொண்டு இந்தியாவில் டெல்லி மாநிலத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றி வந்துள்ளனர். தொடர்ந்து., இருவரும் கையில் டாலரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் பல்வேறு … Read more

ஓசூர் அருகே ஏரியில் முகாமிட்ட 50 காட்டு யானைகள் : வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை!

50 wild elephants camped in the lake near Hosur: Forest department took serious action to drive them to the forest area!

ஓசூர் அருகே ஏரியில் முகாமிட்ட 50 காட்டு யானைகள் : வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை! கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தமிழக வனப்பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, ஜவளகிரி, ஓசூர், ஊடேதுர்க்கம், தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிகளில் முகாமிட்டு சுற்றி திரிகிறது. இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 50 காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அங்கிருந்து ஊடே … Read more

திருத்தணியில் மது போதையில் நண்பர்களிடையே மோதல்! கத்திக்குத்தால் ஒருவர் உயிரிழப்பு!

Clash between friends drunk in Tiruthani! One of them died!

திருத்தணியில் மது போதையில் நண்பர்களிடையே மோதல்! கத்திக்குத்தால் ஒருவர் உயிரிழப்பு! சென்னை அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அனுமந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெகன் மற்றும் ஸ்டாலின் நகர் பகுதியைச் சேர்ந்த குமரேசன், ஆகிய இருவரும் நண்பர்கள். கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி இவர்கள் இருவரும் திருத்தணி பஸ் நிலையம் அருகில் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டு கையில் இருந்த … Read more

40 நாட்டு வெடிகுண்டு 40 அருவாள்கள் மற்றும் துப்பாக்கியுடன் பிரபல ரவுடி கைது! மற்றொரு ரவுடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது அம்பலம்!

40 national bomb 40 knives and a famous raider arrested with a gun! Ambalam plotting to kill another raider!

40 நாட்டு வெடிகுண்டு 40 அருவாள்கள் மற்றும் துப்பாக்கியுடன் பிரபல ரவுடி கைது! மற்றொரு ரவுடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது அம்பலம்! சென்னை கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் போலீசார் நேற்று இரவு கொடுங்கை யூர் குப்பைமேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சொகுசு கார் ஒன்று கொருக்குப்பேட்டை பகுதியில் இருந்து கொடுங்கையூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அதனை வழிமறித்த போலீசார் சோதனை செய்தனர். கார் டிக்கியில் சோதனை செய்த போது அதில் நாட்டு … Read more

மூன்று அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ள மாற்றுதிறன் பெண் ஓவியத்தில் சாதனை

Omalur

மூன்று அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ள மாற்றுதிறன் பெண் ஓவியத்தில் சாதனை ஓமலூர் அருகே தாரமங்கலம் ஒன்றிய குட்கிரமத்தை சேர்ந்த மூன்று அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ள மாற்றுதிறன் பெண் ஓவியத்தில் சாதனை படைத்து வருகிறார். தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று தாய் தந்தையும், கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்காவில் உள்ள தாரமங்கலம் ஒன்றியத்தில் தெசவிளக்கு கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள மாட்டையாம்பட்டி … Read more

காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் 4 தங்கப் பதக்கம் வென்ற குடியாத்தம் வீரர் ஜெயமாருதி

குடியாத்தம் ஜெயமாருதி

காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் 4 தங்கப் பதக்கம் வென்ற குடியாத்தம் வீரர் ஜெயமாருதி வேலூர் மாவட்டம், குடியாத்தம் நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் குடியாத்தம் வீரர் ஜெயமாருதி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். குடியாத்தத்தை அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிய வலுதூக்கும் வீரர் மூர்த்தியின் மகன் ஜெயமாருதி(17). இவர் வேலூர் விஐடியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2 – ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 12 வயதிலிருந்தே வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்று … Read more

அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே இங்கு செல்லமுடியும்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

You can go here only if you have a permit! Action order issued by the District Collector!

அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே இங்கு செல்லமுடியும்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! டிசம்பர் 6 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.அதனையொட்டி திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மாக தீபம் ஏற்றப்படும்.அதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மாகா தீபம் பெரிய அளவில் கொண்டாடப்படுவதால் ஏராளாமான … Read more

உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி

உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி

உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர் வில்லிவாக்கத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பவித்திரா, வயது 26 என்பவர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: தனது தம்பியின் நண்பருக்கு தெரிந்த சபேஷ் என்பவர், உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவதாக கூறி அடையாள அட்டையை காண்பித்து கடந்த மார்ச் மாதம் எங்களிடம் … Read more

ஜல்ஜீவன் திட்டத்திற்கு ₹1000 கொடுத்தால் தான் வீட்டிற்கு தண்ணீர் இணைப்பு! ஊராட்சி நிர்வாகிகளின் வசூல் வேட்டை அம்பலம்!

Jaljeevan Project ₹ 1000 for home water connection! Collection of Panchayat Administrators Exposed!

ஜல்ஜீவன் திட்டத்திற்கு ₹1000 கொடுத்தால் தான் வீட்டிற்கு தண்ணீர் இணைப்பு! ஊராட்சி நிர்வாகிகளின் வசூல் வேட்டை அம்பலம்! கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு கோட்டை தெரு பகுதியில் மதிய அரசு திட்டத்தின் மூலம் தமிழக அரசு இணைந்து ஜல்ஜீவன் திட்டம் என்ற பெயரில் வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி வருகின்றனர். இந்த சேவையானது முற்றிலும் இலவசம் வழங்கக்கூடிய ஒன்று.இதில் வீட்டிற்கு தனியாக இணைப்பு வேண்டுவோர் ₹1000 ரூபாய் கொடுத்தால் … Read more